Advertisment

Explained: தேசிய விருதுகளின் வரலாறும், சிறப்புகளும்..!

தமிழ் படமான சூரரைப் போற்று சிறந்த படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சிறந்த திரைக்கரை சுதா கொங்கரா ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

author-image
WebDesk
New Update
National Film Awards

சூரரைப் போற்று சூர்யா



நாட்டின் 68ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விருதுகள் கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் தாமதமாக வழங்கப்பட்டுவருகின்றன. விருதுகள் வழங்கும் விழா பிஐபி வலையொளி சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

Advertisment

சூரரைப் போற்று

இந்த விழாவில் 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக, தமிழ் படமான சூரரைப் போற்று சிறந்த படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சிறந்த திரைக்கரை சுதா கொங்கரா ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சிறந்த திரைக் கதை பிரிவில் விருது வென்றுள்ளார். சிறந்த நடிகர் விருதை சூர்யா பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் உடன் பகிர்ந்துகொள்கிறார். அஜய் தேவ்கனுக்கு சிறந்த நடிகர் விருது தன்ஹானி தி யன் ஸங் வாரியர் (அறியப்படாத வீரர்) என்ற படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது.

தேசிய விருது வரலாறு

அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய சசிதாநந்தன் கேஆர்-க்கு சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய விருதுகள் படத்தின் அழகியல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் சமூக அக்கறை கொண்ட படங்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.

இந்தத் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவரால் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. முதன் முதலில் இந்த விருதுகள் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது அவை மாநில விருதுகள் என அழைக்கப்பட்டன.

தொடர்ந்து பிராந்திய மொழிகளில் சிறந்த படங்கள் அங்கீகரிக்கப்பட்டன. பின்னர் சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் என தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன. இது 1968இல் நடைமுறைக்கு வந்தது. ராத் அருத் தின் படத்தில் ஸ்கிசோஃபரினியா நோயாளி ஆக நடித்ததற்காக நர்கிஸ் சிறந்த நடிகைக்கான தொடக்க விருதை வென்றார். சிறந்த நடிகர் விருது உத்தம் குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுகள் அப்போது ஊர்வசி விருது, தேசிய விருது என இரண்டு பிரிவாக உருவாக்கப்பட்டது. துபாபாரம், ஸ்வயம்வரம், திமஜ்ஜனம் உள்ளிட்ட படங்களில் மூன்று முறை விருது வென்ற நடிகை சாரதாவுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டன.

தற்போது விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன. அந்த வகையில் மூன்றாவது பிரிவான சினிமா கலையை ஊக்குவிப்பதற்காகவும் சினிமா கலையை வடிவமைப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.

மற்ற இரண்டு விருதுகள் சிறந்த அம்சங்கள், அம்சங்கள் இல்லாத படங்கள் என்ற பிரிவில் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் இந்த முறை சிறந்த விமர்சகருக்கான விருது வழங்கப்படவில்லை. சினிமா பற்றிய சிறந்த புத்தகமாக கிஷ்வர் தேசாய் எழுதிய தி லாங்கஸ்ட் கிட்ஸ் படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் தேவிகா ராணியை பற்றியது. இவர்தான் இந்திய சினிமாவின் முதல் பெண்மணி என அழைக்கப்படுகிறார்.

வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது யார்?

திரைப்பட இயக்குனரகத்தில் இதற்காக குழு உள்ளது. இந்தக் குழுவில் சினிமா, எழுத்தாளர்கள், மனிதநேயத் துறையில் சிறந்து விளங்குபவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 140 வெற்றியாளர்ளில் 11 பேருக்கு மட்டுமே விருதுகள் வழங்க முடிவுசெய்தார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், 60க்கும் மேற்பட்ட விருதாளர்கள் குடியரசுத் தலைவருக்கு முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.

இந்த விருதுகளும் பக்க சார்பற்ற முறையில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷன் மீது இயக்குனர் பக்கசார்புடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதிக விருதுகள் வென்ற கலைஞர்கள்

1982-84ஆம் ஆண்டுக்குள் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான விருதை வென்று ஷபானா ஆஸ்மி சாதனை படைத்துள்ளார். அதேபோல் பெங்கல் பெங்காலி நடிகைகள் இந்திராணி ஹல்தார் மற்றும் ரிதுபர்னா செங்குப்தா ஆகியோர் இருமுறை தேசிய விருதுகள் பெற்றுள்ளனர்.

பழம்பெரும் இயக்குனர் சத்யஜித் ராயின் ஆறு திரைப்படங்கள் 4 பிரிவுகளில் பல்வேறு காலகட்டங்களில் தேசிய விருதை வென்றுள்ளன. அந்தப் படங்கள் பதேர் பாஞ்சாலி, அபுர் சன்சார், சாருலதா, கூப்பி கைனே பகா பைன், சீமபத்தா உள்ளிட்டவை ஆகும்.

இதுவரை ஷாருக்கான் நடித்த 7 திரைப்படங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்கள் என்ற தேசிய விருதை வென்றுள்ளன. எனினும் தனிப்பட்ட முறையில் அவர் விருதை வென்றதில்லை.

மேலும் இந்த விருதுகளில் இந்தி மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற குற்றஞ்சாட்டு எழுகிறது. பாலிவுட்டிற்கு இதுவரை சிறந்த நடிகர் (25), சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான விருதுகள் 27, சிறந்த இசையமைப்பாளர் விருதுகள் 19, சிறந்த துணை நடிகர் நடிகைகளுக்கான விருதுகள் 17 கிடைத்துள்ளன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக தேசப் பக்தி கொண்ட திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வரிசையில் மணிகர்ணிகா (தி குயின் ஆஃப் ஜான்சி), தன்காஹி ஆகிய படங்கள் இணைந்துள்ளன.

மேலும் உரி, மரக்காயர் தி அரபிக்கடலிண்டே சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கும் இந்த விருதுகள் கிடைத்துள்ளன. மணிகர்ணிகா படத்தில் கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்திருந்தார்.

இதேபோல் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த பெங்காலி நடிகர் ரித்தி சென் தேசிய விருதை பெற்றார். அதேபோல் தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதியும் 2019ஆம் ஆண்டு விருது பெற்றுள்ளார்.

National Award Vijay Sethupathi Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment