Advertisment

விண்கல் 2018விபி1 என்றால் என்ன? அது நவம்பரில் பூமியை நோக்கி வருமா?

அமெரிக்கா, அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, பூமியுடன் மோதுவதற்கு ஒரு விண்கல் பூமி கிரகத்திற்கு மிக அருகில் வரக்கூடும் என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் அருகில் உள்ள பொருள்களை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
astroid 2018VP1, Election Day Astroid, November astroid, விண்கல், விண்கல் 2018விபி1, பூமியை நோக்கி வருமா விண்கல் 2018விபி1, what is astroid 2018VP1, astroid US elections, அமெரிக்கா அதிபர் தேர்தல், Tamil indian express

அமெரிக்கா, அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, பூமியுடன் மோதுவதற்கு ஒரு விண்கல் பூமி கிரகத்திற்கு மிக அருகில் வரக்கூடும் என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் அருகில் உள்ள பொருள்களை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

சமூக ஊடகங்களில் பலர் இந்த விண்கல் வரும் செய்தியைக் கண்டு எச்சரிக்கை தெரிவித்தாலும், நாசா அதன் அபாயத்தைக் குறைத்து ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்துள்ளது. “விண்கல் 2018 விபி1 மிகச் சிறியது. தோராயமாக. 6.5 அடி கொண்டது. அதனால், பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை! இது தற்போது நமது கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைய 0.41% வாய்ப்பு உள்ளது. ஆனால், அவ்வாறு செய்தால், அதன் மிகச்சிறிய அளவு காரணமாக அது சிதைந்துவிடும்.” என்று தெரிவித்துள்ளது.

2018 விபி1, ‘தேர்தல் நாள் விண்கல்’ என்றால் என்ன?

2018 விபி என அழைக்கப்படும் இந்த விண்கல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை 13 நாள் கண்காணிப்பு வளவைத் தொடர்ந்தது. அதன்பிறகு, அந்த விண்கல் மீண்டும் கண்டறியப்படவில்லை.

இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இரண்டு வருட சுற்றுப்பாதைக் காலத்தைக் கொண்ட ஒரு விண்கல் என்றும் இது பூமியிலிருந்து சுமார் 2,80,000 மைல் தொலைவில் இருந்தது என்றும் அறிவியல் எச்சரிக்கை ஆய்விதழ் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு, நாசாவின் நெருக்கமான அணுகும் தரவுத்தளத்தின்படி, இந்த விண்கல் 4,700 மைல்களுக்கு அருகே இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

விண்கல் 2018 விபி 1 பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

2018 விபி1 பூமியை பாதிக்கும் என்று 0.41 சதவீதம் அல்லது 240-ல் 1 பங்கு வாய்ப்பு இருப்பதாக நாசா கூறியுள்ளது. விண்கல் நமது கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்தாலும், நவம்பர் 2ம் தேதி எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.

தி பிளானட்டரி சொசைட்டி குறிப்பிட்டுள்ளபடி, 1 மீட்டருக்கு மேல் விட்டம் கொண்ட சுமார் 1 பில்லியன் விண்கற்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 30 மீட்டர் விட்டத்தைவிட பெரிய பொருட்களே மோதலில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக் கூடும். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான டைனோசர் இனங்கள் திடீரென அழிந்துபோனதற்கு காரணமான விண்வெளிப் பொருள் சிக்ஸ்சுலப் 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டது.

2018விபி1 மொத்தமே 2 மீட்டர் விட்டம் கொண்டது. ஒரு சிறிய ஆட்டோ மொபைலின் அளவுடையது. அது பூமியை அடைவதற்கு முன்பு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபின் ஒரு அழகான நெருப்பு பந்தாக எரியும். நாசா கூறியுள்ளபடி, இதுபோன்ற நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை நடக்கிறது.

நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள பொருள்களை அவதானிக்கும் திட்டத்தின்படி, 140 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட விட்டம் கொண்ட (ஒரு சிறிய கால்பந்து மைதானத்தை விட பெரியது) விண் கற்கள் மிகப் பெரிய கவலையாக இருக்கின்றன, அவை பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. இருப்பினும், 140 மீட்டருக்கும் அதிகமான எந்த விண்கற்களும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியைத் தாக்குவதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விண்கற்களை திசை திருப்புதல்

பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள், விண்கற்கள் பூமியை அடைவதற்கு முன்னர் அவற்றை வீசுவது அல்லது விண்கலத்தால் தாக்குவதன் மூலம் பூமியை நோக்கி வரும் போக்கிலிருந்து திசை திருப்புவது போன்ற தீவிரமான மோதல் நிகழ்வுகளின் அச்சுறுத்தல்களைத் தடுக்க பல்வேறு வழிகளை பரிந்துரைத்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கை சிறுகோள் தாக்கம் மற்றும் விலகல் மதிப்பீடு (AIDA)ஆகும். இதில் நாசாவின் இரட்டை விண்கல் திசைதிருப்பல் சோதனைப் (DART)பணி மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ஹேரா ஆகியவை அடங்கும். இந்த மிஷனின் இலக்கு பூமிக்கு அருகிலுள்ள ஒரு இரட்டை விண்கல் டிடிமோஸ் ஆகும். அதன் வடிவத்தில் ஒன்று பூமிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அளவு கொண்டது.

2018 ஆம் ஆண்டில், நாசா DART கட்டுமானத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. இது 2022 ஆம் ஆண்டில் டிடிமோஸ் அமைப்பின் சிறிய விண்கல் மீது தாக்கும் நோக்கத்துடன் 2021 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஹேரா, DART மோதல் தாக்கத்தால் உருவாகும் பள்ளத்தை அளவிடுவதற்கும், விண்கல்லின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்வதற்கும் 2027 ஆம் ஆண்டில் டிடிமோஸ் அமைப்புக்கு வரும்.

Isro America Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment