Advertisment

தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடர்பாக, நீண்ட நாள்களுக்கு பிறகு இந்தியா தனது மவுனத்தை கலைத்துள்ளது. ரஷ்யாவின் நோக்கங்கள் என்ன, மேற்கு நாடுகள் ஏன் கவலைப்படுகின்றன, அவர்களுடனான உறவில் இந்தியாவிற்கு ஏற்படவுள்ள சிக்கல்கள் என்ன?

author-image
WebDesk
New Update
தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்யா விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒன்றரை மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இவ்விவகாரம் குறித்து இந்தியா தனது கருத்துகளை தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Advertisment

என்ன பிரச்சினை?

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. அதே சமயம், தனது அண்டை நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், எதிர்த்து போராட தயார் நிலையில் நேட்டோ படைகள் உள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனின் தலைநகரான கியேவிற்கும் இடையிலான குறுகிய பாதையில் வரும் உக்ரைனில் உள்ள செர்னோபில் உட்பட கிழக்கு மற்றும் வடக்கில் உக்ரேனியப் படைகள் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆரம்பித்தது எப்போது?

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம், போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் இருந்து நேட்டோ துருப்புக்கள் அகற்றப்படுதல், ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க அணுவாயுதங்களை வாபஸ் பெறுதல் ஆகியவற்றை நிறுத்துவதற்கு எழுத்து வடிவிலான உத்தரவாதத்தை ரஷ்யா கோரியுள்ளது. அதில் முக்கியமானது, உக்ரைன் நேட்டோவில் சேர ஒருபோதும் அனுமதிக்கபடக்கூடாது என்பது தான். இதற்கு அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பான பேச்சுவார்த்தை பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் பாரிஸில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசி நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், புதினுடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார்.

ரஷ்யா இதை செய்வது ஏன்?

1987 மற்றும் 1991 க்கு இடையில் ரஷ்யாவில் வாஷிங்டன் போஸ்ட் நிருபராக இருந்த நியூ யார்க்கரின் ஆசிரியர் டேவிட் ரெம்னிக், விளாடிமிர் லெனின் கூறியதை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனை இழப்பது, எங்கள் தலையை இழப்பதாக கருதுவோம் என்றார். அன்று முதல் தற்போதைய அதிபர் புதின் வரை, இந்த அணுகுமுறையை பின்பற்றி வருகின்றனர்.

புதின் சோவியத் யூனியனின் பிரிவு கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவாக கருதுகிறார். இதுவரையிலான தனது 22 ஆண்டுகால ஆட்சியில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த நாடுகளில் ரஷ்யாவின் செல்வாக்கை மீட்டெடுக்க முயன்றார்.

1991 இல் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது ரஷ்யாவின் கட்டுப்பாட்டை இழந்த 14 குடியரசுகளில் உக்ரைன் மிக முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் அது இரண்டாவது பெரிய பொருளாதாரம் மற்றும் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.

வரலாற்றுத் தொடர்புகள் என்ன?

லெனின் தலைமையிலான புரட்சிக்குப் பிறகு ஜார் பேரரசு சரிந்தபோது, ​​உக்ரேனியர்கள் தங்களுக்கென ஒரு அரசை உருவாக்கி, ஜனவரி 1918 இல் சுதந்திரத்தை அறிவித்தனர். 1920 இல் போல்ஷிவிக் ரஷ்ய உக்ரைனின் பெரும்பகுதியைக் கைப்பற்றியதால், இரண்டு ஆண்டு சுதந்திரம் முடிவுக்கு வந்தாலும், அதற்கான விதையை விதைத்துவிட்டது.

போல்ஷிவிக்குகள் உக்ரைனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க நிர்பந்திக்கப்பட்டனர். அதேபோல், உக்ரேனிய சோவியத் குடியரசிற்கு ஒரு சார்பு சுதந்திரத்தையும் கூட வழங்கினர்

பின்னர், டிசம்பர் 1, 1991 இல் நடந்த உக்ரேனிய வாக்கெடுப்பில், 90% பங்கேற்பாளர்கள் சோவியத் ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்தனர், மேலும், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான உக்ரைன் இல்லாமல் யூனியனால் மொத்தையும் கட்டுப்படுத்திட முடியவில்லை.

உக்ரைன் புவியியல் சொல்வது என்ன?

ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, ஐரோப்பாவில் உக்ரைன் இரண்டாவது பெரிய நாடாகும். கருங்கடலில் முக்கிய துறைமுகங்களை கொண்டுள்ளது. நான்கு நேட்டோ நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஐரோப்பா அதன் இயற்கை எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கிற்கு ரஷ்யாவைச் சார்ந்துள்ளது. இதன் காரணமாக புதினுக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. ஆனால், அந்த முக்கிய குழாய்களில் ஒன்று உக்ரைன் வழியாக செல்கிறது. எனவே, உக்ரைனை கட்டுபடுத்தினால், ரஷ்யாவின் குழாய் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.

மேற்கு நாடுகள் வந்தது எப்படி?

1990களின் முற்பகுதியில் பனிப்போர் முடிவடைந்ததில் இருந்து, நேட்டோ 14 புதிய நாடுகளை எடுத்துக்கொண்டு கிழக்கு நோக்கி விரிவடைந்தது. இதில் சோவியத் யூனியனின் சில பகுதிகளும் அடங்கும்.ரஷ்யா இதை ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகிறது,

உக்ரைன் நேட்டோ உறுப்பினராக இல்லை, ஆனால் 2008 இல் சேருவதாக உறுதியளிக்கப்பட்டது. பின்னர், 2014இல் ரஷ்ய சார்பு அதிபர் வெளியேறிய பின்னர், உக்ரைன் அரசியல் ரீதியாக மேற்கு நாடுகளுடன் நெருங்கி வருகிறது. நேட்டோவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்க டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியது. 2014 இல் ரஷ்யா கிரிமியா பகுதியை இணைத்து, கிழக்கு உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவை வழங்கியதை அடுத்து, உக்ரைனின் பாதுகாப்பை அதிகரிக்க இது செய்யப்பட்டுள்ளது

ரஷ்யாவை குறிவைக்கும் ஏவுகணைகளுக்கான ஏவுதளமாக உக்ரைனை நேட்டோ பயன்படுத்தக்கூடும் என்று புதின் கூறுகிறார். உக்ரைன் மீதான அதன் மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதில் வெற்றிபெறாவிட்டால், 'இராணுவ-தொழில்நுட்ப நடவடிக்கைகள்' குறித்து ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்தியா நிலைப்பாடு என்ன?

வெள்ளிக்கிழமை வாராந்திர மாநாட்டில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடந்து வரும் உயர்மட்ட விவாதங்கள் உட்பட உக்ரைன் தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்கியேவில் உள்ள எங்கள் தூதரகம் உள்ளூர் முன்னேற்றங்களையும் கண்காணித்து வருகிறது. பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான நீடித்த இராஜதந்திர முயற்சிகள் மூலம் நிலைமையை தீர்க்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

ஏன் திடீர் அறிக்கை

ஜனவரி 19 அன்று, அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் வெண்டி ஷெர்மன், வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை அழைத்து, "உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யாவின் இராணுவக் கட்டமைப்பைப் பற்றி" விவாதித்தார்.ஆனால், அப்போது அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. நிலைமை தீவிரமாக கவனித்து, இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

இரு தரப்பிலும் முக்கிய மூலோபாய கூட்டாளிகள் இருப்பதால், அதன் முக்கிய பங்குகளை பாதிக்கும் எந்த அவசர நடவடிக்கைகளையும் இந்தியாவால் எடுத்திட முடியாது. ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை இருந்தாலும், மாஸ்கோவுடனான அதன் நெருக்கமான இராணுவ உறவுகளை, குறிப்பாக கிழக்கு எல்லையில் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில், அதனை முறித்துக்கொள்ள இருந்தா தயாராக இல்லை.

இந்தியாவின் பங்கு என்ன?

வரலாற்று உறவு ஏழு தசாப்தங்களுக்கு முந்தையது ஆகும். டெல்லி தனது புதிய கொள்முதல்களை மற்ற நாடுகளில் இருந்து பன்முகப்படுத்தியிருந்தாலும், அதன் பாதுகாப்பு உபகரணங்களில் பெரும்பகுதி ரஷ்யாவிடமிருந்து வந்தவை ஆகும். மதிப்பீடுகளில் 60-70 சதவீதம் விநியோகங்கள் அங்கிருந்து வந்ததாகக் கூறுகின்றன.

புதின் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடன் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி முறைசாரா உச்சி மாநாடுகளை நடத்தினார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டத்திற்கு மத்தியில் ரஷ்யா முக்கிய ராஜதந்திர பகுதியாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரஷ்யாவில் உள்ள சீன சகாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காபூல் தலிபான்களிடம் வீழ்ந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் ஈடுபாடுகளில் ரஷ்யாவும் முக்கியமானது.

மேற்கு நாடுகளுடனான உறவுகள் பற்றி என்ன?

இவையும் முக்கியமானவை ஆகும். . அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்தியாவின் மூலோபாய கணக்கீட்டில் உள்ள முக்கியமான கூட்டாளிகள் ஆகும். இந்தியா-சீனா எல்லையில் உளவு மற்றும் கண்காணிப்புக்காக பல அமெரிக்க தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 50,000 துருப்புக்களுக்கான குளிர்கால ஆடைகள் மேற்கத்திய பங்காளிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

சீனா பக்கமாக ரஷ்யா.. இந்தியா கவலை?

மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான விவாதம், மாஸ்கோவை பெய்ஜிங்கின் திசையில் தள்ளக்கூடும் என்பதை இந்தியா உணர்ந்துள்ளது.

2014 இல் கிரிமியாவை இணைத்த பிறகு ரஷ்யாவை நோக்கி மேற்கு நாடுகளின் அணுகுமுறை மாஸ்கோவை சீனாவுடன் மிகவும் நெருக்கமாக கொண்டு வந்தது. மேற்கத்திய ஆய்வாளர்கள் இதை வலிமையானவர்கள் தலைமையிலான இரு நாடுகளுக்கு இடையிலான "வசதிக்கான நட்பு" என்று பார்க்கிறார்கள்.

இருப்பினும், பெய்ஜிங்கும் மாஸ்கோவும் ஒருபோது ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திப்பது இல்லை. ரஷ்யாவின் ஒரு பகுதியாக கிரிமியாவை சீனா அங்கீகரிக்கவில்லை,.

இந்தியா அறிக்கையின் வெளிப்பாடு என்ன?

ரஷ்யா கிரிமியாவை இணைத்த போது, இந்தியா "கவலை" தெரிவித்தது ஆனால் "சட்டபூர்வமான ரஷ்ய நலன்கள்" பற்றி பேசி தகுதி பெற்றது. "கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் புறநிலை" நிலைப்பாட்டை எடுத்ததற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த புடின், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது நன்றியை தெரிவிக்க அழைப்பு விடுத்தார்.

ரஷ்யாவுடனான அதன் உறவை மனதில் வைத்து, மேற்கத்திய நாடுகள் செய்வது போல் இந்தியா எந்த கண்டன அறிக்கையையும் வெளியிடவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைக்கு, ப்போதைக்கு, இரு தரப்பிலும் திறமையான பேச்சுவார்த்தை மூலம் நிலைமை தீர்க்கப்படும் என்று டெல்லி நம்புகிறது.

CIA தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தனது முந்தைய ராஜதந்திர பாத்திரங்களில் இதுபோன்ற பல கடினமான பேச்சுக்களை கையாண்டுள்ளார். மறுபுறம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment