Krishn Kaushik
India-China standoff : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உண்மையான எல்லைக் கோட்டிற்கு அருகில் உள்ள கொங்கா லா அருகே அமைந்துள்ள சாங் சென்மோ பள்ளத்தாக்கில் உள்ள ஹாட்ஸ்பிரிங்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 இந்தியர்கள் மற்றும் குறைந்தது 4 சீன ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு கால்வான் பள்ளத்தாக்கிற்கு தென்கிழக்கு பகுதியில் நடைபெற்றது. 1962ம் ஆண்டு ஏற்பட்ட போருக்கு முன்னும் பின்னும் கூட இந்தியாவின் ரோந்து புள்ளி 15-ல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எப்போதும் தாக்குதலுக்கான தளமாக அது இருந்ததில்லை.
ஹாட் ஸ்பிரிங்கில் சீனா பணி அமர்த்தியிருக்கும் வீரர்களை இன்னும் திரும்பப் பெறாமல் இருப்பது நிலைமையை இயல்பாக்குவதில் உள்ள சிரமங்களின் அறிகுறிகளாகும். PLA பாரம்பரியமாக கொங்கா லாவிற்கு கிழக்கே ஒரு முக்கிய தளத்தைக் கொண்டுள்ளது. இந்த பாதை சீனாவின் மிக முக்கியமான இரண்டு பகுதிகளுக்குமான, வடக்கில் சின்சியாங் மற்றும் தெற்கில் திபெத் எல்லையை குறிக்கும் ஒன்றாகும். சின்சியாங்கை திபெத்துடன் இணைக்கும் சீனாவின் ஜி219 தேசிய நெடுஞ்சாலையின் மேற்குப் பக்கம் கொங்கா லா அமைந்துள்ளது.
1962ம் ஆண்டு போருக்கு பிறகு, கொங்கா லாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று லடாக் எல்லை பொறுப்பை இந்திய அரசு ராணுவத்திடம் ஒப்படைக்க வைத்தது. 1959ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அன்று மூன்று இந்திய ரோந்து அதிகாரிகளை சீன ராணுவத்தினர் கைது சென்றனர். ரோந்து அதிகாரிகள் திரும்பாத போது, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மேலும் 20 பேர் அடுத்த நாள் மூவரையும் தேடி புறப்பட்டனர்.
20 நபர்களில் 16 பேர் சங் சென்மோ ஆற்றை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் மீது சீன அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதல்கள் நடத்தினார்கள். தேடும் பணியில் ஈடுபட்ட 20 நபர்களில் 9 பேர் கொல்லப்பட்டனர். மீதம் இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு மோசமாக நடத்தப்பட்டனர். ஒரு சீன அதிகாரியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுக்கு பின்னதாக மேற்கு பகுதி முழுமையாக ராணுவத்திடம் அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று ஒப்படைக்கப்பட்டது.
அதிகப்படியான தாக்குதல்களை பார்த்ததில்லை என்றாலும் சீனா 1962ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது ஹாட் ஸ்ப்ரிங்கை தாக்கியது. 1960ம் ஆண்டு வரை சீனா கொங்கா லா மற்றும் ஹாட் ஸ்பிரிங்கில் ஒரு நிறுவனத்தை வைத்திருந்தது. அது 1962 ஆண்டில் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அது ஒரு ரெஜிமென்டாக மாறியது.
போரின் ஆரம்பத்தில் ஹாட் ஸ்பிரிங்கில் 30 ராணுவ வீரர்களை கொண்ட ஒரே ஒரு ப்ளாட்டூன் மட்டுமே இருந்தது. சீனா இந்திய ராணுவத்தினரை கால்வான் பள்ளத்தாக்கை தாக்கிய பிறகு சாங் சென்மோ மற்றும் ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் பக்கம் கவனம் திரும்பியது.
ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியைச் சேர்ந்த துருப்புக்களை சீனர்கள் ஷெல் செய்யத் தொடங்கிய பின் அவர்களைத் துண்டிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் பின்வாங்குமாறு இராணுவம் அறிவுறுத்தியது. முதலில் இந்திய வீரர்கள் சோகாத்சாலுவிற்கும் பிறகு போப்ராங்கிற்கும் செல்ல முயற்சி செய்தார்கள். சாங் சென்மோ ஆற்றின் வழியே நகரும் போது, கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் உறைபனி மற்றும் சில்பைன்களால் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் இருந்து தற்போது வீரர்கள் வெளியேற மறுத்த போது இரு தரப்பில் தலா 50 ஆயிரம் துருப்புகள், டேங்குகள், துப்பாக்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு இயந்திரங்கள் விரிவாக்கத்தில் ஒரு பெரிய தடையாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு சீனா தனது படைகளை LAC வழியாக நகர்த்தியபோது வந்தது என்று இராணுவம் சொல்லும் உராய்வு புள்ளிகளில் ஹாட் ஸ்பிரிங்ஸ் கடைசி என்று கூறப்பட்டது. பி.பி.14 கால்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா போஸ்ட்டில் பி.பி.17ஏ , மற்றும் பாங்காங்க் சோவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஊராய்வு புள்ளிகளில் சில பகுதிகளாகும். இங்கிருந்த அனைத்த படைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.