Advertisment

மாலத்தீவு புதிய போலீஸ் அகாடமி: இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியத்துவம் என்ன?

புதிய போலீஸ் அகாடமி திறப்பு விழாவுடன், ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமிக்கும் மாலத்தீவு போலீஸ் சேவைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

author-image
WebDesk
New Update
Maldives new police academy open, Maldives - India, மாலத்தீவு புதிய போலீஸ் அகாடமி திறப்பு, இந்தியாவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியத்துவம், Maldives new police academy, Maldives India bilateral security cooperation

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் மார்ச் 27 வரை இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மாலத்தீவுக்கு செல்கிறார். அங்கே அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு, பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்கிறார். இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அட்டு நகரில், இந்திய நிதி உதவியின் கீழ் நிறுவப்பட்ட தேசிய காவல் மற்றும் சட்ட அமலாக்கக் கல்லூரியின் திறப்பு விழாவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.

Advertisment

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலிஹ், வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், மாலத்தீவு காவல்துறை ஆணையர் முகமது ஹமீத் மற்றும் பிற அரசு அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2020-ம் ஆண்டில் இந்தியா 400 மில்லியன் டாலர் கடன் அளித்த‘கிரேட்டர் மாலி கனெக்டிவிட்டி’ திட்டத்திற்கு முன்னர், சமீப காலம் வரை, காவல்துறை அகாடமியை நிறுவுவது இந்தியாவின் மிகப்பெரிய நிதிநல்கை பெற்ற திட்டமாக இருந்ததை ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இந்த அகாடமி திறப்பு விழாவுடன், ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி நிறுவனமான சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி மற்றும் மாலத்தீவு போலீஸ் சேவை ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. “(இது) பயிற்சி மற்றும் அதன் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் என்.சி.பி.எல்.இ-க்கு அதன் திறன்களை வளர்த்துக் கொள்ள ஒரு ஊக்கமாக இருக்கும். மாலத்தீவு போலீஸ் சேவைக்கான இந்தப் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, எங்கள் போலீஸ் அகாடமியில் மாலத்தீவுகளுக்கான பயிற்சி இடங்களின் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தியுள்ளோம்” என்று டாக்டர் ஜெய்சங்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய போலீஸ் அகாடமியின் தேவை என்ன?

இந்த போலீஸ் பயிற்சி அகாடமியை நிறுவுவது நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்தது. 2015-ல் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அதிபராக இருந்தபோது முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியாவை உள்ளடக்கிய அனைத்து திட்டங்களைப் போலவே, இதுவும் 2018-ல் அரசாங்கம் மாறி அதிபர் சோலிஹ் பதவியேற்கும் வரை தாமதத்தை எதிர்கொண்டது.

மாலத்தீவில் உள்நாட்டு அளவில், பயிற்சி அகாடமி சட்ட அமலாக்க திறன்களை வலுப்படுத்தவும், நாட்டின் முக்கிய கவலையான போதைப்பொருள் கடத்தலை எதிர்க்கவும் உதவும் என்று இந்த திட்டத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் indianexpress.com இடம் தெரிவித்தன.

“இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையே தற்காப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு சில காலமாக நடந்து வருகிறது. மேலும், அவர்களின் ஏராளமான பணியாளர்கள் இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக பயணம் செய்கிறார்கள்” என்று மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸின் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா கூறினார். அதன் பகுப்பாய்வுகள், ஆராய்ச்சிப் பகுதி மாலத்தீவுகளை உள்ளடக்கியது. இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் பெரிய கண்ணோட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஸ்தாபனத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் குல்பின் சுல்தானா கூறினார்.

மாலத்தீவுகள் உள்துறை அமைச்சர் ஷிம்ரன்ஏப் உடனான சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மாலத்தீவுகள் உள்துறை அமைச்சர் ஷிம்ரன்ஏப் உடன் பனுள்ள சந்திப்பு. சட்ட அமலாக்கத்தில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா மாலத்தீவுகள் சிறப்பு கூட்டுறவுக்கு அவரது வலுவான ஆதரவைப் பாராட்டுகள்.” என்று கூறினார்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளின் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு குழுவான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டை டாக்டர் சுல்தானா சுட்டிக்காட்டினார். அங்கே உளவுத்துறை பகிர்வு இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். மூன்று நாடுகளும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகள், இந்த வகையான கூட்டுப் பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்பை முக்கியமானதாக ஆக்குகின்றன.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் & எச்.இ. இந்திய நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட அட்டு நகரில் காவல்துறை மற்றும் சட்டம் மற்றும் அமலாக்கத்திற்கான தேசிய கல்லூரியை அதிபர் சோலிஹ் கூட்டாக திறந்து வைத்தார்கள்.

இந்த அகாடமி எவ்வாறு உதவும்?

கடந்த சில மாதங்களாக மாலத்தீவுகளும் இந்தியாவும் வெளியிட்ட கூட்டறிக்கைகளின் ஆய்வு, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று வன்முறை தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலைத் தடுப்பதும் எதிர்கொள்வதும் என்பதைக் காட்டுகிறது. அட்டு நகரில் உள்ள இந்த பயிற்சி அகாடமியின் நோக்கங்களில் ஒன்று அந்த சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்த பிரச்சினைகளை கையாள்வதில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும் என்று டாக்டர் சுல்தானா கூறினார்.

“தீவிரமயமாக்கல் என்பது மாலத்தீவிற்கு ஒரு தீவிர பிரச்சனை. அவர்களுக்கென உள்நாட்டு பயங்கரவாதக் குழு இல்லை. ஆனால், தீவிரமயமாக்கல் ஒரு பிரச்சினை” என்று டாக்டர் சுல்தானா விளக்கினார்.

தீவிரமயமாக்கல் என்பது மாலத்தீவு சமாளிக்கும் ஒரு புதிய சவால் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் முன்னாள் அதிபர் மொஹமத் நஷீத் மீதான வெடிகுண்டு தாக்குதல் பிரச்சினையை கூர்மையாக கவனம் செலுத்தியது. இது அழுத்தமான கவலையாக மாறியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுக் கழகத்தில் டாக்டர். அமித் ரஞ்சனின் அறிக்கையின்படி, நஷீத் மீதான இந்தத் தாக்குதல் “தீவிரவாதக் குழுக்கள் மாலத்தீவில் தங்கள் நிலையைத் தீவிரமாக முன்னெடுத்து வருவதைத் தெளிவாகக் காட்டுகிறது. மாலத்தீவில் தீவிர சித்தாந்தம் வலுப்பெற்று, சமீப காலங்களில், அரசு நிறுவனங்களால் உதவி பெற்று வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாலத்தீவின் அண்டை நாடுகளில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலை உள்நாட்டுப் பிரச்சினையாகக் குறைத்து மதிப்பிட முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இது அவர்களின் பிராந்தியங்களுக்குள் பரவி, உறுதியற்ற தன்மையையும் அழிவையும் ஏற்படுத்தும். இந்த வளர்ந்து வரும் பிரச்சனையை சமாளிக்க சோலிஹ் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று டாக்டர் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இங்குதான் தேசியக் காவல் மற்றும் சட்ட அமலாக்கக் கல்லூரி மற்றும் மேம்பட்ட பயிற்சித் திட்டங்கள் மாலத்தீவுக்கு உதவுவதோடு பரந்த தெற்காசியப் பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

மாலத்தீவு தீவிரமயமாக்கலை எவ்வாறு கையாள்கிறது?

தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அறக்கட்டளையின் 2020-ம் ஆண்டு அறிக்கையின்படி, மாலத்தீவுகள் உலகில் அதிக தனிநபர் வெளிநாட்டுப் போராளிகளைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. 2019 டிசம்பரில் மாலத்தீவு காவல்துறை ஆணையர் மொஹமத் ஹமீத் வெளியிட்ட அறிக்கை, மாலத்தீவில் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை கடைபிடிக்கும் சுமார் 1,400 இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கலாம் என்றும் சுமார் 423 குடிமக்கள் ஈராக்கில் உள்ள போர் பகுதிகளுக்கு செல்ல முயன்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. இதில் 173 பேர் அங்கே செல்வதில் வெற்றி பெற்றனர்.

மாலத்தீவில் இந்த அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகளின் பின்னணியில் பல காரணிகள் உள்ளன என்று டாக்டர் சுல்தானா கூறுகிறார். இது இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு கவலை அளிக்கிறது. இந்த பிரச்சினை உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரச்சினைகளின் நிலையை உள்ளடக்கியது. இதை சோலிஹ் அரசாங்கம் சமாளிக்க போராடியது.

“(ஆளும்) மாலத்தீவு ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம், இந்த தீவிரமயமாக்கல் பிரச்சினையைச் சமாளிக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. அக்கட்சி மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு பெயர் பெற்றது. ஆனால், அது அதாலத் கட்சி மற்றும் பிறருடன் கூட்டணியில் உள்ளது. அதனால் என்ன நடக்கிறது என்றால், அவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்பு ஆகிய சட்டங்களை நிறைவேற்றுவது கடினமானதாக இருக்கிறது” என்று டாக்டர் சுல்தானா கூறினார்.

மாலத்தீவு 2023-2024-ம் ஆண்டில் அதன் மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தலை நோக்கிச் செல்கிறது. அரசியல் கட்சிகள் சில நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தால், அவை இஸ்லாம் அல்லாததாகக் கருதப்படும் என்று அவர் மேலும் கூறினார். “நஷீத் தனது வாழ்க்கை முறையால் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல. இதுபோன்ற விஷயங்கள் உள்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மாலத்தீவு எதிர்கொள்ளும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை தேசியக் காவல் மற்றும் சட்ட அமலாக்கக் கல்லூரி எந்த ஆலோசனையும் இல்லாமல் ஒரே கையால் கட்டுப்படுத்தும், ஆனால் இது ஒரு தொடக்கமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India S Jaishankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment