Advertisment

பெண்களுக்கு ரூ.1000; ஆம் ஆத்மியின் இந்த அறிவிப்பை நிறைவேற்ற பஞ்சாப்பிற்கு எவ்வளவு நிதி தேவைப்படும்?

வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணத்தை ரூ. 3 குறைப்பதாக அறிவித்துள்ளதால், கருவூலத்தில் ரூ.3,300 கோடிக்கு மேல் கூடுதல் சுமை ஏற்படப் போகிறது.

author-image
WebDesk
New Update
Punjab election

Delhi CM and AAP convener Arvind Kejriwal with Punjab President Bhagwant Mann during the party’s announcement "Free Health Services" as 2nd guarantee ( pre-poll promise) for Punjab in Ludhiana on Thursday.Express Photo by Gurmeet Singh30092021

Navjeevan Gopal 

Advertisment

What AAPs Rs 1000 to all women will cost Punjab : அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திங்கள் கிழமை அன்று மிஷன் பஞ்சாப் என்ற திட்டத்தை அறிமுகம் செய்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை மக்கள் வெற்றி அடைய செய்தால், பஞ்சாபில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். மோகாவில் கெஜ்ரிவாலின் அறிவிப்பு, பிற கட்சிகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலவசங்கள் மற்றும் அடுத்தடுத்த அரசாங்கங்களின் மானியங்கள் மற்றும் ஜனரஞ்சக திட்டங்கள் ஆகியவை கடனில் தத்தளிக்கும் பஞ்சாபில் வந்து சேர்கின்றன.

இதற்கு என்ன செலவாகும்?

இந்திய தேர்தல் ஆணையத்தின் படி, 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அம்மாநிலத்தில் மொத்தம் 96.19 லட்சம் பெண்கள் உள்ளனர். 2022ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஆம் ஆத்மி இந்த திட்டத்தின் பயனாளிகளாக 1 கோடி பெண்கள் இருப்பார்கள் என்று மதிப்பிட்டுள்ளது. ஆத் ஆத்மி கட்சி கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில் 1 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 கோடி கொடுப்பது ஆண்டுக்கு ரூ.12,000 கோடி நிதியாக இருக்கும்.

இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்க பணம் எங்கிருந்து வரும் என்று எதிர்க்கட்சியினர் கேட்பார்கள் என்று சுட்டிக்காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால், எந்த அரசாங்கத்திடமும் பணம் பற்றாக்குறையாக இல்லை. மக்களுக்கு உழைக்கும் எண்ணம் மட்டுமே தேவை என்று கூறியுள்ளார்.

பஞ்சாப்பின் கடன் நிலைமை

மார்ச் 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த போது அதற்கு முன்பு 10 வருடங்களாக ஆட்சி செய்த எஸ்ஏடி-பாஜக அரசிடமிருந்து ரூ.1.82 லட்சம் கோடி கடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து சேர்ந்தது. 2021-22 நிதி நிலை அறிக்கை நிலுவையில் உள்ள கடன் கிட்டத்தட்ட 2.82 லட்சம் கோடியாக உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. . 2020-21 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி இழப்பீட்டிற்குப் பதிலாகப் பெறப்பட்ட ரூ.8,359 கோடியைக் கணக்கிட்ட பிறகு, இது திறம்பட ரூ.2.73 லட்சம் கோடியாக மாறுகிறது.

2019-20ல் நிலுவைத் தொகை ரூ.2.29 லட்சம் கோடியை எட்டியது. 2020-21 பட்ஜெட் மதிப்பீடுகளில், இது ரூ.2.48 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.2.61 லட்சம் கோடியாக உயர்ந்தது (செயல்திறன் ரூ.2.52 லட்சம் கோடி).

2019-20 ஆம் ஆண்டில் நடைமுறையில் உள்ள கடன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிஎஸ்பி) 5.74 லட்சம் கோடி ரூபாயில் 39.90 சதவீதமாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில், இது 6.07 லட்சம் கோடி ஜிஎஸ்டிபியில் 45% ஆகும்.

2019-20ல் ரூ.1.32 லட்சம் கோடியாக இருந்த பஞ்சாபின் மொத்த வரவு, நடப்பு நிதியாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ல் ரூ.1.34 லட்சம் கோடியாக இருந்த மொத்த செலவினம், இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் அட்வான்ஸ்கள் தவிர, நடப்பு நிதியாண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தக் கடன் சேவைக்கு செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மானியங்களும் திட்டங்களும்

2021-22 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் விவசாயிகள், பல்வேறு வகை தொழில்கள் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மின் மானியம் காரணமாக, பஞ்சாப் மாநில மின் கழகத்திற்கு (PSPCL) அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10,621 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2019-20ல் ரூ.9,394 கோடியாக இருந்தது.

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, இந்த மாத தொடக்கத்தில், 7 கிலோவாட் வரையிலான சுமைகளைக் கொண்ட, மூன்று அடுக்குகளில் வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணத்தை ரூ. 3 குறைப்பதாக அறிவித்துள்ளதால், கருவூலத்தில் ரூ.3,300 கோடிக்கு மேல் கூடுதல் சுமை ஏற்படப் போகிறது.

இந்த மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசலில் ரூ. 10 மற்றும் ரூ. 5 வரை வாட் வரி குறைப்பையும் அறிவித்துள்ளார் பஞ்சாப் மாநில முதல்வர். இதுவும் அரசின் கருவூலத்திற்கு மேலும் ரூ. 3,300 கோடி சுமையை ஏற்படுத்தும். மேலும் கலால் வரியைக் குறைப்பதால் ஆண்டுக்கு ரூ.850 கோடி செலவாகும்.

பஞ்சாப் பட்ஜெட் 2021-2022 பார்வையில் ரூ. 7,140 கோடி செலவில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாதாந்திர சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.750 லிருந்து ரூ.1,500 ஆக இரட்டிப்பாக்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment