Advertisment

அயோத்தி வழக்கு கடந்து வந்த சிக்கல்கள்- முழு ரிப்போர்ட்

Ayodhya case verdict ; அயோத்தி வழக்கின் தீர்ப்பை, இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளும் உற்றுநோக்கி வருவதால் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today

Tamil Nadu News Today

Apurva Vishwanath, Kaunain Sheriff M

Advertisment

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்கவேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தல்கள் இருக்கின்றன. இந்த வழக்கு குறித்த விரிவான தகவல்கள், வழக்கு கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

அயோத்தி இடம் குறித்த சர்ச்சை 1949ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வந்தாலும், 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு எதிராக இந்து பரிவார் உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது..

ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி இடையேயான நில பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் விரைவில் வெளியிட உள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராம்லல்லா விராஜ்மாான், நிர்மோகி அகரா மற்றும் உத்தரபிரதேசத்தின் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் சிப்காத் உல்லா கான், சுதிர் அகர்வால் மற்றும் தரம் வீர் சர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அளவிலான நிலத்தை, ராம்லல்லா விராஜ்மான், நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம், சமமாக பங்கிட்டுகொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நிகழ்வில், நீதிபதிகள் 8 சிக்கல்களை எதிர்கொண்டனர். அந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் 30க்கும் மேற்பட்ட அதனோடு தொடர்புடைய கேள்விகள் குறித்தும் நீதிபதிகள் ஆராய்ந்து அந்த தீர்ப்பை வழங்கினர்.

அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாரபட்சத்துடன் இருப்பதாக தெரிவித்த அந்த அமைப்புகள், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தன. அந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பே, இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

அயோத்தி வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எதிர்கொண்ட சிக்கல்கள்...

1989ம் ஆண்டில் ராம்லல்லா விரஜ்மான் தரப்பின் கோரிக்கை என்ன?

இந்து அமைப்பான ராம்லல்லா விரஜ்மான், 1989ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடம், இந்துக்களுக்கு சொந்தமானது என்று தங்கள் தரப்பில் இருந்து வழக்கு தொடர்ந்திருந்தனர். ஒரு சொத்து அல்லது இடத்திற்கு சொந்தம் கொண்டாடுவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி 6 ஆண்டுகளுக்குள் வழக்கு தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கால வரம்பிற்குள்ளாகவே, ராம்லல்லா விரஜ்மானின் வழக்கு வருவதால், நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.

ஆனால், சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அக்ரா தொடுத்த வழக்குகள் குறிப்பிட்ட கால அளவை தாண்டிவிட்டதால், அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்து தள்ளுபடி செய்தது.

1885ம் ஆண்டில் நிலம் வைத்திருந்தது தொடர்பான தகவல்கள் வழக்கில் இடம்பெற்றிருந்ததா?

1885ம் ஆண்டில், ராம் சாபுதரா பகுதியில் ராமர் கோயிலை கட்ட, மகந்த் ரகுபர் தாஸ், அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை எதிர்த்து முகம்மது அஸ்கர், முடவாலி பகுதியில் மசூதி கட்ட அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். நிலத்தை எல்லை நிர்ணயம் செய்வதில் தங்களுக்கு ஆட்சேபம் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அதனை அவர்கள் வழக்கு விபரத்தில் குறிப்பிடவில்லை. இதன்காரணமாக, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றமும், ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தநிலையில், அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அங்கு இரு தரப்புகளிடையே கடும் வன்முறை ஏற்பட்டது.

2010ம் ஆண்டு நடைபெற்ற விசாரணையின் போதும், ராம்லல்லா அமைப்பு தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், நீதிபதி கான், அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தார். அந்த தீர்ப்பில் சட்டவிதிகள் எதுவும் சரியாக பின்பற்றப்படவில்லை. மேலும் இது எதிர்தரப்பு கணக்கிலேயே சேர்த்துகொள்ளப்படவில்லை என்று நீதிபதி கான் விளக்கம் அளித்திருந்தார்.

நீதிபதி சர்மா தனது உத்தரவில், மகந்த் மற்றும் முடவாலி இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தபோது, நில பங்கீடு விவகாரங்களிலேயே அவர்கள் அதிக ஈடுபாடு காட்டியதாகவும், அதன் காரணமாக, இதில் கட்சிகள் சேர்த்துகொள்ளப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

publive-image

யாருடைய நிலத்தில் யாரால், எப்போது அந்த அமைப்பு நிறுவப்பட்டது?

ராம ஜென்ம பூமி நிலம் தங்களுக்கு சொந்தமாக இருந்ததாகவும், 1949ம் ஆண்டில் அந்த இடத்தின் சில பகுதிகளில் பைஜாபாத் மாவட்ட நீதிபதி சீல் வைத்ததாக இந்து அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மசூதி, 1528ம் ஆண்டில் பபுர் பேரரசரால் நிறுவப்பட்டது என்றும், இந்த இடம் சன்னி வக்பு வாரியத்தின் இடம் என்றும், அப்போதிலிருந்து அந்த இடம் தங்களுக்கு தான் சொந்தமாக இருந்தது என்று முஸ்லீம்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு தரப்பு விவாதங்களில் இருந்தும் எவ்வித முடிவுகள் எடுக்கமுடியாமல், நீதிபதிகள் கான் மற்றும் அகர்வால் திணறினர்.

ஐரோப்பிய புவியியலாளர் ஜோசப் டைபெந்தாலரை மேற்கோள் காட்டிய நீதிபதி கான், டைபெந்தாலரின் கூற்றுப்படி, 1786ம் ஆண்டிற்கு முன்னர் அங்கு ஒரு கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்காரே தவிர, 1528ம் ஆண்டில் மசூதி கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மன்னர் பபுர் உத்தரவின் பேரில் மிர் பாஹி 1528ம் ஆண்டில், மசூதி கட்டியதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று நீதிபதி சர்மா தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

 

publive-image

பழமையான இந்து கோயில் இருந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டதா?

நிலம் குறித்த விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் வேறுபட்ட பார்வைகளை கொண்டிருந்தனர்.

நீதிபதி கான் தனது உத்தரவில், மசூதி கட்டப்படுவதற்காக, அங்கு எவ்வித கோயில்களும் இடிக்கப்படவில்லை. ஆனால், மசூதி கட்டப்பட்ட இடத்தில் அதற்கு முன்பாக கோயில் இருந்ததற்கான தரவுகள் இருந்துள்ளன. அவர்கள் பயன்படுத்திய கட்டுமானபொருட்களும் இருந்துள்ளன.

இந்துக்கள் பெரிய அளவிலான அந்த இடத்தில், ராமர் பிறந்த இடமான அந்த சிறிய இடத்தின் மீதே அதீத ஈடுபாடு கொண்டுள்ளனர். அதை தேடும் முயற்சியிலேயே அவர்கள் தீவிரமாக இருந்துள்ளனர்.

நீதிபதி கான் தனது உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ராம் சாபுத்ரா மற்றும் சீதா ரசோய், 1855ம் ஆண்டுக்கு முன் வாழ்ந்துள்ளனர். இந்து வழிபாட்டாளர்கள் அங்கு வழிபாடுகளை நடத்திவந்துள்ளனர். இதனடிப்படையிலேயே, அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் மூவருக்கும் சரிசம பங்கு என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி அகர்வாலின் உத்தரவின்படி, அங்கு உள்ள கட்டடம், முஸ்லீம் மதத்தினரால் பயன்படுத்தப்படவில்லை. 1856-57ம் ஆண்டுகளுக்கு பிறகே, சர்ச்சைக்குரிய அந்த இடத்தின் வெளிப்புற பகுதி, இந்து மக்களால் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இடத்தின் உட்புற பகுதி, இந்து மற்றும் முஸ்லீம் என இரண்டு மதத்தினராலும் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

நீதிபதி சர்மா தனது உத்தரவில், இந்து கோயிலின் இடிபாடுகளுக்கிடையில் தான் மசூதி கட்டப்பபட்டுள்ளது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று வெளியான இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையின்படி, தொகுக்கப்பட்டுள்ள 265 தரவுகளின் படி,அங்கு 11 மற்றும் 12ம் நூற்றாண்டு காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேவநாகரி எழுத்துருவிலான ஆவணங்கள் கிடைத்துள்ளதன் மூலம், அங்கு இந்து கோயில் இருந்தது புலனாகியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ராகேஷ் திவாரியும், பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டே, அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1949ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் இந்து சிலைகள் வைக்கப்பட்டதா? அல்லது அங்கு ஏற்கனவே இருந்ததா?

நீதிபதிகள் கான் மற்றும் சர்மா தங்களது உத்தரவில் மசூதியின் உட்புறத்தில் இந்து கடவுள் சிலைகள், குறிப்பிட்ட அந்தநாளின் இரவில் மீட்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், நீதிபதி அகர்வாலோ தனது உத்தரவில், 1949 டிசம்பர் 22ம் தேதிக்கு முன்னதாகவே, அங்கு இந்து கடவுள் சிலைகள் இருந்துள்ளன. அந்த கட்டடத்தின் வெளிப்புறத்தில் ராம் சாபுத்ரா வழிபாட்டிற்கு இந்த கடவுள் சிலைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் வெளிப்புறத்தில் ராம் சாபுத்ரா, பந்தார், சீதா ரசோய் உள்ளிட்டோரிவ் சிலைகள் இருந்ததா? 1992ம் ஆண்டில் இந்த சிலைகளும் இடிக்கப்பட்டதா?

1885 முதல் 1950ம் ஆண்டு வரைபடத்தின்படி, இந்து கடவுள் சிலைகள் கட்டடத்தின் வெளிப்புற பகுதியில் இருந்தது உறுதிசெய்யப்பட்டது. 1992 டிசம்பர் 6ம் தேதி நடந்த இடிப்பின்போது இந்த சிலைகளும் சேதமுற்றதாக அனைத்து அமைப்புகளும் ஒப்புக்கொண்டன.

நீதிபதி கான், ஐரோப்பிய புவியியிலாளர் டைபெந்தாலரின் இந்திய பயணத்தை மேற்கோள் காட்டில டைபெந்தாலர் 1766 முதல் 1771ம் ஆண்டு வரையிலான கட்டத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ராமர் கோயில் அங்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான தகவல்கள், அரசு கெஜட்டிலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நீதிபதி கான் அடுத்து தெரிவித்த தகவலில் தான் முரண்பாடு உள்ளது, அதுயாதெனில், மசூதி கட்டப்பட்டபோது, இந்துக்கள், அந்த கட்டடத்தின் குறிப்பிட்ட பகுதி வரை இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர் என்ற கூற்று மட்டும் எதிர்வினையாற்றுவதாக உள்ளது.

அந்த இடம் யாருக்கு சொந்தமாக உள்ளது?

கட்டடத்தின் உட்புற பகுதிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நீதிபதி அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, வெளிப்புற பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. இந்த நடைமுறை, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும், இந்துக்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

நீதிபதி சர்மா தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, வக்பு வாரியத்தின் நிதி நிலவரத்தை பொறுத்து மட்டும், அந்த இடம் முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்று கூறிவிட முடியாது. மசூதியின் உட்புற பகுதியில் உள்ள தூண்களில், இந்து கடவுள்களின் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கட்டடம், முஸ்லீம்களுக்கு முழுவதுமாக சொந்தம் என்று யாராலும் சொல்லிவிட இயலாது. கட்டடத்தின் வெளிப்புற பகுதியில் யார் வேண்டுமானாலும் (முஸ்லீம்களையும் சேர்த்து) போய் பார்க்கலாம். இந்துக்கள் அங்கு கட்டடம் கட்டப்ட்ட பிறகும் வழிபாடு நடத்தி வந்துள்ளதால், கட்டடத்தின் வெளிப்புற பகுதி, இந்துக்களுக்கே சொந்தம் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி கான் தனது உத்தரவில், பபுர் காலத்தில், இங்கு மசூதி கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல், பழமையான இந்து கோயிலை இடித்துதான் அங்கு மசூதி கட்டப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இந்து அமைப்பால் தரப்படவில்லை. இதன்காரணமாக, இரண்டு அமைப்பினருக்கும் இந்த இடம் சரிபாதி சொந்தம் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?

நீதிபதி அகர்வால் : கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது 1950க்கு முன்னர் வரை, அந்த இடம் மசூதி இடம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்து அமைப்புகள் இதனை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையிலேயே இந்த விவகாரம், பெரும் விவாதமாக மாறியுள்ளது.

நீதிபதி சர்மா : இந்து கோயிலை இடித்தே, இங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதற்கு 200க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இந்து கோயிலுக்காக கட்டுமான பொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக, அங்கு மசூதி கட்டப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதி கான் : யாரோ ஒருவரின் இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதால் அதனை முக்கியத்துவம் இல்லாத மசூதி என்று சொல்லிவிட முடியாது. கோயில் கட்டுமான பொருட்கள் அங்கு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் அதில் எந்தளவுக்கு உறுதித்தன்மையுள்ளது என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது.

பைஜாபாத் சிவில் கோர்ட்டில், பாபர் மசூதி கட்டுமான விபரங்கள், 1950ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக, இது மீண்டும் அலகாபாத் நீதிமன்றத்தில் மறுதாக்கல் செய்யப்பட்டது.

தமிழில் : டி.கே.குமரன் பாபு

Ayodhya Temple Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment