Advertisment

பருவநிலை மாற்றம் அறிவியலுக்கு முதல் நோபல் பரிசு

இந்த துறையில் முன்னோடியாக இருந்த சியுகுரோ மனபே, இயற்பியலுக்கான நோபல் பரிசின் ஒரு பாதியை சக பருவநிலை விஞ்ஞானி கிளாஸ் ஹஸெல்மேன் உடன் பகிர்ந்து கொள்கிறார். ஜார்ஜியோ பாரிசி சிக்கலான அமைப்புகளில் தனது பணிக்காக மற்றொரு பாதி நோபல் பரிசை வென்றார்.

author-image
WebDesk
New Update
Nobel Prize Physics winners, Climate change science, நோபல் பரிசு, இயற்பியலுக்கான நோபல் பரிசு, பருவநிலை மாற்றத்துக்கான நோபல் பரிசு, சியுகோ மனபே, க்ளாஸ் ஹஸெல்மேன், ஜார்ஜியா பாரிஸ், Syukuro Manabe, Klaus Hasselmann, Georgio Paris

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பருநிலையை மையப்படுத்திய கார்பன் ப்ரீஃப் ஆன்லைன் ஆய்வு வெளியீடு 2015ம் ஆண்டில், பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையேயான குழு (ஐபிசிசி) ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின் முக்கிய ஆசிரியர்கள் இதுவரை வெளியிடப்பட்ட மூன்று செல்வாக்குள்ள பருவநிலை மாற்ற ஆராய்ச்சி கட்டுரைகளை அடையாளம் காணுமாறு கேட்டது. அதிக வாக்குகளைப் பெற்ற இந்த ஆய்வுக்கட்டுரை 1967-ல் சியுகுரோ மனபே மற்றும் ரிச்சர்ட் வெதரால்ட் ஆகியோரின் ஒரு கட்டுரை ஆகும். இது முதன்முறையாக, புவி வெப்பமடைதலில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவியின் தாக்கத்தை விவரித்தது.

Advertisment

பருவநிலை அறிவியல் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் மீது இப்போது 90 வயதான மனபேயின் ஆய்வு செலுத்தும் செல்வாக்கு ஈடு இணையற்றது. அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது (வெதர்லாந்து 2011ல் இறந்தார்).

மனபே நோபல் பரிசின் ஒரு பாதியை மற்றொரு பருவநிலை விஞ்ஞானி கிளாஸ் ஹஸெல்மேன் உடன் பகிர்ந்து கொண்டார். நோபல் பரிசின் மற்றொரு பாதி பருவநிலை மாற்றத்தில் சிக்கலான அமைப்புகளைப் புரிந்துகொள்வதில் அவரது பங்களிப்புக்காக ஜார்ஜியோ பாரிசிக்கு அளிக்கப்பட்டது. இவை மிக அதிக அளவில் சீரற்ற தன்மை கொண்ட அமைப்புகள்; வானிலை மற்றும் பருவநிலை நிகழ்வுகள் சிக்கலான அமைப்புகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும். நோபல் பரிசு குழுவினர் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பருவநிலை அமைப்பில் சிக்கலான அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான அற்புதமான பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.

பருவநிலை விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. ஐபிசிசி 2007ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தது. அதே நேரத்தில் 1995ல் பால் க்ரூட்ஸனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஓசோன் படலத்தில் அவரது பணிக்காக வளிமண்டல அறிவியலைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இந்த கௌரவத்தை வென்றுள்ளார்.

எனவே, மனபே மற்றும் ஹஸெல்மேன் ஆகியோருக்கான இந்த அங்கீகாரம் இன்றைய உலகில் பருவநிலை அறிவியல் துறை கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்வதாக கருதப்படுகிறது.

“இந்த 1967ம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை முக்கிய பணி ஆகும். இது புவி வெப்பமடைதல் செயல்முறைகளின் முதல் விளக்கமாகும். மனபே மற்றும் வெதர்லேண்ட்டும் முதல் முறையாக ஒரு பருவநிலை மாதிரியை உருவாக்கினார்கள். இன்று நாம் இயங்கும் அதிநவீன மாதிரிகள், பருவநிலை அறிவியலுக்கு மிகவும் முக்கியமானதாகும். மனபே உருவாக்கிய அந்த மாதிரிக்கு அவர்களின் முன்னோடிகளைக் கண்டுபிடிக்கிறது. அவர் பல வழிகளில் முன்னோடியாக இருந்தார். பருவநிலை மாதிரியின் தந்தை என்று புனேவின் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் காலநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆர் கிருஷ்ணன் கூறினார்.

1990களின் பிற்பகுதியில் ஜப்பானில் உலகளாவிய மாற்றத்திற்கான எல்லைப்புற ஆராய்ச்சி மையத்தில் கிருஷ்ணன் மனபேயுடன் பணிபுரிந்தார். ஜப்பானியரான மனபே, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி இயற்பியல் திரவ இயக்கவியல் ஆய்வகத்தில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

“அவர் அப்போது நோபல் பரிசு பெற்றிருக்கவில்லை. ஆனால், ஒரு உயர்ந்த செல்வாக்கு இருந்தது. அவரும் மற்றவர்களும் அந்த நேரத்தில் பருவநிலை மாதிரிகளை கணிசமாக மேம்படுத்தியிருந்தனர். 1970களில் கடல் மற்றும் வளிமண்டல தொடர்புகள் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட முதல் இணைந்த மாதிரியை உருவாக்குவதிலும் மனபே முக்கிய பங்கு வகித்தார். ஓரிரு உரையாடல்களில், மனபே ஹஸெல்மேனின் பணியைப் பற்றி மிகவும் பாராட்டுடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது” என்று கிருஷ்ணன் கூறினார்.

ஹஸெல்மேன் ஒரு ஜெர்மனியர். இப்போது அவருக்கு 90 வயதாகிறது. அவர் ஒரு வானியலாளர் ஆவார். அவர் பருவநிலை அறிவியலில் இறங்கினார். குறிப்பிட்ட சாதனைகளுக்காக அவர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவரை நோபல் கமிட்டி அழைத்தது. பருவநிலை நிகழ்வுகளில் விஞ்ஞானிகள் இவை இயற்கையான செயல்முறைகளா அல்லது மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறதா என்பதை அறிய உதவுகிறது.

“ஹஸெல்மேன் பண்பு அறிவியல் துறையை செயல்படுத்தினார். 1990 களிலும் 2000களின் முற்பகுதியிலும்கூட, புவி வெப்பமடைதலுக்கான காரணம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன - இவை மனித நடவடிக்கைகளால் இயக்கப்படுகின்றனவா அல்லது இயற்கை மாறுபாட்டின் ஒரு பகுதியாக இருந்ததா என்று விவாதங்கள் இருந்தன. அறிவியல் உலகம் கூட பிரிக்கப்பட்டது. ஐபிசிசியின் இரண்டாவது அல்லது மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கைகள் வெப்பநிலை உயர்வுக்கு மனித நடவடிக்கைகளை குற்றம் சாட்டுவதில் மிகவும் கவனமாக இருந்தன. இந்த தடங்களை அடையாளம் காணும் ஹஸெல்மேனின் பணி இப்போது அந்த விவாதத்தை முடித்துவிட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ஐபிசிசியின் 6வது மதிப்பீட்டு அறிக்கையைப் பார்த்தால், மனித செயல்பாடுகளால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது என்று சொல்வது சந்தேகத்திற்கு இடமில்லாதத” என்று பெங்களூருவில் உள்ள இந்திய நிறுவனத்தில் வளிமண்டல மற்றும் பெருங்கடல் அறிவியல் மையத்தின் பேராசிரியரும் 6வது மதிப்பீட்டு அறிக்கையின் பங்களிப்பாளர்களில் ஒருவருமான பால கோவிந்தசாமி கூறினார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் பால கோவிந்தசாமி மனபேயுடன் பணியாற்றியுள்ளார்.

மனபேவும் ஹஸெல்மேன்னும் முந்தைய IPCC அறிக்கைகளின் ஆசிரியர்களாக இருந்தனர். இருவரும் முதல் மற்றும் மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கைகளுக்கு பங்களித்தனர். அதே நேரத்தில் ஹஸெல்மேன் இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கையிலும் ஆசிரியராக இருந்தார்.

“பருவநிலை மாற்றம் குறித்த பொது விழிப்புணர்வு வளரும்போது, இயற்பியலுகான நோபல் பரிசு, பருவநிலை மாற்றம் குறித்த நமது புரிதலுக்கு பெரிதும் பங்களித்த விஞ்ஞானிகளின் பணியை அங்கீகரிப்பதைப் பார்க்க ஊக்கமளிக்கிறது. இதில் இரண்டு ஐபிசிசி ஆசிரியர்கள் - சியுகுரோ மனபே மற்றும் கிளாஸ் ஹஸெல்மேன் இருவரும் இருந்ததாக ஐபிசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முக்கியமான பருவநிலை அறிவியல்

பருவநிலை அறிவியலுக்கு தாமதமான அங்கீகாரம் இன்னும் சரியான நேரத்தில் வந்திருக்க முடியாது என்று பல விஞ்ஞானிகள் கூறினர்.

“பருவநிலை மாற்றம் இன்று உலகம் மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடியாகும். துரதிர்ஷ்டவசமாக, இன்னும் சில மக்கள் மற்றும் அரசாங்கங்கள், யதார்த்தத்தை உறுதியாக நம்பவில்லை, இருப்பினும் அது விரைவாக மாறி வருகிறது. மனபே மற்றும் ஹஸெல்மேன் ஆகியோருக்கான அங்கீகாரம் மிகவும் தகுதியானது மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, இந்த நோபல் பரிசு வளிமண்டல அறிவியலை நம்பும் பலருக்கும் உதவும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம் ராஜீவன் கூறினார்.

சமீப காலம் வரை, அறிவியல் வட்டாரங்களில் கூட பருவநிலை அறிவியல் முக்கியமாகக் கருதப்படவில்லை என்று கிருஷ்ணன் கூறினார். “ஒருவேளை அது நமது வானிலை முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இல்லை. இந்த விஞ்ஞானமே நிச்சயமற்றதாகவும் குழப்பமானதாகவும் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. பருவநிலை அறிவியலுக்கு துகள் இயற்பியல் அல்லது ஸ்ட்ரிங் கோட்பாட்டின் ஒளி ஒருபோதும் இல்லை. ஆனால், அந்த கருத்து இப்போது மாறி வருகிறது. வானிலை முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமாகிவிட்டன. பருவநிலை மாற்றம் குறித்த ஆதாரங்கள் கட்டாயமாக உள்ளன. மனபே மற்றும் ஹஸெல்மேன் போன்ற விஞ்ஞானிகளின் படைப்புகளுக்கு நன்றி. இந்த நோபல் பரிசு அநேகமாக பருவநிலை அறிவியலின் முக்கிய நீரோட்டத்திற்கு உதவும்” என்று அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Climate Change Nobel Prize
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment