Advertisment

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் அர்தியாக்கள் யார்? அவர்களின் பங்கு என்ன?

கமிஷன் முகவர்கள் வேளாண் பொருளாதாரத்தில் சிக்கலான மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் பங்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது - இந்த கட்டுரை பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து நடந்திக்கொண்டிருக்கும் போராட்டத்தில் ஏன் முன்னணியில் உள்ளனர் என்பதை விளக்குகிறது.

author-image
WebDesk
New Update
arhatiyas, arhatiyas in farmer protests, role of arhatiyas, Who are arhtiyas, farmers protest, அர்தியாக்கள் யார், விவசாயிகள் போராட்டம், பஞ்சாப், ஹரியானா, what is arhatiyas, who is arhatiyas, apmc system, mandi, agriculture, tamil indian express news

“நீங்கள் எங்களுடைய 2.5% கமிஷனைத்தான் பார்க்கிறீர்கள். ஆனால், நீங்கள் எங்கள் செலவுகளைப் பார்க்கவில்லை” என்று அஜ்மீர் சிங் கில் கூறுகிறார்.

Advertisment

பஞ்சாபின் மிகப்பெரிய ஏபிஎம்சி (வேளாண் உற்பத்தி சந்தைக் குழு) மண்டிக்கு சொந்தமான லூதியானாவுக்கு அருகிலுள்ள கன்னாவில் மிகப் பெரிய அர்தியா - அல்லது கமிஷன் முகவரின் இந்த அறிக்கை, நன்கு புரிந்து கொள்ளப்படாத பொருளாதார செயல்பாட்டாளரின் செயல்பாடுகள் குறித்த நுண்ணறிவை வழங்குகிறது.

இடைத்தரகர்கள் மட்டுமல்ல

நடந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்துகு விமர்சன ரீதியான ஆதரவை அளித்து வரும் அர்தியாக்கள் பெரும்பாலும் ‘பிச்சவுலியாக்கள்’ அல்லது இடைத்தரகர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

ஆனால், அது முழுவதும் மிகைப்படுத்தல் ஆகும்.

அர்தியா ஒரு விவசாயிடமிருந்து வாங்கிய தானியத்திற்கு உரிமை உள்ள ஒரு வர்த்தகர் அல்ல. அவர் ஒரு விவசாயி. அதோடு அவர் உண்மையாக வாங்குபவருக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு உதவுகிறார். அவர் ஒரு தனியார் வர்த்தகர் மற்றும் செயலில் ஈடுபடுபவர், ஏற்றுமதியாளர் அல்லது இந்திய உணவுக் கழகம் (FCI) போன்ற அரசாங்க முகவர். அது அவரை தரகருடன் ஒத்திருக்கச் செய்கிறது.

இருப்பினும், அர்தியா விவசாயிக்கு நிதியளிக்கிறார்கள். அதாவது, கமிஷனில் இருந்து அவர் பெறும் வருமானம் மற்றும் அவர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு மற்றும் மதிப்பைப் பொறுத்து அர்தியாவின் நலன்களை விவசாயியின் நலன்களுடன் அதிகம் ஒருங்கிணைக்கிறது.

பஞ்சாப்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை பயிர்கள்

ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்குவில் இப்போது முக்கிய போராட்டக் களத்தில் இருக்கும் கில், சமீபத்திய காரீஃப் பயிர்களை சந்தைப்படுத்துதல் பருவத்தில் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்ட 58,875 குவிண்டால் நெல்லை கையாண்டார். அந்த நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையான (எம்.எஸ்.பி) ஒரு குவிண்டால் ஒன்றுக்கு 1,888 ரூபாயில் 2.5% கமிஷன் என மொத்தம் ரூ.27.8 லட்சமாக இருந்தது.

62 வயதான இவர் 7,000 குவிண்டால் பாஸ்மதி நெல், 12,500 குவிண்டால் மக்காச்சோளம் மற்றும் 1,600 குவிண்டால் சூரியகாந்தி ஆகியவற்றைத் தவிர 21,000 குவிண்டால் கோதுமை வாங்குவதற்கு (ரூ.1,925/குவிண்டால் எம்.எஸ்.பி) வசதி செய்தார். கடைசி மூன்று பயிர்களை முறையே குவிண்டால் ரூ.2,000, ரூ.900 மற்றும் ரூ .4,000 என்ற சந்தை விகிதத்தில் தனியார் நபர்கள் வாங்கினார்கள். இந்த பரிவர்த்தனைகளிலிருந்து 2.5% என்ற அவரது மொத்த கமிஷன் ரூ.46 லட்சத்திற்கும் சற்று அதிகமாக வந்தது. அதில் ரூ.37.9 லட்சம் (82%) இரண்டு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (எம்.எஸ்.பி) வாங்கிய பயிர்களிலிருந்து வந்தது.

“அந்த தொகை (ரூ. 46 லட்சம்) எனது வருமானம் அல்ல. அதிலிருந்து நீங்கள் செலவினங்களைக் கழிக்க வேண்டும்” என்று கில் கூறுகிறார். ஒவ்வொரு அர்தியாவும் குறைந்தது 7-8 தொழிலாளர்களை ஈடுபடுத்துகிறது. அவர்கள் விவசாயியின் டிராக்டர்-தள்ளுவண்டியில் இருந்து அர்தியாவின் கடைக்கு முன்னால் மூட்டைகளை இறக்கி ஏலம் விடுகிறார்கள். அவர்கள் அதை சுத்தம் செய்து, பைகளை நிரப்பி, எடை போட்டு, மூட்டைகளை தைத்து இறுதியாக லாரிகளில் ஏற்றி மண்டியில் இருந்து அனுப்புகிறார்கள்.

கில்லின் ஒரு பெரிய அர்தியாவில் 70 தொழிலாளர்கள் முக்கிய தானியங்கள் வரும் பருவத்தில் (நெல்லுக்கு ஏப்ரல்-மே மற்றும் கோதுமைக்கு அக்டோபர்-நவம்பர்) வேலை செய்கிறார்கள். “நாங்கள் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்குவதற்கும் பணம் வழங்க வேண்டும். இங்கு வரும் விவசாயிகளுக்குகூட தேநீர் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட வேண்டும். கூடுதலாக, முனிம் (கணக்காளர்) மற்றும் பணம் செலுத்தும் பிற அலுவலக ஊழியர்களுக்கான செலவுகள், ஜே-படிவங்கள் / விற்பனை விலைப்பட்டியல் போன்றவை வழங்கப்படுகின்றன” என்று கில் கூறுகிறார்.

இந்த செலவுகளில் சில விவசாயிகளிடமிருந்தும் (இறக்குதல் மற்றும் சுத்தம் செய்வதற்காக) மற்றும் வாங்குபவர்களிடமிருந்தும் (எடை போடுதல், மூட்டை பிடித்தல், மூட்டைகளை தைத்து ஏற்றுதல்) நிலையான அரசாங்க கட்டணத்தில் பெறப்படுகின்றன. இதில் பல செலவுகள் உள்ளன - மின்சாரம், துப்புரவு இயந்திரம், மின்னணு எடைகள் மற்றும் மூட்டைகள் ஏற்றப்படாத தானியங்களுக்கான தார்ப்பாய்கள் ஆகியவற்றை அர்தியாதான் ஏற்க வேண்டும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஈரப்பதம் இருக்கக்கூடிய அல்லது நியாயமான சராசரி தர விதிமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்யாத தானியங்களை ஏற்றுக்கொள்ள அதிகாரிகளை எப்போதாவது வற்புறுத்த வேண்டும்.

"இதன் முடிவில், நாங்கள் 1% தான் சம்பாதிக்கிறோம். 2.5% அல்ல” என்று கில் கூறுகிறார்.

கன்னா ஏபிஎம்சி 270 உரிமம் பெற்ற அர்தியாக்களைக் கொண்டுள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கில் போன்ற ஜாட் சீக்கிய விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த ஆண்டு சுமார் 26.25 லட்சம் குவிண்டால் நெல் மற்றும் 12.5 லட்சம் குவிண்டால் கோதுமையைக் கையாண்டனர். அவர்களைப் பொறுத்தவரை, இது ஒரு உறுதி செய்யப்பட்ட வணிகமாகும். அங்கே ஒரு மாதத்திற்குள் பணம் வரும். பாஸ்மதி, மக்காச்சோளம் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றில், வாங்குபவர்கள் அனைவரும் தனியார்கள்தான்.

“அவர்கள் 3-4 மாதங்களுக்குப் பிறகுதான் பணம் செலுத்துகிறார்கள். சில சமயங்களில் (பணம் செலுத்தாமல்) ஓடிவிடுவார்கள். எங்கள் தரப்பில் 48 மணி நேரத்திற்கு அப்பால் விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதை நாங்கள் தாமதப்படுத்த முடியாது” என்று கன்னாவின் அர்தியா சங்கத்தின் தலைவர் ஹர்பன்ஸ் சிங் ரோஷா கூறுகிறார்.

ரோஷாவின் சங்கம் திங்கள்கிழமை 50 பேருந்துகள் மற்றும் 80 தனிப்பட்ட வாகனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அர்தியாக்களை ஏற்றி சிங்கு எல்லைக்கு அனுப்பியது. “எங்கள் மண்டி முறையை பலவீனப்படுத்தவும், எம்.எஸ்.பி கொள்முதல் செய்ய முற்படும் முறையை பலவீனப்படுத்தும் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெறும் வரை நாங்கள் தொடர்ந்து அனுப்புவோம்” என்று ரோஷா கூறுகிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Punjab Farmers Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment