Advertisment

பிக்சல் இந்தியா ஆனந்த் செயற்கைக்கோள் 'மிஸ்' ஆனது ஏன்?

Why Pixxel India Anand satellite missed the flight ஆனந்த் என அழைக்கப்படும் அதன் முதல் செயற்கைக்கோள்கள் நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இந்த பி.எஸ்.எல்.வி-சி 51 ராக்கெட்டில் இருக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Isro pslvc51 launch why pixxel india anand satellite missed the flight Tamil News

Isro pslvc51 launch why pixxel india anand satellite missed the flight Tamil News

ISRO PSLV C51 launch Tamil News : பி.எஸ்.எல்.வி-சி 51-ஐச் சுற்றியுள்ள உற்சாகம், அது அறிவிக்கப்பட்டபோது, இந்த செயற்கைக்கோள் ஏவுதலின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்ற நம்பிக்கையின்மையைக் கொண்டிருந்தது. இன்றைய நோக்கம், பிக்ஸல் இந்தியாவிலிருந்து ஒரு செயற்கைக்கோளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். இது இந்தியாவின் விண்வெளித் துறைக்குச் செய்த பல புதிய தொடக்கங்களில் ஒன்று. மேலும், ஸ்பேஸ்எக்ஸ் அல்லது பிளானட் லேப்ஸ் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதையும் கண்காணிக்கின்றன.

Advertisment

கடந்த சனிக்கிழமையன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பெங்களூரைத் தளமாகக் கொண்ட பிக்செல் இந்தியா, உலகின் ஒவ்வொரு பகுதியையும் தொடர்ந்து கண்காணிப்பதற்காக பூமி-இமேஜிங் செயற்கைக்கோள்களின் பரந்த constellation தொகுப்பை வைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், பீம் உயர்-தெளிவு படங்கள் மற்றும் பிற காலநிலை மாற்றம் தரவு, விவசாயம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் பல்வேறு பயன்பாடுகளுக்கு இது பயன்படுத்தப்படலாம். ஆனந்த் என அழைக்கப்படும் அதன் முதல் செயற்கைக்கோள்கள் நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட இந்த பி.எஸ்.எல்.வி-சி 51 ராக்கெட்டில் இருக்க வேண்டும்.

Isro pslvc51 launch why pixxel india anand satellite missed the flight Tamil News ISRO’s PSLV C-51 carrying Amazonia1 and 18 Co-passenger satellites

ஆனால், இந்த ஏவுதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் சோதனையின்போது, “சில மென்பொருள் சிக்கல்கள்” காரணமாக, இந்த நேரத்தில் ஆனந்த் செயற்கைக்கோளை ஏவுவதற்கு இது ஏற்றதல்ல என்று நிறுவனம் அறிவித்தது. "செயற்கைக்கோளைத் தயாரிப்பதற்கான நேரத்தையும் முயற்சியையும் கருத்தில் கொண்டு, ஒரு செயற்கைக்கோளை விரைந்து ஏவுதல் அர்த்தமில்லை. அதிலும் இந்த நேரத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. எங்கள் ஏவுதளத்தை சில வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளோம். செயற்கைக்கோள் மென்பொருளை மறு மதிப்பீடு செய்யவும், அடுத்த சில வாரங்களில் அதைக் கடுமையாக சோதிக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த நெருக்கமான ஏவுதள வாய்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி-சி 51 ஏவுதலின் “சிறப்பு” என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூட கூறியிருந்தார். ஏனெனில், இது பிக்செல் இந்தியா செயற்கைக்கோளின் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதால், தனியார் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் சமமாக மாற்றும் எனவும் குறிப்பிட்டிருந்தார் சிவன்.

Isro pslvc51 launch why pixxel india anand satellite missed the flight Tamil News PSLV C51 carrying Amazonia-1 captured at the Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota

"இந்திய அரசு, சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது (தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை எளிதாக்க விண்வெளித் துறையைத் திறந்தது). மேலும், எட்டு மாதங்களுக்குள், பிக்செல் இந்தியா என்ற புதிய தொடக்கத்திலிருந்து ஆனந்த் எனும் முதல் செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது" என்று டிசம்பரில் இஸ்ரோவின் கடைசி வெளியீட்டுக்குப் பிறகு சிவன் கூறினார்.

"நிச்சயமாக பி.எஸ்.எல்.வி-சி 51, நாட்டின் முதல் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையாக இருக்கும். இது இந்தியாவில் விண்வெளி சீர்திருத்தங்களின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கப் போகிறது. தனியார் நிறுவனர்கள் இந்த நடவடிக்கையை மேலும் மேற்கொண்டு முழு நாட்டிற்கும் சேவைகளை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று சிவன் குறிப்பிட்டார்.

ஏவுதலின் இறுதியில் பிக்சல் இந்தியா செயற்கைக்கோள் இல்லாமல் நடந்தது. ஆனால், அதன் முக்கிய பேலோட், பிரேசிலிலிருந்து அமசோனியா -1 எனப்படும் பூமி-கண்காணிப்பு செயற்கைக்கோள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இஸ்ரோவின் புதிய சந்தைப்படுத்தல் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முதல் வணிக முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ ஏற்கெனவே அன்ட்ரிக்ஸ் என்று அழைக்கப்படும் மற்றொரு சந்தைப்படுத்தல் நிறுவனத்தைக் கொண்டிருந்தது. ஆனால், இது சர்ச்சைக்குரிய தேவாஸ் ஒப்பந்தத்தைத் தீர்ப்பதற்கான நீண்ட குறுக்கு வழக்குகளில் சிக்கியுள்ளது.

அமசோனியா -1 என்பது சூரிய ஒத்திசைவான செயற்கைக்கோள். இது, பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த, சோதனை செய்யப்பட்டு இயக்கப்படும் முதல் விமானம். இது ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் உலகின் எந்தப் பகுதியின் படங்களை உருவாக்க முடியும். ஆனால், அமேசான் காடுகளில் காடழிப்பைக் கண்காணிக்கும் பயனர்களுக்கு ரிமோட் சென்சிங் தரவை வழங்க முக்கியமாகப் பயன்படுத்தப்படும்.

அமசோனியா -1-ஐத் தவிர, அமெரிக்காவிலிருந்து 12 SpaceBEE, யுனிட்டிசாட் என்று அழைக்கப்படும் மூன்று செயற்கைக்கோள்களை ஜெப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீபெரும்புதூர், நாக்பூரின் ஜி.எச். ரைசோனி பொறியியல் கல்லூரி மற்றும் கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஆகிய மூன்று பொறியியல் கல்லூரி மாணவர்களால் கூட்டாக உருவாக்கப்பட்டவை என அனைத்தையும் சுமந்து சென்றது. கூடுதலாக, விண்வெளி வானிலை ஆய்வு செய்வதற்கும் நீண்ட தூரத் தொடர்பு தொழில்நுட்பங்களை நிரூபிப்பதற்கும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா உருவாக்கிய நானோ செயற்கைக்கோளை இந்த பணி கொண்டு சென்றது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Isro Pslv K Sivan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment