Advertisment

ஆப்ரேஷன் கள்ளி: மாலத்தீவில் ஈழப் போராளிகள் தாக்குதலை தடுக்க இந்தியா எப்படி உதவியது?

நவம்பர் 3, 1988 அன்று இலங்கை போராளிகள் அமைப்பின் உதவியுடன் மாலத்தீவு குடியரச் ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற மாலத்தீவு குழு தோல்வியடைந்தது. அது எப்படி நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Operation Cactus, How India helped to Maldives thwart coup bid backed by Lankan militants, ஆப்ரேஷன் கள்ளி, மாலத்தீவில் ஈழப் போராளிகள் தாக்குதலை தடுக்க இந்தியா எப்படி உதவியது, PLATE, Uma Maheshwaran, Maldives, Indian Army

இந்த வார இறுதியில், முதன்முதலில் எதிரிகளாகச் சந்தித்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு, மேஜர் ஜெனரல் மூசா அலி ஜலீல் (ஓய்வு) மற்றும் அகமது சாகரு நசீரை அவரது மாலி இல்லத்திற்கு காபி விருந்துக்கு அழைத்தார். நவம்பர் 3, 1988 அன்று இந்தியாவின் இராணுவத் தலையீட்டால் முறியடிக்கப்பட்ட மாலத்தீவில் தோல்வியுற்ற சதிப்புரட்சிக்காக நசீர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டு பேரும் மூன்றாவது முறையாக சிறையில் சந்தித்தனர்.

Advertisment

இளம் பச்சை டி-ஷர்ட் அணிந்து, வயது முதிர்ந்த முகத்துடன், நசீர் புன்னகையுடன், நான் நேர்காணல் அளிப்பதை விரும்பவில்லை குழந்தைகளே என்று கூறினார். பெரிய அளவில் பூக்கல் அச்சிடப்பட்ட நீல நிற சோபாவில் அமர்ந்து, இருவரும் indianexpress.com உடன் வீடியோ அழைப்பில் பேசினர். நசீர் பெரும்பாலும் ஆஃப் தி ரெக்கார்ட் (பதிவு செய்ய வேண்டாம் தனிப்பட்ட முறையில் கூறுகிறேன்) என்று பேசினார்.

“1988-ல் நான் அதிரடிப்படைத் தளபதியாக இருந்தபோது முதல்முறையாக அவரைச் சந்தித்தேன். சூழ்நிலைகள் காரணமாக, அரட்டை அடிக்க எனக்கு நேரமில்லை” என்று மேஜர் ஜெனரல் ஜலீல் கூறுகிறார். போராளிகள் கைது செய்யப்பட்ட சிறிது நேரங்களுக்குப் பிறகு, மேஜர் ஜெனரல் ஜலீல் 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தனது 30 ஆண்டு கால பாதுகாப்புப் படைத் தளபதியாக தனது சேவையை முடித்துக் கொண்டார். மாலத்தீவில் ஒரு சிலரே அப்போது அங்கெ நடந்த நிகழ்வுகளை அவர் செய்ததை நெருக்கமாக இருந்து பார்த்திருக்கலாம். அது நவம்பர் 3ம் தேதி என்பது அவரது நினைவில் தெளிவாக உள்ளது.

அன்று மாலத்தீவு தொழிலதிபர் அப்துல்லா லுத்ஃபீ மற்றும் அஹமது சாகரு நசீர், இலங்கைப் போராளி அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) மற்றும் அதன் தலைவர் வசந்தி தலைமையிலான 80 போராளிகள் குழுவின் உதவியோடு, மாலத்தீவில் அதிபர் மௌமூன் அப்துல் கயூமின் அரசை கவிழ்க்க முயன்றார்கள். இப்படியாக இந்த கதை தெரியவந்தது:

அதிகாகலை 04.00 மணி, மாலி, நவம்பர் 3, 1988

அப்போது 28 வயதான லெப்டினன்ட் ஜலீல் தேசிய பாதுகாப்பு சேவை (என்.எஸ்.எஸ்) படைமுகாமில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு எழுந்தார். NSS தலைமையகம் மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான உயரடுக்கு பணிக்குழுவின் அதிகாரியாக இருந்த அவரும் லெப்டினன்ட் ஆடம் இப்ராஹிம் மாணிக்கும் அதிரடிப்படை ஆயுத ரேக்கில் இருந்து AK-47 துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் எடுத்துக்கொண்டு தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலை நோக்கி ஓடத் தொடங்கினர். பிரதான நுழைவாயில் கடுமையான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்கிறது.

“6-2 மாதங்களுக்கு முன்பு என்.எஸ்.எஸ் தலைமையகத்தில் தாக்குதல் நடப்பதாக எனக்கு ஒரு கனவு வந்தது. எனவே, தலைமையகம் மற்றும் கிரிபுஷி பயிற்சி தீவில் உள்ள அதிரடிப்படை வீரர்களுடன் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகளுடன் ஒத்திகைகளை மேற்கொண்டேன்” என்று மேஜர் ஜெனரல் ஜலீல் கூறுகிறார். முன் உள்ளுணர்வு உணர்த்தியது போலவே, என்.எஸ்.எஸ் தலைமையகம் அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.

publive-image

மாலத்தீவில் உள்ள மாலி NSS தலைமையகத்திற்கு வெளியே, லெப்டினன்ட் மூசா அலி ஜலீல், மேஜர் முஹமது ஜாஹிர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் மேஜர் அம்பரி அப்துல் சத்தார், நாட்டின் மீது தாக்குதல் நடத்திய பிளாட் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகின்றனர். (புகைப்படம்)

மோதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, லெப்டினன்ட் ஜலீல் ஒரு கை எறிகுண்டின் துண்டுகளால் தாக்கப்பட்டார். இதனால், அவரது முழங்கால் மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. செய்தி வெளியான பிறகு, ஜனாதிபதியின் பாதுகாப்புக் குழு ஜனாதிபதி கயூமையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றியது.

இரவு நேர இருட்டில் தீவிரவாதிகள் 20-25 அடி தூரத்தில் NSS தலைமையகத்திற்கு எதிரே அமைந்துள்ள காலி அலுவலக கட்டிடத்தை தந்திரமாக கைப்பற்றினர். “அவர்கள் தங்களை ஒரு நல்ல தற்காப்பு நிலைக்கு கொண்டு வந்து கதவுகள் மற்றும் ஜன்னல்களில் இருந்தும் சுட ஆரம்பித்தனர். மக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தினர்” என்று மேஜர் ஜெனரல் ஜலீல் நினைவு கூருகிறார்.

06:30 மணி, புது டெல்லி

அப்போதைய மாலத்தீவுக்கான இந்திய தூதர் அருண் பானர்ஜி, போன் அடித்தபோது அவர் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். மாலியில் இருந்து வந்த அவசர அழைப்பு அது. “இடைவிடாத துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, தெருக்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் இருந்தனர். அவர்கள் தேசிய பாதுகாப்பு அலுவலகத்தை தாக்கி பலரை கொன்றனர். மாலத்தீவு படையினர் பதிலடி கொடுத்தனர். ஆனால், அவர்கள் எண்ணிக்கையை விட அதிகமாகவும், பலவீனமாகவும் இருந்தனர். துப்பாக்கி ஏந்தியவர்கள், இலங்கைத் தமிழர்கள், ஜனாதிபதியைப் பிடித்து அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றனர்” என்று அவர் பின்னர் அவ்வப்போது ஒரு பத்திரிகையில் எழுதினார். மாலத்தீவு இந்தியாவின் உதவியை நாடுவதாக அருண் பானர்ஜிக்குத் தெரிவிக்கப்பட்டது.

உதவிக்கான அழைப்பு புது டெல்லியை எப்பொழுது வந்தடைந்தது என்பது பற்றிய மாறுபட்ட கணக்குகள் உள்ளன. ஆனால், பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஜனாதிபதி கயூம், வெளியுறவு அமைச்சர் ஃபத்ஹுல்லா ஜமீல் மற்றும் வெளியுறவுச் செயலர் அஹமது ஜாகி ஆகியோர் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருந்த தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்தி, ராணுவ உதவிக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தனர் என்பது தெளிவாகிறது.

“மாலத்தீவிற்கு எந்தவிதமான மீட்பு நடவடிக்கையையும் அல்லது நிவாரணத்தையும் நிபந்தனையின்றி முழுமையாக அளித்து உதவுவதாக அமெரிக்கா உடனடியாக கூறியது. ஆனால், அவர்களின் தளங்கள் வெகு தொலைவில் இருந்தன. இங்கிலாந்தாலும் போதுமான வேகத்தை அடைய முடியவில்லை. இது எனக்கு ரகசிய தகவலாக இருந்தது” என்று 1988ம் ஆண்டு இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்த பிரிகேடியர் சுபாஷ் சி ஜோஷி (அப்போது கர்னலாக இருந்தார்) நினைவு கூர்ந்தார். “நாங்கள் மிக நெருக்கமாக இருந்தோம். ஆனால், மாலத்தீவுகள் உறுதியாக தெரியவில்லை. பின்னர், அமெரிக்காவும் இங்கிலாந்தும் எங்களை அணுகுமாறு பரிந்துரைத்தன.” என்று கூறினார்.

publive-image

மாலத்தீவின் தொழிலதிபர் அப்துல்லா லுத்ஃபீ மற்றும் அஹமது சாகரு நசீர் தலைமையிலான பிளாட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து. மாலத்தீவின் மாலியில் உள்ள தேசிய பாதுகாப்பு சேவை (NSS) தலைமையகத்தின் சுவர்களில் புல்லட் ஓட்டைகள் தெரிகிறது. (புகைப்படம்)

09:00 மணி, நியூ டெல்லி

இந்தியாவின் இராணுவ உதவி கேட்டு ஜனாதிபதி கயூமிடமிருந்து நேரடியாக கோரிக்கை வந்ததாக அருண் பானர்ஜியின் செயலாளர் அவருக்குத் தெரிவித்தார். அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் (JS BSM) இணைச் செயலாளரான குல்தீப் சஹ்தேவ், மாலியிடம் இருந்து உதவிக்காக அவசர அழைப்புகளைப் பெறத் தொடங்கினார். அன்று, பிரதமர் ராஜீவ் காந்தி கல்கத்தாவில் இருந்ததால், அவசரமாக புது தில்லிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.

மூன்று மணி நேரத்திற்குள், தெற்கு பிளாக்கில் காலை 9 மணிக்கு பிரதமர் காந்தி தலைமையில் நெருக்கடிக் குழுக் கூட்டம் திட்டமிடப்பட்டது. அந்தக் கூட்டத்தில், மாலத்தீவுக்கு எப்படி உதவுவது என்பது குறித்து விவாதிக்க வெளியுறவுச் செயலர் கே.பி.எஸ் மேனன், பிரிகேடியர் வி.பி. மாலிக் மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கூடினார்கள்.

நெருக்கடிக் குழு ஆலோசித்துக்கொண்டிருந்தபோது, ​​அடுத்த சில மணிநேரங்களில் 50வது பாராசூட் படைப்பிரிவைச் செயல்படுத்துவதற்கான சாத்தியமான பணி வரவுள்ளதாக இந்திய இராணுவத் தலைமையகம் எச்சரிக்கப்பட்டது. ஆக்ராவில் இருந்து மூன்று மணிநேரம் தொலைவில், அப்போது 42 வயதான கர்னல் ஜோஷி, சிக்கிமுக்கு விடுப்பில் செல்ல தயாராக இருந்தார். அப்போது, அவர் படைப்பிரிவு தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டார். “பிரிகேடியர் புல்சரா எனக்கு ஒரு பொது விளக்கத்தை அளித்தார். நான் 'எத்தனை மணிக்கு புறப்படுகிறோம்' என்று கேட்டேன்? அவர் சொன்னார்: ‘என்ன டேக் ஆஃப்? நீங்கள் ஓட வேண்டும்! நீங்கள் மதியம் 12:30 மணிக்கு புறப்பட வேண்டும்.” என்றார்.

ஆக்ராவில், கர்னல் ஜோஷியின் தலைமையில், 6 பாராசூட் படைப்பிரிவு இயக்கப்பட்டது. மேலும், பட்டாலியன் தலைமையகத்தில், மேஜர் ருபிந்தர் தில்லியன் மற்றும் மேஜர் உமேத் சிங் ஆகியோர் புறப்படுவதற்கு வெடிமருந்துகளைத் தயார் செய்யச் சொன்னார்கள். “எனவே நாங்கள் காலாட்படை வெடிமருந்துகளை எடுத்துக் கொண்டோம் - தோட்டாக்கள், டேங்க் எதிர்ப்பு ராக்கெட்டுகள், ராக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பின்வாங்காத டேங்கி எதிர்ப்பு துப்பாக்கிகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டோம். காரணம் மிகவும் எளிமையானது: நாங்கள் கடல் இருக்கும் ஒரு பகுதிக்குச் சென்று, அனேகமாக படகுகளில் போரியில் ஈடுபடப் போகிறோம்” என்று விளக்குகிறார் பிரிகேடியர் ஜோஷி. அதைத் தொடர்ந்து இந்திய ஆயுதப்படைகளின் விரைவான அணிதிரட்டல் இருந்தது.

பிற்பகல் 3:30 மணியளவில், விமானப்படையின் 44 வது படைப்பிரிவும், பாராசூட் படைப்பிரிவின் முன்னணிப் படையினரும் விமான நிலையத்தில், அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருந்தனர். அதற்குள் ராணுவம் மற்றும் விமானப்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த பிரிகேடியர் வி.பி. மாலிக் மற்றும் குரூப் கேப்டன் அசோக் கோயல் ஆகியோர் மாலத்தீவுக்கான இந்திய தூதர் அருண் பானர்ஜியுடன் ஆக்ராவுக்கு வந்தனர்.

