Advertisment

PFI சர்ச்சை: காங்கிரசை கர்நாடக பா.ஜ.க குற்றம் சாட்டுவது ஏன்?

இந்திய அரசாங்கத்தால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்படவில்லை என்றாலும், அதன் முஸ்லிம் சார்பு நிலைப்பாட்டின் காரணமாக இந்த அமைப்பை பாஜக தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க முயற்சிக்கிறது.

author-image
WebDesk
New Update
who are PFI, JP Nadda PFI, Karnataka PFI, Karnataka PFI cases, SDPI, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ, கர்நாடகா, பாஜக, Popular Front of India, Congress Karnataka PFI, Congress PFI cases, Tamil Indian Express Explained, Explained Politics

காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி-எஸ்) ஆகிய மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக போடப்பட்ட சிறிய வழக்குகள், அக்கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போது கைவிடப்பட்டது. இந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் அவர்களை ஊக்கப்படுத்தியதாகக் கருதுகிறது. வகுப்புவாத கலவரங்களின் போது தடை உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழக்குகள், போராட்டங்களின் போது விவசாயிகள் மற்றும் கன்னட ஆதரவாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவது வழக்கமாக உள்ளது.

Advertisment

2008 மற்றும் 2013-க்கு இடையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, ​​தட்சிண கன்னடாவில் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட சங்பரிவார் உறுப்பினர்கள் மீதான வழக்குகளையும், தாக்குதல்களின் போது எதிர் வன்முறைக்காக கிறிஸ்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்தது.

2013 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய பாஜக அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வகுப்புவாத கலவரங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் மீதான வழக்குகளை காங்கிரஸ் அரசு கைவிட்டது. 2008-13 ஆம் ஆண்டு பாஜக அரசால் 1,600 பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா செயல்பாட்டாளர்கள் மீது போடப்பட்ட மொத்தம் 176 வழக்குகளை கைவிட சித்தராமையாவின் அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வழக்குகள் ஷிவமோகா (2015ல் இருந்து 114 வழக்குகள்), மைசூரு (2009ல் இருந்து 40 வழக்குகள்), ஹசன் (2010ல் இருந்து 21 வழக்குகள்), மற்றும் கார்வார் (2017ல் 1 வழக்கு) ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்கள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் தொடர்பானவை.

ஆகஸ்ட் 31, 2020-ல் பி. எஸ் எடியூரப்பாவின் பாஜக அரசு 312 நபர்கள் மீதான 62 வழக்குகளை திரும்பப் பெற உத்தரவிட்டது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை வகுப்புவாத பதற்றங்கள் மற்றும் மத நிகழ்வுகளின்போது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களால் தடை உத்தரவுகளை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகள் ஆகும். 2020-ம் ஆண்டு கைவிடப்பட்ட வழக்குகளில் மைசூருவின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவும் ஒருவர்.

அப்படியென்றால், 2013-18 ஆம் ஆண்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா செயல்பாட்டாளர்கள் மீதான 176 வழக்குகள் கைவிடப்பட்டதை பாஜக, காங்கிரஸை விமர்சிக்க பயன்படுத்துவது ஏன்?

இந்திய அரசாங்கத்தால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்படவில்லை என்றாலும், அதன் முஸ்லிம் சார்பு நிலைப்பாட்டின் காரணமாக இந்த அமைப்பை பாஜக தீவிரவாதியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. கர்நாடகாவில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யக் கோரும் பாஜக, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்கள் என்று கூறப்படுபவர்களால் பாஜகவுடன் தொடர்புடைய வலதுசாரி குழுக்களின் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டதை பாஜக அடிக்கடி மேற்கோள் காட்டி வருகிறது.

2007 முதல் கர்நாடகாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 310-க்கும் மேற்பட்ட வழக்குகளில், 5 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுபவர்கள் தொடர்புடைய அரசியல் வன்முறைச் சம்பவங்களில் சில முக்கிய சம்பவங்கள்:

  • 2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஆர்.ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டதில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பெங்களூரு பிரிவின் தலைவர் அசிம் ஷெரீப்பை குற்றவாளியாகக் குறிப்பிட்டது.
  • 2016 ஆம் ஆண்டில், பஜ்ரங் தள் செயல்பாட்டாளர் கே ராஜுவைக் கொலை செய்ததற்காக மைசூர் காவல்துறை, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புகளைக் கொண்ட அபித் பாஷா என்ற இளைஞரைக் கைது செய்தது. பாஷா இப்பகுதியில் நடந்த ஆறு வகுப்புவாத தூண்டுதல் கொலைகளில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பண்ட்வால் நகரில் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் ஷரத் மடிவாலா (28) என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் இரண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயல்பாட்டாளர்களை போலீஸார் கைது செய்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த அஷ்ரப் கலாய் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு நரசிம்மராஜா தொகுதியில் பல முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த தன்வீர் சேட்டைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் எஸ்.டி.பி.ஐ உடன் தொடர்புடைய நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக, காங்கிரஸுடன் தொடர்புடைய எஸ்.டி.பி.ஐ எங்கே?

காங்கிரஸின் அதே வாக்கு சேகரிப்பை எஸ்.டி.பி.ஐ-யும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், வகுப்புவாத எதிர்ப்பு உள்ள தொகுதிகளிலும், முஸ்லிம் வாக்குகள் தட்சிண கன்னடா போன்ற தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் பகுதிகளிலும் பாஜகவுக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது. 2018 தேர்தலுக்கு முன்னதாக, தட்சிண கன்னடாவில் உள்ள பண்ட்வால் மற்றும் மங்களூர் சிட்டி வடக்கு, மற்றும் பெங்களூருவில் உள்ள சர்வக்னாநகர் மற்றும் ஹெப்பல் போன்ற தொகுதிகளில் இருந்து வேட்பாளர்களை வாபஸ் பெற எஸ்.டி.பி.ஐ உடன் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததாக நம்பப்படுகிறது.

பாஜகவுக்கு விசுவாசமாக மாறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரோஷன் பெய்க், கடந்த காலங்களில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் காங்கிரஸுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இருப்பினும், ரோஷன் பெய்க் காங்கிரஸில் இருந்தபோது, ​​ஷோபா கரந்த்லாஜே போன்ற பாஜக தலைவர்களால் அவர் எஸ்.டி.பி.ஐ உடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Karnataka Congress Sdpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment