Reading govt advisory on airborne transmission : மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆலோசனை அறிக்கையில் கொரோனா வைரஸ் காற்று மூலமாகவும், ஏரோசோல்கள் வடிவிலும், பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்தும் 10 மீட்டர் இடைவெளியில் பரவும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கை முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகத்தால் வழங்கப்பட்ட கோவிட் -19 குறித்த புதுப்பிக்கப்பட்ட பொது ஆலோசனை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. வைரஸின் வான்வழி பரவுதல், குறிப்பாக மூடப்பட்ட இடங்களில் நிராகரிக்க முடியாது என்பதற்கான சமீபத்திய ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது.
துளி வடிவம் Vs ஏரோசெல் வடிவம்
வைரஸ் பரவுவதற்கான பல்வேறு முறைகள் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து தீவிர விவாதத்திற்கு உட்பட்டவை. ஒரு நபர் பேசும்போது, தும்மும்போது அல்லது இருமும்போது வெளிவரும் பெரிய நீர்த்துளிகள் மூலமாக வைரஸ் பரவுகிறது என்று ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நீர்த்துளிகள், அவற்றின் பெரிய அளவு காரணமாக, தரையில் விழுவதற்கு முன்பு குறுகிய தூரம் மட்டுமே பயணிக்கும். 6 அடி (2 மீட்டர்) தொலைவில் இருந்தால் ஒருவர் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்டது.
மேலும் படிக்க : வருடத்திற்கு 90 கோடி கோவாக்ஸின் டோஸ்கள்; இலக்கு நிர்ணயித்த பாரத் பயோடெக்
எவ்வாறாயினும், பல மாதங்களாக, விஞ்ஞானிகள் வைரஸ் ஏரோசோல்கள் வழியாக பயணிப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். ஏரோசோல்கள் காற்றில் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறிய திட துகள்கள். ஒப்பீட்டளவில் மிகவும் லேசான இந்த ஏரோசோல்கள் வைரஸை மிக அதிக தூரத்திற்கு கொண்டு செல்லக்கூடும். மேலும், அவை பல நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் கூட காற்றில் இருக்கலாம், இதனால் அருகிலுள்ள நபருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை மிகவும் அதிகமாக உள்ளது. கோவிட் -19 பரவுதல் குறித்த புதுப்பிக்கப்பட்ட குறிப்பில், ஆறு அடிக்கும் அதிகமான தூரங்களில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துவிட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் சில தடுக்கக்கூடிய சூழ்நிலைகளில் மீண்டும் மீண்டும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
மேலும் படிக்க : அதிகரிக்கும் பாதிப்புகள்; தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்குமா?
புதிய ஆலோசனை
இந்திய ஆலோசனை அமைப்பு ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றி, 10 மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவர்களுக்கும் தொற்றினை ஏரோசல்கள் ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கை செய்துள்ளது. ட்ராப்லெட்கள் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து 2 மீட்டர் தொலைவில் விழுகிறது என்றால் ஏரோசல்கள் அதனை 10 மீட்டர் வரை காற்றில் கொண்டு செல்கிறது.
நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல் ஆகியவை நோயைப் பரப்புவதற்கான முக்கிய முறைகளாக இருக்கின்றன, இருப்பினும் இது மேற்பரப்பு பரவுதல் ஆகும். வெவ்வேறு மேற்பரப்புகளில் விழும் நீர்த்துளிகள் மற்றும் இந்த மேற்பரப்புகளைத் தொடும் நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்தும் எச்சரிக்கை செய்துள்ளது. தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் மிக அதிகமாக கருதப்படும் மேற்பரப்பு பரவலிலிருந்து வரும் ஆபத்து இப்போது பெரிதும் குறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. அசுத்தமான மேற்பரப்புகளிலிருந்து ஏற்படும் தொற்று புதிய தொற்றுநோய்களுக்கு கணிசமாக பங்களிக்காது என்பதை வலுவான சான்றுகள் மூலம் கூறியுள்ளது.
மேலும் படிக்க : வைரஸ் உள்ள ஏரோசோல் காற்றில் 10 மீட்டர் வரை பயணிக்கும்; மத்திய அரசு எச்சரிக்கை
இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்தே வைத்திருங்கள். வீட்டில் காற்றோட்டமான சூழல் நிலவும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். மூடிய, கட்டுப்பாடற்ற உட்புற இடைவெளிகளில், நீர்த்துளிகள் மற்றும் ஏரோசோல்கள் விரைவாக குவிந்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பரவும் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கின்றன என்று ஆலோசனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வைரஸ் துகள்கள் எளிதில் சிதறடிக்கப்படுவதால் வெளிப்புற பகுதிகளில் தொற்று பரவும் ஆபத்து மிகவும் குறைவாக இருக்கும் என்பதை இது வலியுறுத்துகிறது.
அலுவலகங்கள், வீடுகள் மற்றும் பெரிய பொது இடங்களில் வெளிப்புற காற்றை அறிமுகப்படுத்தவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இந்த இடங்களில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இது அறிவுறுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.