Advertisment

மகாராஷ்டிராவின் தினசரி பாதிப்பு விகிதம் ஏன் கவலை அளிக்கிறது?

நாட்டில் இன்று 1668 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 1035 அரசுத் துறையை சேர்ந்தது மற்றும் 633 தனியார் பரிசோதனை கூடங்கள்

author-image
WebDesk
New Update
மகாராஷ்டிராவின் தினசரி பாதிப்பு விகிதம் ஏன் கவலை அளிக்கிறது?

கடந்த மூன்று மாதத்தில் முதன் முறையாக, மகாராஷ்டிரா மாநிலத்தின்  கொரோனா தொற்று பாதிப்பு விகிதம், தேசிய பாதிப்பு விகிதத்தை விட வேகமாக வளரத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு  எண்ணிக்கை (ஏழு நாள் கூட்டு விகிதம்) 2.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.  தேசிய மட்டத்தில் இந்த எண்ணிக்கை 2.14 சதவீதமாக உள்ளது.

Advertisment

கடந்த மூன்று வாரங்களில், அதிகப்படியான தினசரி புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தின் தினசரி பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 10,000 - 12,000  என்ற எண்ணிக்கையில் இருந்த அதன் பாதிப்புகள், தற்போது 20,000 க்கும் அதிகமாகி உள்ளது. தேசிய மட்டதிலும் இதன் பாதிப்பை நாம் உணர்கிறோம். கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியா தினசரி 75,000 க்கும்  மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை உறுதி செய்து வருகின்றன. கடந்த வார இறுதியில், தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 90,000க்கும் அதிகமாகின.

 

 

இந்தியாவின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்துவதால்  மகாராஷ்டிராவின் தினசரி பாதிப்பு விகிதம் முக்கியத்துவம் வாய்ந்தாதாக கருதப்படுகிறது. ஒரு கட்டத்தில், நாட்டின் 40 சதவீதம் மொத்த பாதிப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பதிவாகின. அந்த விழுக்காடு தற்போது  21.6% மாக குறைந்துவிட்டது. இருப்பினும், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதையை  வழிநடத்தும் மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது.

மே மாத நடுப்பகுதியில் இருந்து கோவிட்- 19 பாதிப்பின் தேசிய சராசரி படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், தேசிய சராசரியை  ஒப்பிடும்போது , கொரோனா பாதிப்பில் 25க்கும் மேற்பட்ட மாநிலங்கள் அதிகப்படியான பாதிப்பை உறுதி செய்து வந்தன. ஆனால், அப்போது மகாராஷ்டிராவின் பாதிப்பு விகிதம் குறைந்து வருவதால், தேசிய சராசரியும் குறைந்து கொண்டே வந்தது.எனவே, நீண்ட நாட்களுக்குப் பிறகு தேசிய வளர்ச்சி விகிதத்தை மகாராஷ்டிர அதிகரிக்கும் என்று விளங்கி கொள்ள முடிகிறது.

கடந்த சில நாட்களாக 4,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை உறுதி செய்து வரும்  புனே நகரம் தான் அம்மாநிலத்தின் மையப்பகுதியாக தெரிகிறது. புனேவில் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.  இருப்பினும், மகாராஷ்டிராவில்  தற்போது பல  ஹாட்ஸ்பாட்  இடங்கள் உருவாகியுள்ளன. முந்தைய நாட்களில், மும்பை,  புனே ஆகிய  நகரங்கள்  மாநிலத்தின் 70 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புகளைக் கொண்டிருந்தன. தற்போதும் கூட, மாநிலத்தின் 40 சதவீதம் மொத்த பாதிப்புகள்  இந்த 2  நகரங்களில் இருந்து தான் கண்டறியப்பட்டுள்ளது.  ஆனால், இப்போது பல ஹாட்ஸ்பாட் இடங்கள் உருவாகியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. உதாரணமாக, நாக்பூரில் 40,000 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.    மேலும், இது தினசரி 1,200 - 1,500 வரையிலான பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது.  நாசிக், கோலாப்பூர், சாங்லி, சதாரா, அவுரங்காபாத் ஆகிய நகரங்கள் இறப்பு விகிதத்திலும், மொத்த பாதிப்பிலும் பங்களித்து வருகின்றன.

டெல்லியின் சமீபத்திய போக்கு, புனேவை  சவால்  விடும் நிலையில் உள்ளது. அதிகப்படியான பாதிப்புகளை டெல்லி தினசரி பதிவு செய்து வருகிறது. டெல்லியில் தற்போது 1.93 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது புனேவை விட 10,000 குறைவாகும்.

 

ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை குறைந்ததால், நாட்டில்  நேற்றைய பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது . புதிதாக நேற்று 76,000 பேருக்கு இந் நோய்த் தொற்று உறுதி  செய்யப்பட்டது.  முந்தைய இரண்டு  நாட்களில்  தினசரி எண்ணிக்கை 90,000 ஐ தாண்டியது.

தினமும் 10 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில் , ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 7.2 லட்சமாக குறைந்தது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில்  கிட்டத்தட்ட 11  லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை  தற்போது 5 கோடியை கடந்துள்ளது. சீனா இதுவரை 16 கோடி  சோதனைகளை நடத்தியுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா 8 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகரிப்பால், ஒரு மில்லியன் பேருக்கான பரிசோதனை அதிகரித்துள்ளது. ஒரு மில்லியன் பேருக்கான பரிசோதனை கடந்த ஜூலை 1-ஆம் தேதி 6396லிருந்து, இன்று 36,703 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் உள்ள பரிசோதனை மையங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இன்று 1668 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 1035 அரசுத் துறையை சேர்ந்தது மற்றும் 633 தனியார் பரிசோதனை கூடங்கள்.

நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  42.80 லட்சத்தை எட்டியுள்ளது. அவர்களில் 33.23 லட்சத்துக்கும் அதிகமானோர் அல்லது சுமார் 78 சதவீதம் பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 73,000 க்கு அருகில் உள்ளது.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment