Advertisment

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை; இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்?

கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைத்து,

author-image
WebDesk
New Update
Why crude oil prices are falling and how it will impact fuel prices in India

 Karunjit Singh 

Advertisment

Why crude oil prices are falling : கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விநியோகமும் மார்ச் மாதத்தில் உச்சத்தில் இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 70 டாலர்களில் இருந்து 63 டாலர்களாக குறைந்துள்ளது.

தற்போது ஏன் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது?

கோவிட் -19 தொற்றுநோய்களின் சமீபத்திய எழுச்சி மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒபெக் முடிவு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. ஒபெக்+ ஒரு கட்டமாக உற்பத்தி வெட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. எனவே மீண்டும் கச்சாய் எண்ணெய்யின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பேரல் என்ற அளவை ஜூலை மாதத்தில் எட்டும்.

கச்சா எண்ணெய் சரக்குகளின் வீழ்ச்சியை விட பெட்ரோல் சரக்குகள் வேகமாக உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய அமெரிக்க தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்காவில் கச்சா எண்ணெயின் ஒரு நாள் உற்பத்தி, பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடும் குளிர்காலத்திற்கு பிறகு தற்போது அதிகரித்துள்ளது. 9.7 மில்லியன் பேரல்கள் என்ற கணக்கில் இருந்து தற்போது 11 மில்லியன் பேரல்கள் என்ற நிலையை அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றம், கச்சா எண்ணெய் தேவையில் ஏற்படாமல் போனது தான் இது போன்ற கச்சா எண்ணெய் விலை திருத்தத்திற்கு வழி வகுத்தது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் கடுமையான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதால் மேக்ரோஎக்கனாமிக் பின்னணியில் கச்சாப்பொருள் விநியோகத்தை ஒழுங்கு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று விவேகானந்தா சுப்பராமன் கூறியுள்ளார். அம்பிட் கேபிட்டலில் அவர் அனலிஸ்ட்டாக பொறுப்பாற்றி வருகிறார். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 60 முதல் 65 டாலர் வரை இருக்கும் என்று தான் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

உலகெங்கிலும் குறைந்த கட்டுப்பாடுகள் மற்றும் விரைவான தடுப்பூசி நிர்வாக திட்டங்கள் காரணமாக தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கைகள் கச்சா எண்ணெய் விலையை அக்டோபரில் சுமார் 40 டாலர்களிலிருந்து மார்ச் தொடக்கத்தில் 70 டாலர்களாக உயர்த்தின. கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைத்து, சவூதி அரேபியாவுடன் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக, எண்ணெய் உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளும் நிதியாண்டின் 21 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விதிக்கப்பட்ட உற்பத்தி வெட்டுக்களை பராமரித்தன. அமெரிக்க கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியும் உலகளாவிய விலையை உயர்த்துவதற்கு பங்களித்தது. வளரும் நாடுகளில் உயரும் கச்சா எண்ணெய் விலை மேலும் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் என்பதால் உற்பத்தி நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று இந்தியாவும் கேட்டுக் கொண்டது.

இது இந்தியாவை எவ்விதம் பாதிக்கிறது?

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தினசரி விலை திருத்தங்களை 24 நாள் நிறுத்திய பின்னர் மார்ச் 23 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 60 பைசா குறைத்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .90.56 ஆக உள்ளது. 9 நாட்களாக இந்திய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .80.87 ஆக மாறாமல் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Petrol Diesel Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment