Advertisment

Explained: கோவிட்-19 இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதா?

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகெங்கிலும் உள்ள அதிகாரிகள் பொருளாதாரத்தை முடக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அனைவரின் மனதிலும் உள்ள பயத்தை இரண்டு வார்த்தைகளில் வெளிப்படுத்தலாம். அது என்னவென்றால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
explained, tamil indian express explained, coronavirus explained,coronavirus second wave, worlwide coronavirus cases, கொரோனா வைரஸ், கோவிட்-19 இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதா, கொரோனா வைரஸ் 2வது அலை, global coronavirus deaths, cases returning coronairus, What are the prospects for a second wave of Covid-19, coronavirus, reopening economy coronavirus, new cases coronavirus, news cases china, united states coronavirus, euroepe coronavirus asia coronavirus , tamil indian express enws

explained, tamil indian express explained, coronavirus explained,coronavirus second wave, worlwide coronavirus cases, கொரோனா வைரஸ், கோவிட்-19 இரண்டாவது அலைக்கு வாய்ப்பு உள்ளதா, கொரோனா வைரஸ் 2வது அலை, global coronavirus deaths, cases returning coronairus, What are the prospects for a second wave of Covid-19, coronavirus, reopening economy coronavirus, new cases coronavirus, news cases china, united states coronavirus, euroepe coronavirus asia coronavirus , tamil indian express enws

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகெங்கிலும் உள்ள அதிகாரிகள் பொருளாதாரத்தை முடக்கும் கட்டுப்பாடுகள் குறித்து அனைவரின் மனதிலும் உள்ள பயத்தை இரண்டு வார்த்தைகளில் வெளிப்படுத்தலாம். அது என்னவென்றால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை. அவர்களுடைய கவலை என்னவென்றால், தொற்றுநோய் புதிய வலிமையுடன் மீண்டும் தோன்றும். இதனால், மீண்டும் மீண்டும் தொற்றுநோய்கள், சுகாதார அமைப்புகள் மற்றும் பொதுமுடக்கத்திற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதால் ஆசியா மற்றும் அமெரிக்காவில் புதிய வைரஸ் பரவல் அச்சத்தை அதிகரித்துள்ளன.

Advertisment

இரண்டாவது அலை என்றால் என்ன?

இது நன்கு வரையறுக்கப்பட்ட அளவிலான அறிவியல் சொல் அல்ல. ஒரு பகுதியில் தீவிரமாக அதிகரித்த வைரஸ் தொற்று சரிசெய்யப்பட்ட பின்னர், அடுத்தடுத்து தீவிரமாக தொற்று அதிகரிப்பதை இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

மனிதர்களில் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு பாதுகாப்பு இல்லாததால் புதிய நோய்க்கிருமிகளால் தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதுதான் உலகளாவிய தொற்று பரவலாக மாற அவர்களை அனுமதிக்கிறது. தொற்றுநோய்கள் அசாதாரணமானது. ஆனால், இன்ஃப்ளூயன்ஸா அடிக்கடி ஏற்படும் நோய்களில் ஒன்று. இதில் பெரும்பாலும் அடிக்கடி நடப்பது என்னவென்றால் ஃபுளு வைரஸின் புதிய மாறுப்பட்ட வைரஸ் உலகம் முழுவதும் ஒரு சுனாமியைப் போல பரவி பின்னர் பின்வாங்குகிறது. சில மாதங்களுக்குப் பிறகு, அது மீண்டும் வந்து உலகம் முழுவதும் பரவுகிறது. அல்லது உலகின் பெரிய பகுதிகளில் மீண்டும் பரவுகிறது.

பெரும்பாலான நாடுகள் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நடவடிக்கை எடுத்தன. அந்த நடவடிக்கை வைரஸின் பரவலைக் குறைக்கிறது. ஆனால், பலர் மீண்டும் வீட்டைவிட்டு வெளியே செல்லத் தொடங்கியவுடன் மீண்டும் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் புளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் பகுதிகளில் மீண்டும் திறந்த வாரங்களில் பரவலைக் கண்டன. இது ஏன் என்பதை விளக்க இயாலாத நிலையில் வல்லுநர்கள் உள்ளனர். ஆசியாவிலும் பீதி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் எல்லையில், சீனாவின் ஜிலின் மாகாணத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சீனாவின் முதல் ஊரடங்கு தொலைதூரத்தில் உள்ள வுஹானில் முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜிலின் மாகாணத்தில் மே மாதத்தில் டஜன் கணக்கான வழக்குகள் கண்டறியப்பட்டது. ஜூன் தொடக்கத்தில் அந்த வெடிப்பு கட்டுப்பாட்டில் இருந்தது மற்றும் சாதாரண வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. ஜூன் தொடக்கத்தில் இந்த தொற்று பரவல் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் தென்கொரியா சமூக இடைவெளி நடவடிக்கைகளை தளர்த்தத் தொடங்கிய பின்னர் புதிய தொற்றுநோய்கள் தோன்றியதால் ஜூன் மாதத்தில் மேலும் தளர்த்துவதற்கான திட்டங்களை நிறுத்தியது. பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் தொடர்பு-தடமறிதல் ஆகியவை வைரஸ் பரவல் ஒரு கொத்து அலையாக வளர்வதைத் தடுக்கும் முக்கிய கருவிகளாக உள்ளன.

முதல் அலையை பின்வாங்கச் செய்வது எது?

பருவ மாற்றத்தால் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயை தற்காலிகமாகத் பின்வாங்கி கோடையின் போது உலகின் வடக்குப் பகுதி வெப்பமடையும் போது தெற்கு அரைக்கோளத்திற்கு நகரும். அதற்கு நேற்மாறாகவும் நகரும். இந்த வைரஸ் பெரும்பாலான பகுதிகளில் உள்ளவர்களில் பெரும் பகுதியினரைத் தொற்றியிருக்கலாம். அவர்களுக்கு மீண்டும் தொற்றுநோயிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைக் அளித்து மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம். அது வைரஸின் சுழற்சியைக் குறைப்பதன் மூலம் பாதிக்கப்படாதவர்களைப் பாதுகாக்கிறது. கோவிட்-19ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் விஷயத்தில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் முன்மாதிரி இல்லாத அளவில் இயக்க கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு சமூக இடைவெளி நடவடிக்கைகளை ஒன்றிணைந்தன. அவை வைரஸை எளிதில் பரப்ப முடியாத அளவுக்கு மக்களை ஒதுக்கி வைத்தன.

ஒரு வைரஸ் எவ்வாறு திரும்பி வருகிறது?

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக விரைவாக நீக்குவதன் மூலம் தொற்று புதிதாக அதிகரிக்க தொடங்கக்கூடும். பிற காரணிகள் மிகவும் அதிக அளவிலான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனை இரண்டாவது அலையாக தெளிவாக அடையாளம் காணலாம். இன்ஃப்ளூயன்ஸாவைப் பொறுத்தவரை, குளிர்ச்சியான காலநிலையில் தொடங்கியும் உள்ளது. குளிர்ச்சியான காலநிலை கொரோனா வைரஸையும் பாதிக்கும் ஒரு காரணியாகும் அல்லது நோய்க்கிருமி மாற்றமடையக் கூடும். இது காய்ச்சலின் மற்றொரு அம்சமாகும். இது தொடர்ந்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உருவாகிறது. 1918 இன் பிற்பகுதியில், இந்த வரலாற்று காய்ச்சல் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டது. இந்த தொற்றுநோய் பரவி பெரும்பாலான இறப்புகளை ஏற்படுத்தியது. சில ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு பிறழ்வு மூலம் கொண்டு வரப்பட்டதாக நம்புகிறார்கள். இந்த வைரஸை மீண்டும் பெரும்பாலான மக்களின் நோயெதிர்ப்பு அமைப்புகளில் அடையாளம் காணமுடியாது. மற்றொரு முக்கியமான மாறுபாடு என்னவென்றால், முன்னர் தொற்று ஏற்படாத மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மக்களுக்கு வைரஸின் தாக்கம் இருக்கும்.

வைரஸை எது தடுக்க முடியும்?

பெரிய அளவில் நடமாட்டத்தை திறப்பதற்கு முன்பு ஒவ்வொரு விளைவையும் கட்டங்களில் பரிசோதித்து கட்டுப்பாடுகளை நீக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், அனைவரையும் தடுத்து வைக்காமல் தொற்றுநோய் எண்ணிக்கையை குறைவாக வைத்திருப்பதற்கு பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றை அளவிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் சமீபத்திய தொடர்புகளை அடையாளம் காண வேண்டும். அப்படி அடையாளம் காணப்பட்டவர்களையும் பரிசோதிக்கலாம். தேவைப்பட்டால் தனிமைப்படுத்தலாம். இறுதியில், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். வைரஸ் பரவுவதை நிறுத்திவிடும் அல்லது வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உரிமம் பெறப்பட்டிருக்கும்.

சார்ஸ் வைரஸின் இரண்டாவது அலை இல்லை ஏன்?

ஆசியாவில் 2002-2003-ம் ஆண்டில் சுவாச நோய் பரவியது. ஆனால், அது ஒரு தொற்றுநோயின் அளவை எட்டவில்லை. ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் கோவிட்-19க்கான காரணத்தைப் போல இது தொற்றவில்லை. இதன் பரவல் முக்கியமாக மருத்துவமனைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்தது. அங்கு மக்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் திரவங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டனர். எபோலா என்பது மனிதர்களுக்கு ஒப்பீட்டளவில் புதிய மற்றொரு நோய்க்கிருமியாகும். ஆபிரிக்காவில் அவ்வப்போது தொற்று பரவல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், சில அமைப்புகளில் இந்த வைரஸ் உயர் தொற்றுநோயாக இருந்தாலும், கொரோனா வைரஸ் போல உலகம் முழுவதும் பரவும் அளவிற்கு போதுமான அளவு இது தொற்றுநோயாக இருக்கவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coronavirus Who
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment