Advertisment

தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரித்த வேக்சின் பாஸ்போர்ட் - புதிய ஆராய்ச்சி முடிவுகள்

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட டென்மார்க், இஸ்ரேல், இத்தாலி, ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
vaccine passports increased vaccination uptake , Vaccination, Vaccine, Vaccine Passport

vaccine passports increased vaccination uptake: தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியின் முடிவுகள், “வேக்சின் பாஸ்போர்ட்” என்பதை அறிமுகம் செய்வதற்கு முன்பு 20 நாட்களிலும், அறிமுகம் செய்த பின்பு 40 நாட்களிலும், சராசரிக்கும் குறைவாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

Advertisment

பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கொரோனா தொற்று நெகடிவ் சான்று, கொரோனா தொற்றில் இருந்து மீண்டதற்கான சான்று அல்லது கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக செலுத்திக் கொண்டதற்கான சான்றுகள் தேவைப்படுகின்றன.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட டென்மார்க், இஸ்ரேல், இத்தாலி, ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயமாக்கவில்லை என்றால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் எவ்வாறு இருக்கும் என்பதை, தடுப்பூசி சான்றுகள் இல்லாத 19 நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த பகுப்பாய்வில் முதலில் இந்த கொள்கை கொண்டு வரப்பட்டதால் கூடுதலாக எவ்வளவு மக்கள் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இரண்டாவது பகுப்பாய்வில் இந்த கொள்கை முடிவால் தொற்று பரவலில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொண்டனர்.

கேரளாவில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு; கொரோனா இரண்டாம் அலையும் முக்கிய காரணம்

தடுப்பூசி பாதுகாப்பு குறைவாக இருந்த நாடுகளில், கோவிட்-19 சான்றிதழின் அறிமுகம் ஒரு மில்லியன் மக்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது. பிரான்சில் 127,823, இஸ்ரேலில் 243,151, சுவிட்சர்லாந்தில் 64,952 மற்றும் இத்தாலியில் 66,382 என எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால் டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தடுப்பூசி சான்று அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை சராசரி விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது. எனவே இந்த அறிமுகத்தால் குறிப்பிட்டு கூறும்படியான எண்ணிக்கை உயர்வு ஏற்படவில்லை.

கட்டுப்பாட்டு நாடுகளுடன் ஒப்பிடும்போது, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தினசரி கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, ஆனால் இஸ்ரேல் மற்றும் டென்மார்க்கில் அதிகரித்துள்ளது. பல நாடுகள் அதிகரித்து வரும் வழக்குகளுக்கு பதிலடியாக சான்றிதழை நடைமுறைப்படுத்தியது, அறிக்கையிடப்பட்ட நோய்த்தொற்றுகளில் சான்றிதழின் விளைவை மதிப்பிடுவது கடினமாக்கியுள்ளது.

வயதான மக்களோடு ஒப்பிடும் போது 30 வயதிற்கு குறைவானோர் அதிக அளவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டனர். வயதான மக்கள் மத்தியில் தடுப்பூசியை பெறுவதற்கான முன்னுரிமை மற்றும் சான்றிதழின் போது இளைய வயதினரின் தகுதி ஆகியவை முடிவுகளை பாதித்திருக்கலாம் என்பதை ஆசிரியர்கள் ஆராய்ந்தனர், ஆனால் வயது அடிப்படையிலான தகுதி அளவுகோல்களால் சான்றிதழ் அறிமுகத்தின் விளைவை முழுமையாக விளக்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment