Amitabh Sinha
Corona Virus Cases in India: கொரோனா வைரஸ் நோயாளிகளில் 90 சதவீத மீட்பு வீதத்தை கடந்த முதல் மாநிலமாக டெல்லி திகழ்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 1.62 லட்சத்தில் 1.46 லட்சத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், பீகார் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களில், மீட்பு விகிதம் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும், மேலும் 13 மாநிலங்களில் மீட்பு விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
மீட்பு வீதத்தின் அதிகரிப்பு பெரும்பாலும் நேர்மறையான குறியீடாகவே கருதப்படுகிறது. உண்மையில், இது தொற்றுநோயின் இயற்கையான மற்றும் வெளிப்படையான முன்னேற்றத்தைத் தவிர வேறொன்றையும் விவரிக்கவில்லை. கொரோனாவின் தொடக்கத்தில், மீட்பு விகிதம் மிகக் குறைவு. ஆனால் அதன் எண்ணிக்கை அதிகரிக்கையில், குணமடையும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சமீபத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே நோய் வாய்ப்பட்டுள்ளனர். இறுதியில், கொரோனா முடிவுக்கு வரும் போது, நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் குணமடைந்திருப்பார்கள்.
இந்தியாவில் தயாராகும் ஐபோன்கள்… விலை குறைய வாய்ப்புகள் உள்ளதா?
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே இறக்கின்றனர் என்று கருதினால், கொரோனா பரவலின் முடிவில், மீட்பு விகிதம் 99 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும், அல்லது அதற்கு அருகிலாவது இருக்கும்.
ஒட்டுமொத்த நாட்டிலும், மீட்பு விகிதம் 76.3 சதவீதத்தை தாண்டியுள்ளது, 32.34 லட்சத்தில் 24.67 லட்சத்துக்கும் அதிகமானோர், இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டவர்கள், மீண்டு வந்துள்ளனர்.
செவ்வாயன்று, மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 10,500 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது, மேலும் 73.14 சதவீத மீட்பு வீதத்தை அளிக்கிறது. கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் நோயாளிகளின் இறப்பு 23,000 க்கும் அதிகமாக உள்ளது.
இதற்கிடையில், பீகாரில் மந்தநிலை தொடர்கிறது. சமீபத்தில் வரை, நாட்டில் மிக வேகமாக வைரஸ் வளர்ச்சி விகிதம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது இப்போது ஒரு நாளைக்கு இரண்டு சதவீதம் என்று குறைகிறது. இது தேசிய சராசரியை விடவும் குறைவாக உள்ளது. தினசரி சேர்க்கப்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை சுமார் பத்து நாட்களுக்கு முன்பு 4,000 ஆக இருந்தது, கடந்த இரண்டு நாட்களாக 1,500 க்கும் குறைவாக உள்ளது.
விலங்குகளுக்கு கொரோனா ஆபத்து அதிகமா? குறைவா?
நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதம் மாநிலங்களில் ஒன்றாகவும் உள்ளது. மாநிலத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 0.5 சதவீதம் பேர் இப்போது வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், தெலங்கானாவில் மீண்டும் வைரஸ் அதிகரிக்கிறது. கடந்த ஐந்து நாட்களில், மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 2,500 புதிய பாதிப்புகள் பதிவாகி வருகிறது. செவ்வாயன்று, இந்த எண்ணிக்கை முதல் முறையாக 3,000-ஐ தாண்டியது. இதற்கு முன், மாநிலம் ஒவ்வொரு நாளும் 1,500 முதல் 1,800 பாதிப்புகள் வரை பதிவாகியுள்ளது.
செவ்வாயன்று நாட்டில் மீண்டும் பதிவான புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 67,000 க்கும் அதிகமாக உள்ளது. இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 1,059 இறப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.