ஆபரேஷன் கள்ளி தொடங்கியது

“தூதர் குழுவில் இருப்பதன் நன்மை என்னவென்றால், அவர் எங்களுக்கு விளக்கமளிக்கும் அறையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது எங்களுக்கு பயனுள்ள பல தகவல்களைத் தந்தது. கன்னாட் பிளேஸில் நீங்கள் காணக்கூடிய ஒரு சுற்றுலா வழிகாட்டி புத்தகம் அது. அங்குதான் நாங்கள் மாலி பற்றிய முதல் பார்வையைப் பெற்றோம்” என்று கூறி சிரிக்கிறார் பிரிகேடியர் ஜோஷி. அது ராணுவ வீரர்களுக்கு தாங்கள் மீட்க வேண்டிய நபரின் முதல் புகைப்படத்தையும் அளித்தது: அந்த நபர் மாலத்தீவு அதிபர் கயூம்.

மாலியில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஆபரேஷன் செயல்படுத்தப்பட்ட ஒன்பது மணிநேரம் வரை 44வது படைப் பிரிவு மற்றும் பாரா பிரிகேட் மாலத்தீவின் நிலைமை, தீவிரவாதிகளை அடையாளம் காணாதது உட்பட எந்த குறிப்பிடத்தக்க உளவுத்துறையும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய பணிக்குத் தேவையான மாலத்தீவின் புவியியல் பற்றிய சிறிய தகவல்களுடன் இரவில் ஒரு பாராசூட்டில் குதிக்கும் சாத்தியத்தை அவர்கள் எதிர்கொண்டனர். அப்போதுதான் பானர்ஜியின் அந்நாட்டுடனான பிரபலம் சில நுண்ணறிவை வழங்கியது. இரண்டு IL-76 விமானங்கள், இந்திய தூதர் மற்றும் வெடிமருந்துகளுடன், ஹுல்ஹுலே விமான நிலையத்திற்குச் சென்றன.

ஆபரேஷன் கள்ளியின்போது தீவிரவாத தாக்குதல் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, நவம்பர் 3, 1988 அன்று மாலத்தீவில் உள்ள ஹுல்ஹுலே விமான நிலையத்தில் இந்தியாவின் பாரா பிரிகேட் வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டு சென்றது. (புகைப்படம்)

21:25 மணி: ஹுல்ஹுலே விமான நிலையம், மாலத்தீவு

இரவு 9:25 மணிக்கு, ஹுல்ஹுலெ விமான நிலையம் இந்திய விமானம் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. IL-76 விமானங்கள் வழிகாட்டப்படாமல் இருண்ட, வெளிச்சம் இல்லாத ஓடுபாதையை நோக்கி இறங்கின. “நாங்கள் தரையிறங்கிய சரியாக 15 நிமிடங்களுக்குப் பிறகு, ருபிந்தர் தில்லியன், 'சார், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு எனது கட்டளையின் கீழ் உள்ளது' என்றார். நான், 'என்.எஸ்.எஸ்-ஸை அழைக்கவும்' என்றேன். என்எஸ்எஸ் ‘எங்களால் அதிக நேரம் தாங்க முடியாது, உடனே வாருங்கள்’ என்று சொன்னதை பிரிகேடியர் ஜோஷி நினைவு கூர்ந்தார்.

ஹுல்ஹுலே விமான நிலையத்தின் பொறுப்பதிகாரியான இப்ராஹிம் ஃபைசல், விமான நிலையத்தின் ஏடிசியை நிர்வகித்து வந்தவர். இந்திய வீரர்களை மாலிக்கு துருப்புக்களை கொண்டு செல்ல உதவும் படகுகளுக்கு வழிகாட்டினார். ஆனால், அவர்கள் படகுகளில் ஏறத் தொடங்கியதும், ஹுல்ஹுலே விமான நிலையத் தீவிற்கும் மாலிக்கும் இடையே உள்ள ஒரு குறுகிய கால்வாயில், தலைநகருக்குள் நுழைவதற்கான பாதையாகச் செயல்படும் காதுகோல்ஹூவில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நகர்வதைக் கண்டனர். "கப்பலை நோக்கிச் சுடுமாறு கரையில் இருந்த எனது வீரர்களிடம் நான் கூறினேன். நாங்கள் ராக்கெட்டுகளை வீசினோம். இருவர் அதைத் தாக்கினார்கள். தண்ணீர் உள்ளே சென்றது.” என்று கூறினார்.

கர்னல் ஜோஷியும் அவரது ஆட்களும் தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய அடையாளம் தெரியாத கப்பல், பிளாட் போராளிகள் தப்பிக்க உத்தரவிட்ட MV Progress Light கப்பல் என்பதை பின்னர் அறிந்து கொண்டார்கள். இந்த தாக்குதல்கள் கப்பலின் வேகத்தை கணிசமாகக் குறைத்தன.

MV Progress Light கப்பலில், தீவிரவாதிகள் 14 மாலத்தீவு குடிமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இதில் நாட்டின் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அகமது முஜ்தபா மற்றும் அவரது மனைவி மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் துணை செயலாளர் இஸ்மாயில் நசீர் ஆகியோரும் அடங்குவர். மாலத்தீவில் இந்திய பரா துருப்புகளின் வருகையை பிளாட் போராளிகள் பார்க்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்த போராளிகளில் ஒரு குழு சரக்குக் கப்பலைக் கைப்பற்றி, பணயக்கைதிகளை உள்ளே தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றது.

“அன்று இரவு பல, விமானங்கள் தரையிறங்கியது. இதன் போது முழு பாராசூட் படைப்பிரிவு - மூன்று பட்டாலியன்கள் - திரும்பியது. உண்மையில் அவர்கள் ஒவ்வொருவராக தரை இறங்கினார்கள். மாலத்தீவுக்கு மொத்தம் 2,500 துருப்புக்கள் வந்திருப்பார்கள். அன்று இரவு, IL-76 விமானங்கள் மொத்தம் ஐந்து விமானங்கள் பறந்தன” என்கிறார் பிரிகேடியர் ஜோஷி.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அவரது குறிப்புகளில், 44வின் படைப்பிரிவின் உத்தரவு அதிகாரியான குரூப் கேப்டன் ஏஜி பேவூர், இந்திய ஆயுதப் படைகள், “ஒரு உத்தி தலையீட்டில் சரித்திரம் படைத்தது” என்பதை நினைவுகூர்ந்து எழுதினார். அவர் தனது பங்கிற்கு, ஆக்ராவிலிருந்து இந்தியா முழுவதும் 3,000 கி.மீ தூரம் மாலத்தீவுக்கு IL-76 விமானத்தில் பறந்தார்.

23:30 மணி: மாலி

ஆழ் கடல் பகுதியில் ஆபரேஷன் செயல்படும் இடத்தில் இருந்து தூரத்தில் கர்னல் ஜோஷி மற்றும் மேஜர் ரூபிந்தர் தில்லான் அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு பதிவில், மேஜர் தில்லான், தரையிறங்கும் பகுதியில் நின்றிருந்த பரா துருப்புகள் ஒரு வெளி ஆள் சைக்கிளில் வருவதைப் பார்த்து, அவரை வீழ்த்தியதாகக் கூறினர். அவர் இந்தியப் படைகளுக்கு நியமிக்கப்பட்ட வழிகாட்டியாக மாறினார். அவர் அவர்களை துணை பாதுகாப்பு அமைச்சரான இலியாஸ் இப்ராஹிமிடம் வழிநடத்தினார்.

பிரிகேடியர் ஜோஷி, “இப்ராஹிம் கயூமின் மைத்துனர். அங்கே எப்படி செல்வது என்பது பற்றிய தகவல்களை எங்களுக்குத் தந்தவர். மாலத்தீவின் அதிபர் மீட்புக் குழுவின் ருபிந்தர் அதே நேரத்தில் அதிபரின் மறைவிடத்தை அடைந்தார்” என்கிறார்.

அதிபரின் மாளிகையில் இருந்து ஒரு கல் எறியப்பட்டது. அதிபர், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மறைந்திருந்த வீட்டில், இந்திய துருப்புக்கள் நடுங்கிப் போயிருந்த அதிபர் குடும்பத்தை கண்டுபிடித்தனர். கர்னல் ஜோஷியின் ஆட்கள் மாலியைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர். அவர் சிறிது நேரம் அதிபரைச் சந்தித்தார். “ரூபிந்தரை என்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை நான் கொடுத்தேன். அது பாதுகாப்பான இடம் என்று அனைவரும் கூறினர்.” என்றார்.

மேஜர் தில்லானின் அன்றிரவு நடந்த விவரங்களின் குறிப்புபடி, அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் NSS தலைமையகத்திற்கு செல்லும் வழியில், மாலியின் செப்பனிடப்படாத மணல் வீதிகளில் துப்பாக்கிச் சூடு சண்டையில் புளாட் போராளிகள், பொதுமக்கள் மற்றும் NSS படைவீரர்களின் உடல்களால் சிதறிக்கிடந்தன.

நவம்பர் 4, 1988: மாலத்தீவு தண்ணீர், இந்தியப் பெருங்கடல்

ஆபரேஷன் கள்ளி என்பது இந்தியாவின் ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய முப்படைகளின் பணியாகும். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை ஏற்கனவே மாலத்தீவுக்கு வந்துவிட்ட நிலையில், கொச்சியில் இருந்து ஐஎன்எஸ் பெட்வா புறப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு நட்புரீதியாக பயணம் செய்து திரும்பிய ஐஎன்எஸ் கோதாவரி இயக்கப்பட்டது. “MV Progress Lightக்கு பிறகு ஐஎன்எஸ் பெட்வா ஒரு இடைமறித்து தடுப்பு நடவடிக்கையில் தொடங்கியது. அதை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதை நிறுத்துவதே யோசனையாக இருந்தது” என்று பிரிகேடியர் ஜோஷி பின்னர் கடற்படை அதிகாரிகளுடன் உரையாடியதை நினைவு கூர்ந்தார்.

இந்திய அமைதிப் படை இலங்கைத் தமிழர்களுடன் சந்தித்த சவால்களைத் தொடர்ந்து, குறிப்பாக அந்த ஆண்டு இந்தியா-இலங்கை உறவுகள் பதட்டமாக இருந்தன.

“அப்போதுதான் கடலில் போர் தொடங்கியது” என்கிறார் பிரிகேடியர் ஜோஷி. கடற்படைத் தலைமையகத்தின் உத்தரவுக்காக ஐஎன்எஸ் பெட்வா காத்திருந்த நிலையில், ஐஎன்எஸ் கோதாவரி மாலத்தீவு கடற்பகுதியை அடைந்தது. இந்த ஆபரேஷன் பிரிவின் உத்தரவு முழுமையாக ஆயுதம் ஏந்திய ஐஎன்எஸ் கோதாவரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் பக்கத்தில் தீவிரவாதிகள் இரண்டு பணயக்கைதிகளைக் கொன்று, உடல்களை கடலில் வீசினர். 1988ல் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது, 5,000 டன் எடையுள்ள எம்வி ப்ரோக்ரஸ் லைட்டின் கேப்டன் ஜெய தவன், இந்திய போர்க்கப்பல்கள் பின்தொடர்வதை நிறுத்தி, ப்ராக்ரஸ் லைட்டை தடையின்றி இலங்கைக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால், கப்பலில் இருந்த மேலும் 25 பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என்று கூறினார்.

மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஐஎன்எஸ் கோதாவரி எம்வி ப்ராக்ரஸ் லைட்டை நோக்கி பல ரவுண்டுகள் சுட்டது. அது கப்பலின் என்ஜின் அறையைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் சரணடைந்தனர். ஐஎன்எஸ் பெட்வாவின் கடற்படை ஹெலிகாப்டர்கள் என்எஸ்எஸ் அதிகாரிகளை ஐஎன்எஸ் கோதாவரிக்கு கொண்டு சென்று மீட்கப்பட்ட பணயக்கைதிகளுடன் தொடர்பு கொள்ள உதவியது, ஏனெனில் அதிகாரிகள் திவேஹியைப் புரிந்து கொண்டனர். பணயக்கைதிகள் மீட்கப்பட்டு ஐஎன்எஸ் கோதாவரி கப்பலில் கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், புனேவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். பிடிபட்ட மீதமுள்ள தீவிரவாதிகள் ஐஎன்எஸ் கோதாவரி மூலம் மாலிக்கு கொண்டு வரப்பட்டனர்.

04:00 மணி: NSS தலைமையகம், மாலத்தீவு

“நான் பிரிகேடியர் புல்சாராவிடம், நீங்களும் தூதரும் அதிபரை ஏன் சந்திக்கக்கூடாது?' என்று கேட்டேன்” என்று பிரிகேடியர் ஜோஷி நினைவு கூர்ந்தார். NSS தலைமையகத்தில், கொழும்புவில் உள்ள இந்தியப் பாதுகாப்புப் பிரிவினர் புது டெல்லிக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் அதிபர் கயூம் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச முடிந்தது. எனவே அப்போது எடுக்கப்பட்ட ஒரு பிரபலமான புகைப்படம் உள்ளது. அதில் நான் இல்லை, ஆனால், பிரிகேடியர் புல்சரா, தில்லான் மற்றும் தூதர் ஆகியோர் ராஜீவ் காந்தியுடன் அதிபர் பேசும்போது அவருடன் இருந்தனர்” என்று கூறினார்.

09:00 மணி: மாலி, மாலத்தீவு

அதிபர் கயூமின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, காலை 7:45 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, பத்திரிகையாளர்கள் மாலத்தீவில் இறங்கத் தொடங்கினர். தீவிரவாதிகள் முதன்முதலில் தாக்குதலைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆனால், இந்திய ஆயுதப்படைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. தூதர் அருண் பானர்ஜி தனது ஒரு குறிப்பேடு உடன் அன்று காலை பிரிகேடியர் புல்சாராவுடன் மாலி நகரத்தை சுற்றி வந்ததை நினைவு கூர்ந்தார். “சில சடலங்கள், காலி தோட்டாக்கள் மற்றும் குப்பைகள் தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன. தெருக்கள் கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தன…” அதற்குள், நகரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய சில தகவல்களைப் பெற்ற பொதுமக்கள், தெருக்களுக்கு எச்சரிக்கையுடன் வரத் தொடங்கினர். இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து வந்து கொண்டிருந்தனர்.

காலை 9:10 மணியளவில், படையின் சுபேதார் பிரீதம் சிங், ஆயுதம் ஏந்தியவர்கள் சரக்குகளுடன் தப்பிச் செல்வதைக் கண்டதாக கர்னல் ஜோஷியை வானொலி மூலம் அவசரமாகத் தொடர்பு கொண்டார். சுபேதார் சிங், பவளப்பாறையில் இருந்து வெளியேறும் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதன் விளைவாக குறைந்தபட்சம் ஒரு போராளிக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டு கப்பலை மூழ்கடித்தது. 60 பாரா ஃபீல்டு ஆம்புலன்ஸ் தீவிரவாதியின் காயங்களை சரி செய்ய எடுத்துக்கொண்டு படகில் இருந்தவர்களை என்.எஸ்.எஸ் இடம் ஒப்படைத்தது.

காலை 11 மணிக்கு, பிரிகேடியர் புல்சரா, மாலி பாதுகாப்பாக இருப்பதாக மாலத்தீவு அதிபர் அலுவலகத்திற்கும் NSS-க்கும் தெரிவிக்குமாறு கர்னல் ஜோஷியிடம் கேட்டுக் கொண்டார். “பின்னர், தூதருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்று உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்ததால், அவருக்கு ஒரு பாதுகாப்புப் பிரிவை வழங்குமாறு என்னிடம் திடீரென்று கேட்கப்பட்டது. அதனால், அவரை சிறிது காலம் பாதுகாத்து பின்னர் அந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றோம்” என்கிறார் பிரிகேடியர் ஜோஷி.

“பிரிகேடியர் புல்சரா ஒரு பாதுகாப்புப் பிரிவினருக்கு நான் விரும்பும் வரை என்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டிருந்தார்; 24 மணி நேரமும் என்னைக் காக்கவே, துதரக வளாகத்திலோ அல்லது இல்லத்திலோ பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று தூதர் அருண் பானர்ஜி அவ்வப்போது தனது குறிப்புகளில் எழுதினார்.

புது டெல்லி, இந்தியா, நவம்பர் 4, 1988

மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி உரையாற்றினார்: “அதிபர் கயூம் தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து தப்பித்து, அதிபர் மாளிகைக்கு வெளியே ஒரு பகுதியில் தஞ்சம் புகுந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்த சதியை முறியடிக்க அவசர இராணுவ உதவிக்கான முறைப்படியான கோரிக்கை எங்களுக்கு வந்தது. இந்தக் கோரிக்கை கொழும்பு மற்றும் நியூயார்க்கில் உள்ள மாலத்தீவு தூதர்களால் மீண்டும் மீண்டும் வைக்கப்பட்டது… மாலத்தீவும் நம்முடைய நெருங்கிய மற்றும் அண்டை நட்பு நாடுகளில் ஒன்றாகும். தேவையான, மிக மோசமான நேரத்தில் அது விரக்தியில் நம்மைக் கவர்ந்தது… இந்திய ஆயுதப் படைகளின் மிக உயர்ந்த மரபுகளில் நமது துருப்புக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முன்னுதாரணமாகச் செய்திருப்பதைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்… அதிபர் கயூம் இன்று அதிகாலையில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்… நாங்கள் மாலத்தீவின் நட்பு நாடுகளுக்கு உதவியதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களுடன் நாங்கள் எப்போதும் நெருங்கிய மற்றும் அன்பான உறவுகளை அனுபவித்து வருகிறோம்.” என்று கூறினார்.

அதற்கு பிறகு நடந்தவைகள்

பாராசூட் பிரிகேட் மாலத்தீவில் 15 நாட்கள் தங்கியிருந்தது. நவம்பர் 5ம் தேதிக்குள் ஐ.என்.எஸ் பேட்வா மாலியை அடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஐ.என்.எஸ் கோதாவரி, பிடிபட்ட போராளிகள் மற்றும் பணயக்கைதிகளுடன் கப்பலில் இருந்தது. “நான் ஒரு வருடம் மாலத்தீவில் இருக்க வேண்டும் என்று பிரிகேடியர் புல்சரா என்னிடம் கூறினார்” என்று பிரிகேடியர் ஜோஷி கூறுகிறார்.

மாலத்தீவில் நடந்த சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. அதன் நவீன வரலாற்றில், சிறிய தீவு தேசத்தின் மீது இதுபோன்ற தாக்குதல் இதற்கு முன் நடந்ததில்லை. “கடந்த 200 ஆண்டுகளில், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு அல்லது உள்ளூர் உதவியின் முயற்சியில் பாதுகாப்புப் படையினருடன் நேரடி மோதல் நடந்த ஒரே சம்பவம் இதுதான்” என்று மேஜர் ஜெனரல் ஜலீல் விளக்குகிறார்.

1988 இல் மாலத்தீவு மற்றும் இந்திய அரசாங்கங்களால் ஒரு கூட்டு விசாரணை பொறிமுறை நிறுவப்பட்டது. அது அப்போதே தொடங்கியது.

"துரதிர்ஷ்டவசமாக, இலங்கையைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இலங்கையை எங்களது இரண்டாவது தாயகமாக நாங்கள் உறுதியாக பரிசீலனை செய்கிறோம். இந்த மக்களை கையாள்வதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருந்தது. காவலில் அவர்கள் உடல் ரீதியாகவோ அல்லது வார்த்தைகளாலோ துன்புறுத்தப்படவில்லை. இதைப் பற்றி நான் மிகவும் குறிப்பிட்டுள்ளேன். அவர்களில் பெரும்பாலோர் விசாரணைக்குப் பின்னர் மீண்டும் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று மேஜர் ஜெனரல் ஜலீல் நினைவு கூர்ந்தார்.

மாலத்தீவு அரசு ஆறு விசாரணை தளங்களைத் திறந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் இந்திய வீரர்கள் உள்ளனர். நவம்பர் 3ல் நடந்த சதிப்புரட்சியின் பெரும்பாலான கதைகளில், இந்திய ஆயுதப் படைகளின் பங்கு மாலியைப் பாதுகாப்பதில் முடிவடைகிறது. ஆனால், அது கதையின் முக்கால்வாசிப் பகுதி மட்டுமே.

விசாரணையின் போது இந்திய வீரர்கள் இருப்பது கூடுதல் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, தளவாட நோக்கங்களுக்காகவும் அவசியம். “போராளிகள் அனைவரும் தமிழ் பேசுவதால் இந்தியர்கள் தேவைப்பட்டனர், நாங்கள் பேசவில்லை. எனவே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பின்னர் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளை திவேஹியில் கேட்டோம். குழுவில் சில மாலத்தீவு மொழிபெயர்ப்பாளர்களும் அடங்கியிருந்தனர்” என்று மேஜர் ஜெனரல் ஜலீல் நினைவு கூர்ந்தார்.

மாலத்தீவு-இலங்கை இராஜதந்திர உறவுகள் மற்றும் நடவடிக்கையில் இந்தியாவின் பங்கு மற்றும் தாக்கத்தை குறைக்க, விசாரணையை கவனமாக மேற்கொள்ள வேண்டியிருந்தது. “அந்த விசாரணை ஒரு வெளிப்படையான செயல்முறையாக இருந்தது” என்று அவர் கூறுகிறார்.

“விசாரணை மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டது சூழ்நிலையின் பதற்றம் காரணமாக மட்டுமல்ல, நாங்கள் கைது செய்யப்பட்ட 68 இலங்கையைச் சேர்ந்தவர்களும் 7 வெளிப்படையான மாலத்தீவுகளைச் சேர்ந்தவர்களும் 4 மாலைதீவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 12 வெளிநாட்டவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது” என்கிறார் மேஜர் ஜெனரல் ஜலீல். தீவிரவாதிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அதிபர் கயூம் பின்னர் ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆபரேஷன் கள்ளி மாலத்தீவு மக்களால் மறக்கப்படவில்லை. 1988ம் ஆண்டு இந்தியாவின் உதவியானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பற்றிய விவாதங்களில் எப்போதும் குறிப்பிடப்படுகிறது. டாக்டர் குல்பின் சுல்தானா கூறுகிறார், அவருடைய ஆராய்ச்சி பகுதி மாலத்தீவுகளை உள்ளடக்கியது. “மாலத்தீவில் கட்சி எல்லைகளுக்கு அப்பால், அவர்கள் இந்த நடவடிக்கையை விமர்சிக்கவில்லை. அவர்கள் இந்தியாவுடன் உள்ள மற்ற பிரச்சினைகளை குறிப்பிடுவார்கள். ஆனால், இதைக் குறிப்பிடுவதில்லை.” என்று அவர் கூறுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment