Advertisment

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை: 1967ம் ஆண்டு நாது லாவில் என்ன நடந்தது?

லடாக் எல்லையில் வன்முறை ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், சீன வீரர்களுடனான மோதலில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை என்பதால் பலர் நிம்மதி அடைந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india china border dispute, india china border, india china border issues, இந்தியா சீனா எல்லைப் பிரச்னை, 1967 ஆம் ஆண்டில் என்ன நடந்தது, Nathu la, india china lac, india china news, india china clash, tamil indian express explained

india china border dispute, india china border, india china border issues, இந்தியா சீனா எல்லைப் பிரச்னை, 1967 ஆம் ஆண்டில் என்ன நடந்தது, Nathu la, india china lac, india china news, india china clash, tamil indian express explained

லடாக் எல்லையில் வன்முறை ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், சீன வீரர்களுடனான மோதலில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை என்பதால் பலர் நிம்மதி அடைந்தனர்.

Advertisment

நிச்சயமாக இந்த மரணங்கள் சுட்டுக் கொல்லப்படுவதை விட மிருகத்தனமாக ஆக்குகிறது என்றாலும், இது இரு அணுசக்தி அண்டை நாடுகளுக்கிடையில் துப்பாக்கிகள், ஹோவிட்சர்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் இயக்குதல் தவிர்க்கப்படலாம் என்ற நம்பிக்கையை தருகிறது.

இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலின் வரலாறு அத்தகைய நம்பிக்கைகளில் சிதறடிப்புகளை ஏற்படுத்துகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடைசி இராணுவ மோதல் 1967 செப்டம்பரில் நாது லாவில் நடந்தது. பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் போர் விமானங்களின் அச்சுறுத்தல்கள் வரை மோதல் அதிகரிப்பதற்கு முன்பு, இரு படைகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் இறுதியில் 88 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த மோதலுக்கு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பு இந்தியா தரப்பு மூன்று அடுக்கு முட்கம்பிகளால் எல்லைக்கு வேலி அமைக்க முடிவு செய்திருந்தது. ஆகஸ்ட் 20, 1967 அன்று பணிகள் தொடங்கப்பட்டன.

ஆகஸ்ட் 23-ம் தேதி சீர போர் உடையில் 75 பேர் பயோனெட்டுகள் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளை ஏந்தி, நாது லாவை நோக்கி நீண்ட வரிசையில் மெதுவாக முன்னேறி, எல்லையில் நிறுத்தப்பட்டனர். தொப்பியில் ஒரு சிவப்பு இணைப்பு மூலம் அடையாளம் காணக்கூடிய கம்யூனிஸ்ட் அரசியல் கட்சி தலைவர் மற்றும் சில ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் - ஒரு சிவப்பு புத்தகத்திலிருந்து கோஷங்களை வாசித்தார்கள். அந்த கட்சியின் மற்றவர்கள் அவருக்குப் பின் கோஷமிட்டனர்.

இந்திய துருப்புக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தன. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சீனர்கள் பின்வாங்கினர். ஆனால், அவர்கள் பின்னர் திரும்பி வந்து தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

செப்டம்பர் 5ம் தேதி, முள்வேலியை சுருள் கம்பி வேலியாக மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைவர் உள்ளூர் காலாட்படை பட்டாலியன் கம்மாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் ராய் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு அந்த வேலை நிறுத்தப்பட்டது.

இருப்பினும் செப்டம்பர் 7ம் தேதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனால் கோபமடைந்த சுமார் 100 சீன வீரர்களை விரைந்து வந்ததால் ஒரு சச்சரவு ஏற்பட்டது. ஜாட்ஸ்களால் வீழ்த்தப்பட்டதால் சீனர்கள் கல் வீசுவதை ஈடுபட்டனர். இந்தியர்களும் அதே போல பதிலடி கொடுத்தனர்.

செப்டம்பர் 10-ம் தேதி சீனத் தூதரகம் மூலம் சீனர்கள் ஒரு எச்சரிக்கையை அனுப்பினர்: “சீன அரசாங்கம் இந்திய அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கிறது: சீன எல்லை பாதுகாப்பு துருப்புக்கள் சீனா-சிக்கிம் எல்லையில் நிலைமை வளர்ந்து வருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்திய துருப்புக்கள் தொடர்ந்து ஆத்திரமூட்டும் ஊடுருவல்களை மேற்கொண்டால், அனைத்து கடுமையான விளைவுகளுக்கும் இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தது.

ராணுவத் தளபதி செப்டம்பர் 11-ம் தேதி வேலி அமைத்து முடிக்க உத்தரவிட்டார். அன்று, பணிகள் தொடங்கியதும், சீனர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைவர் தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்க வந்தனர். லெப்டினென்ட் கர்ணல் ராய் சிங் அவர்களுடன் பேச வெளியே சென்றார்.

அப்போது திடீரென்று சீனர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிங் தரையில் விழுந்து காயமடைந்தார்.

அவர்களின் ராணுவ அதிகாரி அடியைப் பார்த்து, காலாட்படை பட்டாலியன் சீன நிலையத் தாக்கியது. ஆனால், அவர்களில் இரண்டு அதிகாரிகள் உள்பட பலத்த உயிர்சேதத்துக்கு ஆளானார்கள். அவர்கள் இருவருக்கும் வீரத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டன. திறந்த வெளியில் இருந்த இந்த வீரர்கள் சீன இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

இந்தியர்கள் பீரங்கித் தாக்குதல் மூலம் பதிலளித்தனர். மேலும் அருகிலுள்ள ஒவ்வொரு சீன நிலைகளையும் வீழ்த்தினர்.

சண்டையின் ஆரம்பத்தில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையை விட பல சீனர்கள் கடுமையான பீரங்கி தாக்குதல்களில் இறந்தனர்.

இந்தியாவின் வலுவான பதிலடியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனர்கள், விமானங்களை கொண்டு வருவதாக அச்சுறுத்தினர். இந்தியர்கள் பின்வாங்க மறுத்தபோது, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா இந்த திட்டங்களை மறுத்தது.

இந்தியா ராணுவ ரீதியாக அனுப்பிய செய்தியில் செப்டம்பர் 12-ம் தேதி சீனர்களுக்கு ஒரு குறிப்பை வழங்கியது. அதில் செப்டம்பர் 13-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சிக்கிம்-திபெத் எல்லையில் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை அறிவிப்பை வழங்கியது. அது நிராகரிக்கப்பட்டது. ஆனால், நிலைமை பெரும்பாலும் 14ம் தேதி வரை அமைதியாக இருந்தது.

செப்டம்பர் 15ம் தேதி சீனர்கள் இந்திய வீரர்களின் உடல்களை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒப்படைத்தனர். அவர்கள் சீன-இந்திய நட்பைப் பாதுகாக்கும் நலனுக்காக செயல்படுவதாகக் கூறினர்.

அக்டோபர் 1 ம் தேதி, சோ லாவில் மற்றொரு மோதல் வெடித்தது, ஆனால் இந்தியர்கள் மீண்டும் சீனர்களை விரட்டினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India China Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment