Advertisment

குஜராத் அரசியலில் லேவா, கத்வா பட்டீதார்கள்; ஒற்றுமைகளும் குறைகளும் என்ன?

லேவா மற்றும் கேத்வா பட்டீதார்கள் யார்? குஜராத் அரசியலில் அவர்கள் ஆற்றிய பங்கு என்ன என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு

author-image
WebDesk
New Update
pattidhar, patel community, Gujarat

Gopal B Kateshiya

Advertisment

Leuva and Kadva Patidars in Gujarat politics : குஜராத்தின் 17வது முதல்வராக பொறுப்பேற்றார் பூபேந்திர படேல். பட்டீதார் சமூகத்தில் இருந்து பொறுப்பேற்றுக் கொண்ட ஐந்தாவது முதல்வர் இவர் ஆவார். ஆனாலும் கத்வா என்ற பட்டீதார் சமூகத்தின் உட்பிரிவில் இருந்து பொறுப்பேற்ற முதல் முதல்வர் இவர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு முதல்வர் பொறுப்பு வகித்த அனந்திபென் படேல் லேவா பட்டீதார். அவர் கத்வா பட்டீதார் சமூகத்தை சேர்ந்தவரை மணம் முடித்துக் கொண்டார்.

லேவா மற்றும் கத்வா பட்டீதார்கள் யார்? குஜராத் அரசியலில் அவர்கள் ஆற்றிய பங்கு என்ன என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு

சமூகம்

பட்டீதார் என்ற வார்த்தையின் பொருள் நிலம் வைத்திருப்பவர் என்பதாகும். இடைக்கால இந்தியாவில் இவர்கள் உழைக்கும் விவசாயிகளாகவும், முந்தைய சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களாகவும் இருந்ததால் அதிக நிலங்களை குத்தகைக்கு எடுத்துக்கொண்ட நபர்களாக அவர்கள் மாறினார்கள். சுந்திரத்திற்கு பிறகு அவர்களுக்கு அந்த நிலத்திற்கான உரிமைகள் வழங்கப்பட்டது. பிறகு பட்டீதார் சமூகத்தினர் விவசாய நிலங்களின் பெரும் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக ஆனார்கள்.

பாரம்பரியமாக நிலம் வைத்திருக்கும் இவர்கள் தொழில் துறையில் கால் பதித்தனர். சில பட்டீதார்கள் 70கள் மற்றும் 80களில் தொழிற்துறையில் இறங்கினார்கள். காலப்போக்கில் வணிகம் மற்றும் வர்த்தகத் துறையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை இவர்கள் பெற்றார்கள்.

பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஆப்பிரிக்காவில் குடியேறிய குஜராத் மக்களில் பெரும்பாலானோர் பட்டீதார் சமூகத்தினர் ஆவார்கள்.

6.5 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்தில் பட்டீதார்கள் எண்ணிக்கை மட்டும் 1.5 கோடியாக உள்ளது. ஓ.பி.சி. பிரிவில் இருக்கும் கோலிகள் பட்டீதார்களை விட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று கருதப்பட்டாலும் கூட அந்த பிரிவில் நிறைய உட்சாதியினர் இருப்பதால் அரசியல் ஆதாயங்களுக்காக அவர்களின் எண்ணிக்கையை பயன்படுத்த முடியவில்லை.

பட்டீதார்கள் மத்தியில், மாறாக, இரு சமூகத்தினரிடையும் சமூக ரீதியான உணர்வும், அரசியல் தொகுதி ரீதியாகவும் வலுவான உணர்வுகளை கொண்டுள்ளனர். இரண்டு முக்கிய துணைச் சாதியினரான கத்வாஸ் மற்றும் லீவாக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக விதிமுறைகள் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே அரசியல் குழுவாக வாக்களித்துள்ளனர்.

க்ஷத்ரிய-ஹரிஜன்-ஆதிவாசி-முஸ்லிம் (KHAM) கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கான காங்கிரஸ் முயற்சிக்கு எதிர்வினையாக, பாஜக பின்னால் ஒரு அணியாக திரண்டனர் பட்டீதார்கள். இதர உயர் சாதியினருடன் மறைந்த கேஷூபாய் படேல் பாஜகவை குஜராத்தில் முதன்முறையாக 1995ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். குடியரசுத் தலைவரின் சிறிய கால ஆட்சி மற்றும் 1996 மற்றும் 98க்கு இடையே ஒன்றரை ஆண்டு ஷங்கர்சின் வகேலாவின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் ஆட்சி தவிர்த்து இன்று வரை குஜராத்தை பாஜகவே ஆட்சி செய்து வருகிறது.

லேவாக்கள் (Leuvas) மற்றும் கத்வாக்கள் (Kadvas)

பட்டீதார்கள் அல்லது படேல்கள் ராமரின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். லேவாக்கள் மற்றும் கத்வாக்கள் ஆகியோர் முறையே ராமின் இரட்டை மகன்களான லவா மற்றும் குஷின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்கின்றனர். லேவாக்கள் கோடல்மாவை (Khodal Ma) குல தெய்வமாக வணங்குகின்றனர். கத்வாக்கள் உமிய மாதாவை குல தெய்வமாக வணங்குகின்றனர்.

மாநிலத்தின் கிழக்கு உள்ள பழங்குடி மக்களின் பகுதியை தவிர்த்து குஜராத்தின் அனைத்து பகுதிகளிலும் பட்டீதார்கள் உள்ளனர். அதிக அளவில் வடக்கு குஜராத், சௌராஷ்ட்ரா, மத்திய குஜராத், மற்றும் கிழக்கு குஜராத்தில் சூரத் போன்ற பகுதியில் இவர்கள் வாழ்கின்றனர். சமூக பிணைப்புகளை வலுவாக வைக்க தங்களின் துணை குழுக்களுக்குள் மட்டுமே திருமண உறவை மேற்கொள்கின்றனர்.

லேவாக்கள் கத்வாக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர். சௌராஷ்ட்ரா மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் லேவாக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கத்வாக்கள் வடக்கு குஜராத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தெற்கு குஜராத் இரு தரப்பினரையும் சமமாக கொண்டுள்ளது.

மத்திய குஜராத்தில் உள்ள பட்டீதார்களில் ச் காம் (6 கிராமங்கள்) மற்றும் சட்டாவிஸ் காம் (27 கிராமங்கள்) பட்டீதார்கள் என்று வழங்கப்படுகின்றனர். அவர்கள் சாரோதார் பிராந்தியத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து தங்கள் பெயரைப் பெற்றனர். இதர பின்தங்கியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சௌத்ரி படேல் என்ற சமூகத்தினர் வடக்கு குஜராத்தில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

பட்டீதார் முதல்வர்கள்

1973ம் ஆண்டு காங்கிரஸ் -ஜனதா தளம் சிமன்பாய் படேல் பட்டீதார் சமூகத்தில் இருந்து முதல்வர் பொறுப்பேற்ற முதல் நபர் ஆவார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் (O) மற்றும் ஜனதா மோர்ச்சாவின் கூட்டணியின் தலைவராக இருந்த பாபுபாய் ஜாஷ்பாய் படேல் 1975ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். அவசரநிலை நீக்கப்பட்ட பிறகு 77ம் ஆண்டில் ஜனதா கட்சியின் சார்பில் பாபுபாய் படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.

1990 ஆம் ஆண்டில், சிமன்பாய் இரண்டாவது முறையாக ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக முதல்வரானார். 1995ம் ஆண்டு கேஷூபாய் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்று மூன்றாவது பட்டீதார் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் , க்ஷத்ரியரான ஷங்கர்சின் வகேலா அவருக்கு எதிராக கலகம் செய்தார் மற்றும் சில மாதங்களுக்குள் கேஷூபாயை பதவி விலகும்படி கட்டாயப்படுத்தினார்.

கேஷூபாய் மீண்டும் 98ல் பாஜகவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இரண்டாவது முறையாக அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், கட்ச் பூகம்பத்திற்குப் பிறகு, 2001ஆம் ஆண்டில் பாஜக அவரை மாற்றியது, அவருடைய பதவிக்காலம் ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்தபோது. நரேந்திர மோடி புதிய முதல்வரானார்.

சிமன்பாய், பாபுபாய் மற்றும் கேஷூபாய் ஆகியோர் லேவாக்கள் . மோடி பிரதமராக 2014ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரின் நீண்ட கால கூட்டாளியான அனந்திபென் படேல், கத்வாவை மணந்து கொண்ட லேவா பட்டீதார், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் படேல் சமூகத்தின் இட ஒதுக்கீடு போராட்டத்தை அடுத்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

publive-image

பட்டீதார் கலகம்

2002ம் ஆண்டு தேர்தலின் போது 182 சட்டமன்ற தொகுதிகளில் 127 இடங்களில் வெற்றி பெற்றது பாஜக. பாஜகவின் மிகச்சிறந்த தேர்தல் வெளிப்பாடு அதுவாகும். ஆனால் கேஷுபாய் ஓரங்கட்டப்பட்ட பிறகு பாஜகவில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கினார்கள் பட்டீதார்கள்.

ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மோடி மாநிலம் மற்றும் கட்சியை இறுக பற்றிக் கொண்டாலும் கூட லேவா எம்.எல்.ஏக்கள் திரு கேஜ்ரா மற்றும் பாவ்க்கு உந்தாட் காங்கிரஸில் சேர்ந்தனர். 2002ம் ஆண்டில் உள்துறை அமைச்சராக இருந்த கோர்தன் ஜடாஃபியா, 2007இல் மஹாகுஜரத் ஜனதா கட்சியை (எம்ஜேபி) தொடங்கி, பட்டீதார் சமூகத்தின் வலிமையை மோடிக்கு எதிராக சவால் செய்து தோல்வி அடைந்தார்.

பட்டீதார்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகள் தொடர்பாக பொதுவெளியில் 2012ம் ஆண்டு கேஷூபாய் பேசினார். பிறகு மோடிக்கு எதிராக குஜராத் பரிவர்தன் கட்சியை துவங்கினார். ஜடாஃபியா ஜி.பி.பி. கட்சியில் சேர்ந்தார் ஆனாலும் கூட புதிய கட்சி இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜடாஃபியாவும் தோல்வி அடைந்தார்.

ஜி.பி.பி. கட்சி 2014ம் ஆண்டு பாஜகவில் இணைந்தது. இது ஜடாஃபியாவை மீண்டும் பாஜகவில் இணைக்க உதவியது. மேலும் கேஷூபாய் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் வழி வகுத்தது.

ஹர்திக் படேலின் கலகம்

2015ம் ஆண்டு மத்திய பகுதியில், 23 வயதான கத்வா படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் பட்டீதார் சமூகத்தினரை ஓ.பி.சியினராக அங்கீகரிக்க வேண்உம் என்று போராட்டத்தில் இறங்கினார். சமூகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏழைகளாக இருப்பதாலும், அரசு வேலைகளில் ஒதுக்கீடுகள் தேவைப்படுவதாலும் இந்த போராட்டத்தை அவர் நடத்தினார்.

இந்த போராட்டம் பாஜக எதிர்ப்பு தொனியைக் கொண்டிருந்தது, மேலும் லட்சக்கணக்கான கத்வாக்கள் மற்றும் லேவாக்களை ஒன்றிணைத்தார்.

தங்கள் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதை உணர்ந்தனர், சவுராஷ்டிராவில் உள்ள உமியாதம் சிட்சர் (கத்வா) மற்றும் ஸ்ரீ கோடால்தாம் டிரஸ்ட் (லேவா) போன்ற நிறுவப்பட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள். வடக்கு குஜராத்தில் உமியதாம் மற்றும் உஞ்சா (கத்வா), மத்திய குஜராத்தில் விஷ்வ் உமியா அறக்கட்டளை (கத்வா) மற்றும் சர்தார்தம் (இரண்டும்); மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள சூரத்தை அடிப்படையாகக் கொண்ட சமஸ்த் படிதார் சமாஜ் (இரண்டும்) ஒன்றாக இணைந்தன.

பெரும்பாலும் பா.ஜ.கவின் மீது சாய்ந்திருக்கும் இந்த அமைப்புகள், ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, சமூகத்தின் அரசியல் உயர்வு இழக்கப்படாமல் இருக்க, கத்வாஸ் மற்றும் லேவாஸை ஒன்றிணைக்க முயன்றன. மறுபுறம் லலித் வசோயா உமா கோடல் யாத்ரையை கேத்வாக்கள் மற்றும் லேவாக்களை ஒன்றிணைக்கும் வகையில் சௌராஷ்ட்ராவில் நடத்தினார்கள். இறுதியில் அதை பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் டிக்கெட்டில் எம்எல்ஏ ஆக மாற்றியது.

பாஜக அரசியல்

இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை தொடர்ந்து கத்வாவை சேர்ந்த பர்ஷோட்டம் ரூபாலா மற்றும் லேவாவின் மன்சுக் மாண்டாவியா மத்திய அமைச்சர்களாக 2016ம் ஆண்டு ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து வந்த மாதம் ஒன்றில் அனந்திபென்னிற்கு பதிலாக ஜெய்ன் பனியாவை சேர்ந்த விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணை முதல்வராக நிதின் படேல் என்ற கேத்வாவை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், இடஒதுக்கீடு போராட்டத்தின் கோபம் நீடித்தது, மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது, 1995 க்குப் பிறகு மிக மோசமான செயல்திறனை வெளிப்படுத்திய தேர்தல் ஆகும்.

இரண்டு உட்பிரிவினரை இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம் ஒன்றிணைத்தது. ஆனால் அரசியல் ரீதியாக சமூகத்தை காயப்படுத்தியது. போராட்டம் பெரும் அளவில் வெளியேறிய போதும் நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை. அதன் முக்கிய முகங்களான ஹர்திக், கோபால் இட்டாலியா மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் என்.சி.பி. ஆகியவற்றில் இணைந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment