Advertisment

கருப்பு பூஞ்சை மருந்துக்கு பற்றாக்குறை: காரணம் என்ன?

black fungus drug: இந்தியாவில் மியூகர் மைகோசிஸ் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கு பயன்படுத்தும் Amphotericin B மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தேவை எவ்வளவு? எவ்வளவு மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது? எதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
black fungus

நாட்டில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 9,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் லிப்சோமல் ஆம்ஃபோடெரிசின் என்ற மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மருந்து பற்றாக்குறைக்கான காரணங்களை விளக்குமாறு மத்திய அரசிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

மியூர்மைகோசிஸ் என்பது ஒரு அரிய பூஞ்சை தொற்று. 2019ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கையில் பாகிஸ்தானுடன் சேர்ந்து மதிப்பீடுகள் செய்யப்பட்ட நாடுகளில் இந்தியாவில் அதன் தாக்கம் 140 Per மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி எய்ம்ஸ் தலைவரும் கோவிட்19 பணிக்குழு உறுப்பினருமான ரன்தீப் குலேரியா கூறுகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோவிட் தொடர்புடைய மியூகர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தன. கோவிட் சிகிச்சைக்காக ஸ்டெராய்டுகளை அதிக அளவில் உட்கொள்ளும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பிறகு சுகாதார அமைச்சகம் இதனை கருப்பு பூஞ்சை தொற்று என அறிவித்தது. அனைத்து மாநிலங்களும் பூஞ்சை தொற்று பாதிப்பு என சந்தேகிக்கப்படுவோர் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மே 22ஆம் தேதி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், இந்தியாவில் மியூகர்மைகோசிஸால் 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதில் பாதி அளவு குஜராத்திலும்(2,281), மகாராஷ்ட்ராவிலும்(2,000) பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை 245 புதிய பாதிப்பு பதிவாகியுள்ளது.

publive-image

பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை

ஆரம்பகாலத்திலேயே நோயை கண்டறிதல், விரைவான சிகிச்சை போன்றவை முக்கியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் பூஞ்சையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்கின்றனர்.

liposomal Amphotericin B எனப்படும் பூஞ்சை தடுப்பு மருந்து முதன்மையான மருத்துவம் ஆகும். இது கிடைக்கவில்லை என்றால் Amphotericin B deoxycholate பயன்படுத்தலாம். மூன்றாவதாக Pfizer நிறுவன தயாரிப்பான isavuconazole பயன்படுத்தலாம். இது மாத்திரை மற்றும் ஊசி வடிவிலும் கிடைக்கும். இவை மூன்றும் கிடைக்காத பட்சத்தில் posaconazole பயன்படுத்தலாம். இதுவும் மாத்திரை மற்றும் ஊசி என வரும் பொதுவான மருந்து.

மும்பை கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் தனு சிங்கால் கூறுகையில், பூஞ்சை தொற்றுக்கு liposomal Amphotericin மருந்தை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து அது கிடைக்காத பட்சததில் மற்ற மருந்துகள் கொடுக்கப்படுகிறது. Amphotericin B deoxycholate மருந்தும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீரக பிரச்சனைகள் இல்லாத இளம் நோயாளிகளுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தலாம் என கூறியுள்ளார்.

Amphotericin பற்றாக்குறை

Amphotericin சிகிச்சையானது 4-6 வாரங்கள் நீடிக்கும், 90-120 மருந்துகள் தேவைப்படலாம், மேலும் ரூ .5 லட்சம் -8 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவாகும். ஆனால் மருந்துகளின் பற்றாக்குறையே பிரதான தடையாக வெளிப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு சராசரியாக 100 குப்பிகள் தேவை என கணக்கிட்டால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள 9000 பேருக்கு 9 முதல் 10லட்சம் Amphotericin தேவைப்படும். மேலும் இது கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரத் சீரம்ஸ் & வேசின்ஸ், BDR பார்மாசிட்டிகல்ஸ், சன் பார்மா, சிப்லா மற்றும் லைஃப் கேர் இனோவேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் Amphotericin மருந்தை தயாரிக்கின்றன. மயிலான் இந்தியாவில் மருந்து மற்றும் பொருட்களை இறக்குமதி செய்கிறது.

தொற்று பாதிப்பு அளவு சிறியதாக இருப்பதால் உற்பத்தி அளவும் குறைவாகவே உள்ளது. அரசின்"கையிருப்பு" யைத் தொடர்ந்து, அனைத்து உற்பத்தியாளர்களும் சேர்ந்து மே மாதத்தில் 1.63 லட்சம் Amphotericin B குப்பிகளை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய அரசு மே 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 3.63 லட்சம் குப்பிகளை இறக்குமதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசின் தரவுகளின்படி, மே 10-31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்காக 67,930 Amphotericin B மருந்துகள் மட்டுமே மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் தேவையை விட குறைவான அளவு. மாதந்தோறும் மூன்று லட்சம் மருந்துகள் தேவைப்படும் நிலையில், 21,590 மருந்துகளை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மகாராஷ்ட்ரா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

ஜூன் மாதத்தில் உள்நாட்டு உற்பத்தி 2.55 லட்சம் குப்பிகளாகவும், இறக்குமதி செய்யப்படும் குப்பிகள் 3.15லட்சம் என்றும், இதனால் மொத்தம் 5.70 லட்சம் குப்பிகள் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐந்து புதிய நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வாங்கியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த Natco Pharmaceuticals, புனேவை சேர்ந்த Emcure Pharmaceuticals, Alembic Pharmaceuticals, Gufic Biosciences, and Lyka Pharmaceuticals( குஜராத்). ஆனால் இந்த நிறுவனங்கள் ஜூலை மாதத்தில்தான் உற்பத்தியை தொடங்கும். இவை 1.11 லட்சம் குப்பிகளை மட்டுமே உற்பத்தி செய்யும். இதனால் நாடு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை சார்ந்துதான் உள்ளது.

சிக்கல்கள் என்ன?

மருந்து உற்பத்திக்கு தேவையான இரண்டு மூலப்பொருட்களின் பற்றாக்குறை உற்பத்தியை தாக்கியுள்ளது.

முதலாவதாக உள்ள மூலப்பொருள் active pharmaceutical ingredient (API) Amphoterecin B ஆகும். இதன் முக்கிய சப்ளையர் சாராபாய் குழுமத்திற்கு சொந்தமான Synbiotics Limited ஆகும். சாராபாய் மாதத்திற்கு 25 கிலோ சப்ளை செய்ய முடியும். இதன் மூலம், 1.5 லட்சம்-2 லட்சம் வரை ஊசி மருந்துகளை தயாரிக்க முடியும்.

பி.டி.ஆர் மருந்துகளின் தலைவரும் எம்.டி.யுமான தர்மேஷ் ஷா கூறுகையில், முதலாவது செயலில் உள்ள மருந்து மூலப்பொருள் (ஏபிஐ) ஆம்போடெரெசின் பி ஆகும், இதன் முக்கிய சப்ளையர் . "சாராபாய் மாதத்திற்கு 25 கிலோ சப்ளை செய்ய முடியும், இதன் மூலம் நாங்கள் 1.5 லட்சம் -2 லட்சம் ஊசி தயாரிக்க முடியும்.

மற்ற உற்பத்தியாளர்களுக்கான ஒப்பந்தத்தில் Amphoterecin B தயாரிக்கும் கம்லா லைஃப் சயின்சஸ் எம்.டி டாக்டர் டி ஜே ஜாவர், API அடிப்படை மூலப்பொருள் என்று கூறினார். "இது லிபோசோமால் வடிவம் மற்றும் வெற்று வடிவம் இரண்டிற்கும் தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் API மூலப்பொருளை North China Pharmaceutical Group (NCPC) யிடம் இருந்து வாங்குவதாக தர்மேஷ் ஷா கூறியுள்ளார். அந்த நிறுவனம் ஜூன் மாத இறுதிக்குள் 40-50 கி வரையில் வழங்கும் என்றார்.

Amphoterecin API வழங்க Zhejiang Pharmaவுக்கு அவசரகால தற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

liposomal Amphoterecin B தயாரிக்க குறுகிய விநியோகத்தில் இரண்டாவது மூலப்பொருள் purified synthetic lipids. mRNA தடுப்பூசி தயாரிப்பில் Lipidsக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது.

டிசம்பரில் சுவிட்சர்லாந்தில் உள்ள லிபாய்டுடன் கோரப்பட்ட ஆர்டர்கள் இப்போது அனுப்பப்படுகின்றன என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். "நாங்கள் அவர்களை அணுகியுள்ளோம். அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் அடுத்த 4-6 வாரங்களில் நிலைமை எளிதாக்கப்பட வேண்டும், ”என்று ஷா கூறினார்.

இந்தியாவில் உள்ள ஒரே லிப்பிட் சப்ளையர் மும்பையை சேர்ந்த VAV Life Sciences. இது மாதம் 21 கி உற்பத்தி செய்யும். ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் உற்பத்தியை 65 கிலோவாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் அருண் கேடியா தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்கள் கிடைத்தால்கூட மருந்து உற்பத்திக்கு 21 நாட்கள் ஆகும், இது sterility testக்கு எடுக்கப்பட்ட நேரத்தை பொறுத்தது.

உயர்நீதிமன்ற கண்காணிப்பு

டெல்லியில் கோவிட் -19 நிலைமையை கண்காணித்து வரும் நீதிபதி விபின் சங்கி தலைமையிலான தில்லி உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், மே 19 அன்று பூஞ்சை எதிர்ப்பு மருந்து பற்றாக்குறையை கவனத்தில் எடுத்துக் கொண்டது.

மே 20ஆம் தேதி நீதிமன்றம் உடனடி இறக்குமதியின் அவசியத்தை வலியுறுத்தியது. ஏனெனில் இந்தியாவின் தேவையை விட உள்நாட்டு உற்பத்தி மிகக்குறைவு.திங்களன்று, நீதிமன்றம் திட்டமிடப்பட்ட உற்பத்தி மற்றும் இறக்குமதிகள் நோயாளிகளின் தேவைகளை விடக் குறையக்கூடும் என்றும், இடைவெளியைக் குறைக்க “கடுமையான நடவடிக்கைகள்” தேவை என்றும் கூறியது.

நீதிமன்றம் வியாழக்கிழமை மீண்டும் இந்த விவகாரத்தை எடுத்தது. மருந்து கிடைப்பது மற்றும் மருந்து உற்பத்தி குறித்த சமீபத்தியை நிலையை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புகளின் விவரங்களையும் கோரியுள்ளது.

மருந்து தேவைக்கு பற்றாக்குறை இருப்பதை பார்க்கும்போது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது. உற்பத்தி திட்டங்கள் எப்போது செயல்பாட்டுக்கு வந்து உற்பத்தி தொடங்கும் என தெளிவாக தெரியவில்லை என நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Black Fungus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment