Advertisment

நிரந்தரமாக மூடப்படும் பந்திபூர் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி நெடுஞ்சாலை - வயநாடு ஏன் எதிர்க்கிறது?

நெடுஞ்சாலை திறக்கப்பட்டால், இறப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். கடந்த பத்தாண்டில், விலங்குகளின் எண்ணிக்கையும் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Wayanad is protesting permanent closure of highway through Bandipur Tiger Reserve - நிரந்தரமாக மூடப்படும் பந்திபூர் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி நெடுஞ்சாலை - வயநாடு ஏன் எதிர்க்கிறது?

Wayanad is protesting permanent closure of highway through Bandipur Tiger Reserve - நிரந்தரமாக மூடப்படும் பந்திபூர் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி நெடுஞ்சாலை - வயநாடு ஏன் எதிர்க்கிறது?

Shaju Philip

Advertisment

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரியிலிருந்து முத்தங்கா வழியாக, கர்நாடக மாநிலம் குண்டல்பேட் செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், பந்திப்பூர் புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையில், போக்குவரத்தை நிரந்தரமாக தடை செய்யவும், மாற்று வழியாக 'மானந்தவாடி, குப்பா, கோனிக்குப்பா' சாலையை பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், 'தங்கள் பகுதிக்கு வியாபாரம், போக்குவரத்து உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வயநாடு பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மாற்று தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முத்தங்கா பகுதியில் தொடர் உண்ணாவிரதம் மற்றும் முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது.

முன்னதாக, கடந்த 2009லேயே இப்பகுதியில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

எந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலையில் இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டது?

ஆகஸ்ட் 2009 இல், கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்ட நிர்வாகம், என்ஹெச் 766 இன் 19 கி.மீ காடுகளில் இரவு போக்குவரத்தை தடை செய்தது. பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட அலுவலர், அவ்வழியே வரும் வாகனங்களால் தாக்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரித்த பின்னர் இந்த தடை அமலுக்கு வந்தது. 30 நிமிட இடைவெளியில் இந்த 19 கி.மீ நீள பாதையில் 44 வாகனங்கள் செல்வது ஆய்வில் கண்டறியப்பட்டது. இரவு போக்குவரத்து என்பது விலங்குகளின் இனப்பெருக்கம் மற்றும் உயிரியலை பாதிக்கும் என்றும், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியை சீர்குலைத்து, மனித வாழ்விடங்களுக்கு வழிதவறச் செய்யும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

கர்நாடக மோட்டார் வாகனச் சட்டத்தைப் பயன்படுத்தி, மாவட்ட நிர்வாகம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு காலையில் பயணத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டன.

publive-image

அப்போது எந்த எதிர்ப்பும் இல்லையா?

தடைக்குப் பின்னர், இரு மாநில போக்குவரத்து தரப்பு மற்றும் கேரளாவில் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சாமராஜநகர் துணை ஆணையரிடம் மனு அளித்தனர். பின்னர் வனப் பாதுகாப்பாளர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடினர். இது இடைக்கால உத்தரவின் மூலம் தடையை மீண்டும் நிலைநிறுத்தியது. ஒரு கட்டத்தில், பயணிகள் மற்றும் வர்த்தகர்களாக இருக்கும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டியதை விட, வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஆர்வம் முக்கியமானது என்பதை நீதிமன்றம் கவனிக்கத் தொடங்கியது.

2010 ஆம் ஆண்டில், நீதிமன்றம் இரவு போக்குவரத்து தடையை உறுதி செய்தது. என்.எச் 766 வழியாக பயணிப்பதை விட 35 கி.மீ நீளமுள்ள மாற்று சாலையை சுட்டிக்காட்டி, கேரளாவின் மனந்தவடியில் இருந்து கோடகு மாவட்டத்தில் கோனிகுப்பல் வழியாக மைசூரு வரை செல்லும் இந்த சாலையை மேம்படுத்துமாறு நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

மாநிலங்களுக்கிடையில் இதுகுறித்த கலந்துரையாடல்கள் இருந்தபோதிலும் இந்த பிரச்சனை முடிவில்லாமல் இருந்தது. வனப்பகுதி வழியாக நெடுஞ்சாலையை அகலமாக்குவது என்ற கேரளாவின் பரிந்துரை அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது.

இரவு தடை அதன் நோக்கத்தை பூர்த்திசெய்துள்ளதா?

பந்திபூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் திப்பையா பாலச்சந்திரா, விலங்குகளின் இறப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்கிறார். "தடைக்கு முன்னர், விபத்துக்களில் கிட்டத்தட்ட 100 விலங்குகள் இறந்தன. ஆனால் இப்போது அது ஐந்து முதல் பத்து வரை குறைந்துள்ளது. நெடுஞ்சாலை திறக்கப்பட்டால், இறப்புகள் பல மடங்கு அதிகரிக்கும். கடந்த பத்தாண்டில், விலங்குகளின் எண்ணிக்கையும் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன" என்றார்.

990.51 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள பந்திபூர் புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி, முதுமலை வனவிலங்கு சரணாலயம் (தமிழ்நாடு), வயநாடு வனவிலங்கு சரணாலயம் (கேரளா) மற்றும் நாகர்ஹோல் தேசிய பூங்கா (கர்நாடகா) ஆகியவற்றால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காடுகளின் ஒரு பகுதியாகும். யானை உட்பட பல வகையான வனவிலங்குகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து மாநிலங்களை கடக்கின்றன. மைசூர் மகாராஜாவுக்கு ஒரு வேட்டை இருப்பு இருந்தபோது, பந்திபூர், நாட்டின் மிகப் பழமையான புலிகள் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்றாக இருந்தது. அவ்வாறாக 1973 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், 1984ல் தேசிய பூங்காவானது. பந்திபூரில் 140 புலிகள், 1,600 யானைகள் மற்றும் 25,000 புள்ளி மான்கள் உள்ளன என வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலையைத் தவிர்க்க வழி இல்லையா?

கொல்லேகல்-மைசூரு-கோழிக்கோடு சாலை 200 ஆண்டுகளாக இருந்து வருகிறது, இது ஒரு முக்கிய இணைப்பாகவும் உள்ளது. இது 1989 ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது, பின்னர் NH 212 என பெயரிடப்பட்டது, பின்னர் NH 766 என பெயர் மாற்றப்பட்டது. புனே-பெங்களூரு ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலைகள் திறப்பானது, பெங்களூரு-மைசூரு அதிவேக நெடுஞ்சாலையின் வளர்ச்சியுடன், கேரளாவையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் ஒரு முக்கிய இணைப்பாக NH 766 ஐ மாற்றியது. 150-பதிவு செய்யப்பட்ட ரிசார்ட்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான ஹோம்ஸ்டே வசதிகளுடன், வயநாடு ஒரு பெரிய மலை சுற்றுலாத்தலமாக உருவெடுத்து, பெங்களூருவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுகிறது.

வயநாடு மற்றும் கர்நாடகா இடையே வேறு இரண்டு சாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று, மைசூரு மற்றும் மனந்தவடி (வயநாடு) இடையே, அதன் ஒரு பகுதி நாகர்ஹோல் தேசிய பூங்கா வழியாக செல்கிறது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில், 2008 முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அங்கு இரவு போக்குவரத்து மூடப்பட்டுள்ளது. மற்றொரு சாலையானது மட்டுமே 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதையாகும். மனந்தவாடி மற்றும் மைசூரு இடையே, இது குட்டா, கோனிகுப்பல் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஹுன்சூர் வழியாக செல்கிறது. இதுவும் காடு வழியாகவே செல்கிறது.

தற்போதைய போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?

ஆகஸ்ட் 8 ம் தேதி, இரவு போக்குவரத்து தடையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது, இதை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆதரித்தன. கேரளா இந்த தடையை நீக்கக் கோரியது. மாற்று சாலையை மேம்படுத்த நீதிமன்றம் NHAI  கேட்டுக் கொண்டதுடன், NH 766ஐ நிரந்தரமாக மூடுவது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோரியது. செப்டம்பர் 25 ஆம் தேதி உண்ணாவிரதத்துடன் வயநாட்டில் தொடங்கிய போராட்டத்திற்கு கேரளாவின் அனைத்து அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளின் ஆதரவு உள்ளது. போக்குவரத்து தடை என்பது வயநாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். குறிப்பாக, சுல்தான் பாத்தேரி தாலுகாவில். தவிர, மாற்று சாலை 35 கி.மீ தூரத்தில் உள்ளது, இது பொருட்களின் விலையை உயர்த்துவதோடு இதனால் நேரமும் பணமும் செலவாகிறது.

Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment