Advertisment

RT-PCR-ஐ விட வேகமாக கோவிட் -19 சோதனையை உருவாக்கும் முயற்சி!

NIH scientists develop faster Covid 19 test than RT PCR Tamil News ஆய்வகப் பணியாளர்களுக்கு பாசிட்டிவ் மாதிரிகளைக் கையாள பாதுகாப்பானதாக ஆக்குகிறது

author-image
WebDesk
New Update
NIH scientists develop faster Covid 19 test than RT PCR Tamil News

NIH scientists develop faster Covid 19 test than RT PCR Tamil News

NIH scientists develop faster Covid 19 test than RT PCR Tamil News : SARS-CoV-2-ஐ கண்டறிய அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) விஞ்ஞானிகள் புதிய மாதிரி தயாரிப்பு முறையை உருவாக்கியுள்ளனர். இந்த முறை வைரஸின் மரபணு ஆர்என்ஏ பொருளைப் பிரித்தெடுப்பதைத் தவிர்த்து, சோதனை நேரம் மற்றும் செலவைக் குறைக்கும்.

Advertisment

இந்த முறை அமெரிக்கத் தேசிய கண் நிறுவனம் (என்ஈஐ), என்ஐஎச் மருத்துவ மையம் (சிசி) மற்றும் தேசிய பல் மற்றும் கிரேனியோஃபேஷியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிசிஆர்) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பால் உருவானது.

நிலையான சோதனைகள் RT-qPCR எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டறியக்கூடிய நிலைகளுக்கு வைரஸ் ஆர்என்ஏவை பெருக்குவதை உள்ளடக்கியது. ஆனால் முதலில் மாதிரியிலிருந்து ஆர்என்ஏ பிரித்தெடுக்கப்பட வேண்டும். தொற்றுநோய் பரவுதலின்போது ஆர்என்ஏ பிரித்தெடுத்தல், கருவிகளின் உற்பத்தியாளர்கள் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வக சப்ளை நிறுவனமான பயோ-ராட் தயாரித்த ‘Chelex 100 பிசின்’ என்று அழைக்கப்படும் ஏஜெண்டைப் பயன்படுத்தி RT-qPCR கண்டறிதலுக்கான மாதிரிகளில் SARS-CoV-2 RNA-ஐப் பாதுகாக்கிறது.

"நாசோபார்னீஜியல் மற்றும் உமிழ்நீர் மாதிரிகளை பல்வேறு வீரியன் செறிவுகளுடன் பயன்படுத்தினோம். அவை நேரடி ஆர்என்ஏ கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படுமா என்பதை மதிப்பீடு செய்தோம். அதற்கான பதில் ஆம் என்று கிடைத்தது. இது, குறிப்பிடத்தக்க அதிக உணர்திறன் கொண்டது. மேலும், இந்த தயாரிப்பு வைரஸை செயலிழக்கச் செய்தது. ஆய்வகப் பணியாளர்களுக்கு பாசிட்டிவ் மாதிரிகளைக் கையாள பாதுகாப்பானதாக ஆக்குகிறது” என்கிறார் அமெரிக்க தேசிய கண் நிறுவனத்தின் முன்னணி எழுத்தாளர் பின் குவான்.

இந்தக் குழு, RT-qPCR மூலம் வைரஸை நேரடியாகக் கண்டறிய அனுமதிக்கும் போது குறைந்த சீரழிவு கொண்ட மாதிரிகளில் RNA-ஐப் பாதுகாக்கக்கூடியவற்றை அடையாளம் காண செயற்கை மற்றும் மனித மாதிரிகளைப் பயன்படுத்தி பல்வேறு இரசாயனங்களைச் சோதித்தது.

சோதனையைச் சரிபார்க்க, அவர்கள் நோயாளியின் மாதிரிகளைச் சேகரித்து வைரஸ் போக்குவரத்து அல்லது என்ஐஎச் அறிகுறி சோதனை வசதியில் புதிதாக உருவாக்கப்பட்ட செலேட்டிங்-பிசின்-பஃப்பரில் சேமித்து வைத்தனர்.

வழக்கமான ஆர்என்ஏ பிரித்தெடுத்தல் மற்றும் ஆர்டி-கியூபிசிஆர் சோதனையைப் பயன்படுத்தி வைரஸ் போக்குவரத்தில் உள்ள மாதிரிகள் என்ஐஎச் மருத்துவ மையத்தில் உள்ள கோவிட் -19 சோதனை குழுவால் சோதிக்கப்பட்டன. chelating-ரெசின்-buffer-ல் உள்ள மாதிரிகள் சூடுபடுத்தப்பட்டன மற்றும் வைரஸ் ஆர்என்ஏ ஆர்டி-கியூபிசிஆரால் சோதிக்கப்பட்டது. புதிய தயாரிப்பு தரமான முறையுடன் ஒப்பிடும்போது, சோதனைக்குக் கிடைக்கும் ஆர்என்ஏ-வை கணிசமாக அதிகரித்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment