Advertisment

யார் இந்த சர் சி.பி ஐயர்.. கொலை முயற்சியில் முடிந்த “தனி திருவாங்கூர் நாடு” திட்டம்!

கேரளத்தில் ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. இந்தச் சண்டையில் திருவாங்கூர் திவான் சர் சி.பி., ராமசாமி ஐயர் பெயரும் அடிபடுகிறது. அவர் யார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

author-image
Jayakrishnan R
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sir Chetput Pattabhiraman Ramaswamy Iyer

சர் சேத்துப்பட்டு பட்டாபிராமன் ராமசுவாமி ஐயர்

கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும், இடதுசாரி ஜனநாயக கூட்டணி அரசுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், பாஜக மூத்தத் தலைவர் பிரகாஷ் ஜவடேகர், மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி ஆகியோர் திருவிதாங்கூர் திவான் சர் சி.பி. ராமசாமி ஐயர் விவகாரத்தில் மோதிக்கொண்டுள்ளனர்.

Advertisment

தலைவர்கள் என்ன பேசினார்கள்

பாஜக மூத்தத் தலைவர் பிரகாஷ் ஜவடேகர், திருவிதாங்கூரின் மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த சர் சி.பி. ராமசாமி ஐயர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுபோல், சிவன் குட்டி ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு மிரட்டல் விடுக்கிறார் என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ள சிவன் குட்டி, ”திருவாங்கூர் நாட்டை இந்தியாவுடனும், பாகிஸ்தான் உடனும் இணைக்காமல் தனிநாடு என்ற பிடிவாதத்தில் இருந்தவர் சர் சி.பி. ராமசாமி ஐயர். அவர் பாகிஸ்தான் ஆதரவில் இந்தியாவுடன் இணைய மறுத்தார். அவரை பாஜக புகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ராமசாமி ஐயர்

சர் சேத்துபட்டு ராமசாமி ஐயர் பெரும்பாலும் சர் சிபி என அறியப்படுகிறார். இவர் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தில் 1936 முதல் 1947 வரை திவான் ஆக திகழ்ந்தார்.

இவர் மெட்ராஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற வழக்குரைஞராக திகழ்ந்தவர். இவருக்கு அப்போதைய பட்டத்து இளவரசர் ஸ்ரீ சித்திர திருநாள் பால ராம வர்மா மற்றும் இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் வில்லிங்டன் ஆகிய இருவரிடமும் நல்ல பெயர் இருந்தது.

இதனால் அவர் பல்வேறு உயரத்துக்கு வந்தார். இந்நிலையில், 1931 முதல் 1938 வரை இளவரசரின் ஆலோசகராக திகழ்ந்தார். பின்னர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க திவான் ஆக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

சி.பி மீதான படுகொலை முயற்சி

1947ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. அக்காலக்கட்டத்தில்இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது.

அப்போது திருவிதாங்கூர் சுதந்திரமாக இருக்க விரும்பியது. மகாராஜா சித்திரை திருநாளின் விருப்பத்தை சர் சி.பி.யும் ஆதரித்தார்.

மேலும், “முகம்மது அலி ஜின்னாவின் அழுத்தம், பிரிட்டிஷ் அமைச்சர்களுடன் உறவு என இந்தியாவுடன் இணைய அவருக்கு விருப்பம் இல்லை” என வரலாற்று ஆசிரியர் ராமசந்திர குஹா கூறியுள்ளார்.

இதையடுத்து வைஸ்ராய் லார்ட் மவுண்ட்பேட்டன், “திருவாங்கூர் ஒருபோதும் இந்தியாவின் ஆதிக்கத்தில் சேர முடியாது” என்று தெரிவித்தார்.

ஜின்னா ஜூன் 20, 1947 அன்று ஐயரை தொடர்பு கொண்டு, பாகிஸ்தான் "பரஸ்பர நன்மை பயக்கும் திருவிதாங்கூருடன் உறவை ஏற்படுத்த தயாராக உள்ளது என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

சுதந்திர நாடு என்ற அவரது கனவின் மத்தியில், திருவிதாங்கூருக்கு ‘அமெரிக்க மாதிரியை’ முன்மொழிந்ததால், சர் சிபி மிகவும் பிரபலமடைந்தார்.

கம்யூனிஸ்டுகள் அவரது நடவடிக்கையை எதிர்த்தனர் மற்றும் திருவாங்கூர் இராச்சியத்திற்கு எதிரான போராட்டம் சோசலிஸ்ட் கட்சிகளின் இணைப்புக்கு வழிவகுத்தது, ஒரு புதிய தீவிர கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது.

இந்நிலையில், இரண்டாம் உலகப் போரின் போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டதில் சேர்தலா தாலுகாவில் மட்டும் 21 ஆயிரம் விவசாயிகள் உயிரிழந்தனர்.

இந்தப் பஞ்சத்தில் மக்களுக்கு உதவவில்லை என திவான் மீது அதிருப்தி ஏற்பட்டது. புன்னப்ரா-வயலார் கிளர்ச்சி ஏற்பட்டது. இது திருவிதாங்கூர் இராணுவம் மற்றும் கடற்படையால் ஒடுக்கப்பட்டது.

2,000க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் ஆலப்புழா முழுவதும் காவல் நிலையங்களை கடுமையாகத் தாக்கினர். அப்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1000 என்று வரலாற்றாசிரியர் ஸ்ரீதர மேனன் மதிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மன்னர் சுவாதி திருநாள் நினைவாக ஒரு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சர் சி.பி. மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த முயற்சி கேரள சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்டது, மேலும் திவான் பல கத்திக் குத்து காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

விரைவில், அவர் திருவிதாங்கூர் மாநிலத்தை இந்திய யூனியனுடன் இணைக்க ஒப்புக்கொண்டார், அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்து லண்டன் சென்றார்.

இதையடுத்து, ஜூலை 30, 1947 இல் திருவிதாங்கூர் இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment