Advertisment

தடுப்பூசி செலுத்துவதில் இருக்கும் சவால்கள்.. இரண்டாவது டோஸ் போடும் பணியை எப்படி அதிகரிப்பது?

India 100 crore Covid vaccination how to boost coverage of second dose Tamil News இந்தியாவில் இருந்து நிகழ் நேரத் தரவு, இறப்பைத் தடுப்பதில் தடுப்பூசி செயல்திறன் முதல் டோஸுக்குப் பிறகு 96.6%-ஆகவும் மற்றும் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 97.5 சதவீதமாகவும் மேம்பட்டது.

author-image
WebDesk
New Update
India 100 crore Covid vaccination how to boost coverage of second dose Tamil News

India 100 crore Covid vaccination how to boost coverage of second dose Tamil News

India 100 crore Covid vaccination how to boost coverage of second dose Tamil News : இந்தியா 100 கோடி தடுப்பூசி அளவுகளின் மைல்கல்லை எட்டியது, ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார முயற்சியாக இருந்தாலும், வயது வந்தோருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடுவதற்கு ஏறத்தாழ 88 கோடி கூடுதல் டோஸ்களை வழங்குவதற்குத் தேவையான வேகத்தை நாடு தக்கவைப்பது இப்போது மிக முக்கியமானது.

Advertisment

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 59.29 லட்சம் தினசரி டோஸ் வழங்கப்பட்டது. இது செப்டம்பரில் 78.69 லட்சம் டோஸாக உயர்ந்தது. இருப்பினும், அக்டோபர் மாதம் முதல் 20 நாட்களில், சராசரி தினசரி தடுப்பூசிகள் 46.68 லட்சம் அளவுகளாகக் குறைந்துள்ளன.

அக்டோபரில் தினசரி தடுப்பூசிகள் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக, வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 10.85 கோடி கோவிட் -19 தடுப்பூசி அளவுகள் மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தன.

கடந்த திங்களன்று, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டத்தில், வேகத்தை மேம்படுத்தவும், தடுப்பூசி இயக்கத்தைத் துரிதப்படுத்தவும் மாநிலங்களை அறிவுறுத்தினார்.

publive-image

கடுமையான நோய், மருத்துவமனை மற்றும் இறப்புக்கு எதிராகத் தடுப்பூசிகள் குறிப்பிடத்தக்கப் பாதுகாப்பை வழங்குவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் நிர்வாகம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வயதினருக்கு மிகவும் முக்கியமானதாக மாறியது. இருப்பினும், இந்த ட்ரைவ் தொடங்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகும், 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதத்தினர் இன்னும் முதல் டோஸைப் பெறவில்லை. 60-க்கும் மேற்பட்ட வயதினரில் கிட்டத்தட்ட 10.62 கோடி நபர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டது மற்றும் 6.20 கோடி பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு மிகப்பெரிய சவால், இரண்டாவது டோஸ் கவரேஜ் அதிகரிக்க வேண்டும் என்பதுதான். மத்திய அரசு கடந்த திங்களன்று மாநிலங்களுக்கு "தகுதியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான பயனாளிகள், தங்கள் இரண்டாவது டோஸைப் பெறவில்லை" என்று கூறியதுடன், டோஸை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியது.

நாட்டின் வயது வந்தோருக்கான மக்கள்தொகையில் 74 சதவிகிதம் முதல் டோஸைப் பெற்றுள்ளது மற்றும் 31 சதவிகிதம் மட்டுமே இரண்டு டோஸையும் பெற்றுள்ளது.

குஜராத் (50%), கர்நாடகா (44%), ராஜஸ்தான் (36%), மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் (32%) ஆகிய பெரிய மாநிலங்களில், இந்த ஐந்து மட்டுமே இரண்டாவது தடுப்பூசி கவரேஜ் தேசிய சராசரியை விட அதிகமாக கொண்டுள்ளது. உத்தரபிரதேசம் (18%), பீகார் (21%), மற்றும் மேற்கு வங்கம் (26%) ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கியுள்ளது.

publive-image

இரண்டாம் கட்ட தடுப்பூசி கவரேஜை அதிகரிக்க மாநிலங்களுடன் இணைந்து சிறப்பு இயக்கங்களை வகுப்பதில், அடுத்த கட்ட தடுப்பூசி உந்துதல் கவனம் செலுத்தும் என்று அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால் இந்தியாவில் இருந்து நிகழ் நேரத் தரவு, இறப்பைத் தடுப்பதில் தடுப்பூசி செயல்திறன் முதல் டோஸுக்குப் பிறகு 96.6%-ஆகவும் மற்றும் இரண்டாவது டோஸுக்குப் பிறகு 97.5 சதவீதமாகவும் மேம்பட்டது.

இந்தியாவின் தடுப்பூசி கவரேஜ் அதிகரிக்கும்போது, ​​2021-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில், உள்நாட்டுத் தேவையை ஆராய்ந்த பிறகு, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். வெளிநாடுகளின் அமைச்சகம் பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளின் படி ஏற்றுமதி செய்யப்படக்கூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையின் விவரங்களைத் தெரிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

publive-image

இந்திய அரசு ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட Biological E-உடன் முன்கூட்டிய ஆர்டரை வழங்கியுள்ளது. இருப்பினும், வட்டாரங்கள் கூறுகையில், நிறுவனம் நவம்பரில் மட்டுமே அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "எனவே, ஏற்றுமதிக்காக ஒதுக்கிவிடக்கூடிய அளவுக்கு அதிகமான அளவுகள் இருக்கும் சூழ்நிலை இருக்கும்" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

publive-image

அடுத்த கட்டத்தில், குழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசிகளை நாடு தொடங்கும். எப்படி இருந்தாலும், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டத்தை ஒரு கட்டமாக வெளியிடுவதற்கு முன்பு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உயர் மட்டங்களில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கோவிட் -19-க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த உயர் சக்தி வாய்ந்த தேசிய நிபுணர் குழு மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆகியவை இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து அறிவியல் தரவைப் பார்க்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment