Centre wants to raise marriage age of women : குழந்தைகள் திருமண தடை சட்ட (திருத்த) மசோதா (Child Marriage (Amendment) Bill, 2021), இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டம் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். ஒரு முறை இந்த சட்டம் இயற்றப்பட்டால் ஏற்கனவே இருக்கும் திருமணம் மற்றும் தனிநபர் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
Advertisment
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சர் ஸ்மிரிதி இரானி இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். குழந்தைகள் திருமண தடை சட்டம் 2006-ல் திருத்தங்களை ஏற்படுத்த இந்த சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 21 வயதை அடையாத ஆண்களும் பெண்களும் குழந்தையாக கருதப்படுவார்கள் என்று இந்த திருத்த மசோதாவில் ”குழந்தை” என்பதன் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இந்த மசோதாவை சட்டமாக்க ஏன் அரசு இவ்வளவு அவரசப்படுகிறது என்ற கேள்வியை முன்வைத்ததோடு கடுமையான எதிர்ப்புகளையும் பதிவு செய்தது. ஆனால் சிறுபான்மையினர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்ல்லை மாறாக தனிநபர் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்கள்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் போது, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் குழந்தைகள் திருமண தடை சட்டம் 2006, இந்திய கிறித்துவ திருமண சட்டம் 1872, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1936, சிறப்பு திருமண சட்டம் 1954, இந்து திருமண சட்டம் 1955, வெளிநாட்டு திருமண சட்டம் 1969, முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரீஅத்) விண்ணப்ப சட்டம், 1937 என அனைத்தும் மாற்றப்படும் இளம் வயதில் கர்ப்பமடைவதை தடுப்பது, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது, ஊட்டச்சத்து மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஏற்கனவே அமலில் இருக்கும் குழந்தைகள் திருமண தடை சட்டம் குழந்தைகள் திருமணத்தை தடுக்கவில்லை. வறுமை ஒழிப்பும் பெண்களுக்கான கல்வி அதிகரிப்பும் தான் குழந்தை திருமணங்களை குறைத்துள்ளது இந்த சட்டம் பல நேரங்களில், திருமணங்களை செல்லுபடியற்றதாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. மதத்ததை சுதந்திரமான பின்பற்ற அனுமதிக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 25 பிரிவை அத்து மீறும் இந்த சட்டம் என்றும் கட்டாய திருமணம் மற்றும் குடும்ப வன்முறை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் பெண்களை குற்றவாளியாக்கும் என்றும் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil