Advertisment

சரண்ஜித் சிங் சன்னியை அடுத்த பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் தேர்வு செய்ய 5 காரணங்கள் என்ன?

Why Congress chose Charanjit Singh Channi as next punjab CM Tamil News சன்னியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், காங்கிரஸ் அதன் எதிர்க்கட்சியை முழுவதுமாய் வீழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Why Congress chose Charanjit Singh Channi as next punjab CM Tamil News

Why Congress chose Charanjit Singh Channi as next punjab CM Tamil News

Why Congress chose Charanjit Singh Channi as next punjab CM Tamil News : பஞ்சாப் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபின் அடுத்த முதல்வராக தேர்வாகியிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

Advertisment

ஜாட் சீக்கியர்களின் ராஜ்யமாக மாறிய ஒரு மாநிலத்தின் முதல் தலித் முதல்வராக சன்னி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் அமரீந்தர் சிங்கின் வாரிசாக காங்கிரஸால் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை இனி பார்க்கலாம்.

தலித் காரணி

32 சதவிகிதத்தில், பஞ்சாப் நாட்டில் தலித் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளிவந்தவுடன் இந்த எண்ணிக்கை 38 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜாட் சீக்கியர்கள் மக்கள்தொகையில் 25 சதவிகிதம் மட்டுமே இருந்தாலும், அவர்கள் பாரம்பரியமாக மாநிலத்தில் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாகக் கொண்டுள்ளனர். காங்கிரசுக்கு 20 தலித் எம்எல்ஏக்கள் இருந்தாலும், 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு 36 ஒதுக்கப்பட்ட தொகுதிகள் உள்ளன. அவர்களில் மூன்று பேர் மட்டுமே அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

நவஜோத் சிங் சித்துவில் பிசிசி தலைவராக ஒரு ஜாட் சீக்கியரும், ஓர் தலித் முதல்வராகவும் காங்கிரஸ் கட்சி நீண்ட கால சீர்திருத்தத்தை செய்துள்ளது. மேலும், அதிகாரத்தை சமமாகப் பகிர முயற்சி செய்துள்ளது.

எதிர்கட்சிக்கான எதிரொலி

பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்துள்ள ஷிரோமணி அகாலி தால் மற்றும் தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆகியவை ஆட்சிக்கு வந்தால் தலித் துணை முதல்வருக்கு உறுதியளிக்கின்றன.

சன்னியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், காங்கிரஸ் அதன் எதிர்க்கட்சியை முழுவதுமாய் வீழ்த்தியுள்ளது.

ஒரு சீக்கிய முகம்

சன்னி தலித் மட்டுமல்ல, சீக்கியரும் கூட.

பஞ்சாபி சுபா (மாநிலம்) அதாவது அம்மாநிலத்தில் இந்து முதல்வராக இருக்க முடியாது என்கிற காரணத்தால் மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி, முன்னாள் பிபிசிசி தலைவர் சுனில் குமார் ஜாகரை முதல்வராகத் தேர்வு செய்வதற்கான திட்டத்தைக் கைவிட்டார்.

அவரது வேட்புமனுவை எதிர்த்து, சிறைகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் சுக்விந்தர் சிங் ரந்தாவாவும், சீக்கியர் அல்லாதவர் முதல்வராக வர அனுமதித்தால், அவர் பின்விளைவுகளை எதிர்கொள்ள முடியாது. அதனால், அவரை முறியடிக்கக் கடினமாக இருக்கும். ஆனால், சன்னி தலைமையில், அத்தகைய பயம் இல்லை.

கருத்து வேறுபாடு உள்ள கட்சியில் ஏற்றுக்கொள்ளும் தன்மை

அரசியல் புத்திசாலித்தனத்திற்குப் பெயர் பெற்ற சன்னி, கட்சியில் உள்ள பல்வேறு கருத்து வேறுபாடுகளை சமாளித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு எதிராக மூன்று அமைச்சர்களின் Majha படைப்பிரிவுக்கு அவர் நெருக்கமானவர்.

அவர் சித்துவை தவறான பாதையில் வழிநடத்தவும் வாய்ப்பில்லை. மேலும், ஒரு தலித் முகத்தைக் குறிவைப்பது அமரீந்தருக்கு கடினமாக இருக்கும்.

வெகுஜன ஆதரவு

கராரின் ஒரு சிறிய குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு அடிமட்ட அரசியல்வாதி, ஓர் மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதே வரிசையில் உயர்ந்தவர் சன்னி என்பதால், அவர் மக்கள் மத்தியில் நற்பெயரினை பெற்றுள்ளார். கல்வி என்பது சன்னியின் பலம். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.

தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக, அவர் பல்வேறு வேலை கண்காட்சிகள் மற்றும் புதிய கல்லூரிகள் மற்றும் திறன் மையங்களைத் திறப்பதற்குப் பாடுபட்டிருக்கிறார். அதிகப்படியான இளைஞர்களின் மாநிலத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், வேலைகள் மற்றும் கல்விக்குத் தேவையான உந்துதலை அளிக்க அவரால் முடியும் என்று கட்சி நம்புகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment