ஆரம்ப விவாதத்திற்குப் பிறகு, கோவிட் -19 வைரஸ் பாதிப்பு நிலவும் சூழலில், மாஸ்க்குகளின் பயன்பாடு இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. முகமூடிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பெரும்பாலான விஞ்ஞான கருத்துகள் கூறுகின்றன. மேலும், ஒப்பீட்டளவில் சாதாரணமாக ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் கூட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்க முடியும். கடந்த சில நாட்களில், பல புதிய ஆய்வுகள் புதிய ஆதாரங்களுடன் இந்த ஆலோசனையை வலுப்படுத்தியுள்ளன. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்த முகமூடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் பரவல் கட்டுக்குள் இருக்கும் என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
அரிசோனா, ஹார்வர்ட் மற்றும் சிட்னியில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் படி, நியூயார்க்கில் உள்ள மக்கள்தொகைக்கு கணித மாதிரிகளைப் பயன்படுத்தி, 70% மக்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் ஒரு உயர்தர அளவில் தயாரிக்கப்பட்ட முகமூடியை அணிந்தால், வைரஸ் பரவலை அந்நகரத்திலிருந்து அகற்ற முடியும் என்று குறிப்பிடப்படுகிறது. குறைந்தது 80% மக்கள் தொடர்ந்து முகமூடிகளைப் பயன்படுத்தினால், அதே முடிவை முழு அமெரிக்காவிலும் அடைய முடியுமாம்.
குறைந்த தரம் வாய்ந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் கூட நோயின் பரவலைக் கணிசமாகக் குறைக்க வழிவகுக்கும், இருப்பினும் நீக்குதலை அடைய இதர சில உயர்தர தயாரிப்பு தேவைப்படும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
"மாஸ்க்குகளை பொதுவில் பயன்படுத்துதல் (குறைந்த செயல்திறன் கொண்ட துணி மாஸ்க் உட்பட) சமூக பரிமாற்றம் மற்றும் COVID-19 இன் சுமையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாஸ்க் பயன்படுத்துவது மட்டுமின்றி, தனி நபர் இடைவெளியையும் மக்கள் கடைபிடித்தால் COVID-19 பரவலை குறைக்க முடியும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆண்கள் தான் அதிக இலக்கா?. இந்த என்சைமின் அளவும் முக்கிய காரணமா?
80% மக்கள் ஏதேனும் ஒரு வகை மாஸ்க்குகளை பயன்படுத்தத் தொடங்கினால், அடுத்த இரண்டு மாதங்களில் நியூயார்க்கில் நிகழும் இறப்புகளில் 45% வரை தடுக்க முடியும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிந்து இறுதி செய்யப்பட இன்னும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும். இதற்கிடையில், நாம் மாஸ்க்குகளை மதிக்கத் தொடங்க வேண்டும். நமது நடத்தையை மாற்ற வேண்டும் மற்றும் இந்த புதிய முக துணைக்கு உடனடியாக மக்க பழகத் தொடங்க வேண்டும்," என்று இந்திய மார்பக சங்கத்தின் துணைத் தலைவரும். வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மகாராஷ்டிர அரசுகள் அமைத்த கமிட்டிகள் மற்றும் பல பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் சுந்தீப் சால்வி கூறினார்.
டாக்டர் சால்வி கூறுகையில், வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகள் கூட மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளார், எல்லோரும் அதைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். "நம்மிடம் இப்போது எளிமையான, எளிதில் கிடைக்கக்கூடிய, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வு இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், மாஸ்க்குகளை சரியாக அணிய வேண்டும். நீங்கள் வெளியே இருக்கும் எல்லா நேரங்களுக்கும் அவற்றை அணியவில்லை எனில் அவை எந்த பாதுகாப்பையும் வழங்காது" என்று அவர் கூறினார்.
நோயின் சமூக பரவலைத் தடுப்பதற்காக, வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகள் போதுமானவை, இவை சிறிய துகள்கள் பரவுவதைத் தடுப்பதில், தொழில்முறை அறுவை சிகிச்சை முகமூடிகளை விட மூன்று மடங்கு குறைவான செயல்திறன் கொண்டவை என்றாலும் கூட போதுமானவையே என்று மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் மாஸ்க் அணிவது, இந்த லாக்டவுன் காலத்தையும் குறைக்க உதவும் என்று அந்த ஆய்வு கூறியது. "பரவலான சோதனை, தொடர்புத் தடமறிதல், பாதிக்கப்படக்கூடிய எவரையும் தனிமைப்படுத்துதல், கை கழுவுதல் மற்றும் உடல் ரீதியான தூரத்தோடு இணைந்து பயன்படுத்தும்போது, முகம் முகமூடிகள் சமூக பரவலைக் குறைக்க ஒரு மதிப்புமிக்க கருவியாகும்" என்று முன்னணி எழுத்தாளர் ஜெர்மி ஹோவர்ட் ஒரு மின்னஞ்சல் பதிலில் கூறினார்.
ஆனால் மாஸ்க்குகளை பயன்படுத்துவது மக்கள் உடல் ரீதியான விலகல் விதிகளை புறக்கணிக்க வழிவகுக்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். “வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருப்பது முக்கியம், ஏனென்றால் இருமலுடன் நீங்கள் பேசினால் மாஸ்க் தடுப்பு அரணாக இருக்காது. நீங்கள் வீட்டில் இருக்கும் போது, தனிமையில் இருப்பீர்கள், அதேசமயம் பாதுகாப்பாக இருப்பீர்கள். மாஸ்க் அணிவது மேலும் பாதுகாக்கிறது" என்று ஹோவர்ட் கூறினார்.
"மாஸ்க்குகள் உலகளவில் அணியும்போது லாக்டவுன் காலம் குறைவாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று அவர் கூறினார். மக்கள் மாஸ்க்குகள் அணிவதை நிறுத்தினால், குளிர்காலத்தில் "இரண்டாவது அலை" என்பது போல் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தார்.
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் ஜக்மீத் சிங் கூறுகையில், மாஸ்க்குகளின் பெரிய மதிப்பு என்பது, இருவழிப் பாதுகாப்பை அளிப்பது தான். “மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது, அவர்கள் மற்றவர்களை நோய்த்தொற்றுடையவர்களாகவும், தங்களுக்கு தொற்று ஏற்பட சாத்தியமுள்ளது என்று கருத வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிவதால், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்டது. மேலும் தங்களைப் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார்.
மற்றொரு ஆய்வில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருமல் / தும்மலின் போது (அல்லது சத்தமாகப் பேசும்போது) வாயிலிருந்து துகள்களின் காற்றியக்கவியல் ஓட்டத்தை உருவகப்படுத்தி வைரஸின் பரவலைத் தடுக்க முகமூடிகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.
“மாஸ்க் அணியவில்லை எனில், இருமல் அல்லது தும்மலின் போது பரந்த அளவிலான விநியோகம் கொண்ட நீர்த்துளிகள் அசாத்திய வேகத்தில் வெளியேற்றப்படுகின்றன. பெரிய நீர்த்துளிகள் (சுமார் 125 மைக்ரானுக்கு மேற்பட்ட விட்டம்) சுமார் 2 மீட்டருக்குள் தரையில் விழுகின்றன, அதே நேரத்தில் சிறிய ஏரோசோலைஸ் செய்யப்பட்ட நீர்த்துளிகளை குறிப்பிடத்தக்க தூரங்களுக்கு (சுமார் 5 மீட்டர்) கொண்டு செல்கின்றன"என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனாவும் கோடையும்: இன்னும் ஒரு தீர்க்கப்படாத கேள்வி
ஐ.ஐ.டி பம்பாயின் குருசாமி குமாரசாமி, ஃபைசரைச் சேர்ந்த பங்கஜ் தோஷி மற்றும் புனேவைச் சேர்ந்த அன்சிஸ் சாஃப்ட்வேரைச் சேர்ந்த பிரேம் மற்றும் அவரது சகாக்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். வாயில் இருந்து வரும் பெரிய நீர்த்துளிகள் முகமூடியால் சிக்கிக்கொண்டாலும், சிறிய நீர்த்துளிகள் மாஸ்க் அணியாத போது வெளியாகும் சுமார் 2 மீட்டருடன் ஒப்பிடும்போது, 30 செ.மீ க்கும் குறைவான தூரத்திற்கு வெளிப்படுகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மாஸ்க் அணியாத ஒரு நபர் தும்மிய ஒரு நிமிடத்திற்குள், வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளில் சுமார் 37% வைரஸ், 2 மீட்டர் தூரம் வரை சென்று தரையில் விழுகிறது. மீதமுள்ள 63% காற்றில் இடைநீக்கம் செய்யப்படுகிறது. தனிநபர் இடைவெளி 2 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை தொடரப்படும் போது, வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இருப்பினும், ஒரு முகமூடி வெல்கிறது எனில், சுமார் 70% வைரஸ் நிறைந்த நீர்த்துளிகள் முகமூடியில் அடைபடுகிறது என்று அர்த்தம். அதே நேரத்தில் மாஸ்க்கில் இருந்து தப்பித்து வெளியே வரும் நீர்த்துளிகள் 1.5 மீட்டர் தூரம் தாண்டி செல்லாது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
"நீர்த்துளிகளில் உள்ள வைரஸ் துகள்கள் 1.5 மீட்டருக்குள் இடைநீக்கம் செய்யப்படுகின்றன, ஆனால் இந்த இடைநிறுத்தப்பட்ட செறிவு அந்த தூரத்திற்குப் பிறகு கடுமையாக வீழ்ச்சியடைகிறது," என்று ஆய்வு கூறியது, ஒரு எளிய பருத்தி முகமூடியை அணிவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வான்வழி பரவுவதை வெகுவாகக் குறைக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், கண்டிப்பாக "இரண்டு மீட்டர் கடுமையான உடல் தூரத்தை" கடைபிடித்தே ஆக வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.