Advertisment

Explained: அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டது ஏன்?

ரஷ்யா ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சி செய்கிறது. அதன் அடிப்படையில் மேற்த்திய சிறிய அண்டை நாடுகளிடமிருந்து அணுசக்தி அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Why Ukraine gave up its nuclear arsenal, ukraine, அணு ஆயுதங்களை உக்ரைன் கைவிட்டது ஏன், உக்ரைன், ரஷ்யா, உக்ரைன் ரஷ்யா போர், russia, ukraine russia war, ukraine invasion, russia, ukraine

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜெனீவாவில் மார்ச் 1ம் தேதி நடைபெற்ற ஆயுதங்களைக் கைவிடுதல் மாநாட்டில் கூறினார் (அவர் கிட்டத்தட்ட வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கலந்து கொண்டார்) “வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆட்சி (உக்ரைனில்) அண்டை நாடுகளுக்கும் சர்வதேச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பொதுவாக, கீவ் அதிகாரிகள் சொந்தமாக அணு ஆயுதங்களை அடைவதற்கான திட்டங்களை உள்ளடக்கிய ஆபத்தான நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் இது கணிசமாக அதிகரித்துள்ளது.

Advertisment

ரஷ்யா ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில், அதன் மேற்கத்திய சிறிய அண்டை நாடுகளிடமிருந்து அணுசக்தி அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுகிறது. லாவ்ரோவ் மாநாட்டில், பொறுப்பற்ற அறிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், உக்ரைனில் சோவியத் அணுசக்தி தொழில்நுட்பம் அந்த ஆயுதங்களை வழங்குவதற்கான வழிமுறைகள் உள்ளன என்று கூறினார்.

சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினர் என்ற முறையில், ரஷ்யா “அணு ஆயுத பரவல் தடை உறுதிமொழியில் உறுதியாக உள்ளது. உக்ரைனில் அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் தோன்றுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று அவர் கூறினார்.

உக்ரைனில், அணுசக்தி பிரச்னை மிகவும் வித்தியாசமாக செயல்படுகிறது. ஒரு சர்வதேச உடன்படிக்கையின் கீழ், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் மேற்பார்வையில், உக்ரைன் 1996 மற்றும் 2001-க்கு இடையில் முற்றிலும் அணு ஆயுதத்தைக் கைவிட்டது. இப்போது, ​​அதன் எல்லைகளுக்குள் ரஷ்யா படையெடுத்து வருவதால், பல உக்ரைனியர்கள் அணு ஆயுதத்தை கைவிட்டது தவறா என்று திகைக்கிறார்கள். அணு ஆயுதங்களை வைத்திருக்குமானால், ரஷ்யா தங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பைத் தடுக்க வேலை செய்திருக்குமா?

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராக அரிதாகவே போருக்குச் செல்கின்றன. பரஸ்பரம் உறுதிசெய்யப்பட்ட அழிவுகள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால் தடுத்து நிறுத்தப்படும் என்ற விவாதத்திற்குரிய அடிப்படை அனுமானத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான உக்ரைனின் முடிவு, மூன்று வருட தேசிய விவாதங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் கையெழுத்திட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து - பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய மூன்று அசல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் என்பது இந்த சக்திகளின் மிகப்பெரிய பாதுகாப்பு உத்தரவாதம் ஆகும். ரஷ்ய கவலைகளை தணிக்க நேட்டோவால் அணு ஆயுதம் விரிவாக்கம் செய்யப்படாது என்ற வாக்குறுதிகளால் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டது.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதத்திற்குச் சென்றபோது, அப்துல் காதீர் கான் அணு ஆயுத பரவல் வலையமைப்பு, பாகிஸ்தானை ஊழலின் மையமாக நிறுத்திய நேரத்தில், உக்ரைன் அணு ஆயுத பரவல் தடையின் மாதிரியாகவும், அணு ஆயுதல் பரவல் தடை ஒப்பந்தத்தில் உக்ரைன் கையொப்பமிட்டது ஒரு நல்ல உதாரணமாகவும் பார்க்கப்பட்டது.

பனிப்போரின் முடிவில், உக்ரைனின் தேர்வுகள்

1989-ல் பெர்லின் சுவர் இடிந்த பிறகு, உக்ரைன் சிதைந்து கொண்டிருந்த சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரப் பாதையில் பயணித்தது. அதன் 1990ம் ஆண்டு இறையாண்மைப் பிரகடனம் சோவியத் ஒன்றியம் உடைவதற்கு ஒரு வருடம் முன்பு நிறைவேற்றப்பட்டது. அந்த பிரகடனம் அணுசக்தி அல்லாத, அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக இருக்க விரும்புகிறது என்ற வெளிப்படையான அரசியல் பிரகடனத்தைக் கொண்டிருந்தது.

உக்ரைன் குடியரசு, முந்தைய சோவியத் ஒன்றியத்தின் 15 நாடுகளில் ஒரு நாடாக செர்னோபில் பேரழிவிலிருந்து (1986) வெளிப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், உக்ரைன் மண்ணில் அணு ஆயுதங்களின் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மாஸ்கோவில் இருந்தது. அக்கால உக்ரைன் தலைவர்கள் இது தங்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று அஞ்சினார்கள்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைனில் மனநிலை மாறியது. அணு ஆயுதங்களை விட்டுக்கொடுப்பது அதன் சுதந்திரத்திற்கு இனி தேவையில்லை என்று அது இப்போது நம்புகிறது. அந்த நேரத்தில், உக்ரைனில் 176 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs) இருந்தன, அவற்றில் 130 திரவ எரிபொருள்கொண்ட SS-19-கள் மற்றும் 46 திட எரிபொருள் கொண்ட SS-24-களால் ஆனது. கூடுதலாக, அது 44 ஆயுதம் தாங்கி குண்டுவீசும் கப்பல் ஏவுகணைகளைக் கொண்டிருந்தது. அதன் போர்க்கப்பல் சரக்கு கிட்டத்தட்ட 2,000 - கூட்தலாக 2,600 அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தது.

ஆனால், இந்த ஆயுதங்கள் யாருக்கு சொந்தமானது என்பது கேள்வி - சோவியத் யூனியனின் முக்கிய உறுப்பு நாடான ரஷ்யா, அல்லது உக்ரைன் அல்லது பெலாரஸ் அல்லது கஜகஸ்தான் ஆகியவை முன்னாள் சோவியத் யூனியனின் ஆயுதக் கிடங்குகளாக இருந்த இடமாகும். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் நீண்ட வரம்பையும், அவற்றின் வாழ்நாள் முடிவில் ஆயுதக் கிடங்கைப் பராமரிக்கவும் மாற்றவும் தேவைப்படும் அறிவும் நிதியும் கொடுக்கப்பட்டால், அவற்றின் தடுப்பு மதிப்பும் கேள்விக்குள்ளானது.

ஆயுதங்களைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் உக்ரைன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு வெளியே ஒரு அணுசக்தி நாடாக இருக்கும். (பி5 நாடுகளைத் தவிர, மற்ற கையொப்பமிட்ட நாடுகள் அணுசக்தி அல்லாத நாடுகளாக இருக்க வேண்டும் அல்லது அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்). ஐரோப்பாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பிய உக்ரைன், கண்டத்தில் தடைகள் மற்றும் தனிமைப்படுத்தலுடன் தனது புதிய பயணத்தைத் தொடங்க விரும்பவில்லை.

புடாபெஸ்ட்டில் 1994ம் ஆண்டு உத்தரவாதம்

பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பாக, டிசம்பர் 5, 1994-ல் கையொப்பமிடப்பட்ட புடாபெஸ்ட் உறுதிமொழிப் பத்திரத்தில், உத்தரவாதங்களுக்கு இணையாக உக்ரைன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் உறுப்பினராக இருப்பது மற்றும் அணுசக்தி இல்லாத நாடு என்ற அந்தஸ்தை அடைத்தது. அதில் கையொப்பமிட்டவர்கள் உக்ரைன் (லியோனிட் குச்மா), அமெரிக்கா (பில் கிளிண்டன்), ரஷ்யா (போரிஸ் யெல்ட்சின்) மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் (ஜான் மேஜர்) உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் கையெழுத்திட்டனர். பின்னர், 1992 இல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் உறுப்பினர்களாக ஆன சீனாவும் பிரான்சும் கையெழுத்திட்டன.

புடாபெஸ்ட் உறுதிமொழிப் பத்திரம் 1992-இல் லிஸ்பன் நெறிமுறைக்குப் பிறகு வந்தது. இந்த ஒப்பந்தம் உக்ரைன், பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் தரப்புகளின் முதல் உத்தியாக ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் (START I), அனைத்து பக்கத்திலும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 1991-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனால் கையெழுத்திடப்பட்டது.

புடாபெஸ்ட் ஆவணம் “சுதந்திரம் மற்றும் இறையாண்மை மற்றும் உக்ரைனின் தற்போதைய எல்லைகளை மதிக்கவும் உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான கடமை” ஆகியவற்றை உறுதி செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக தற்காப்புக்காகவோ அல்லது ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணங்கவோ தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இந்த ஆவணம் அவர்களுக்கு உறுதியளித்தது.

அணு ஆயுதங்களால் அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலோ, உக்ரைனுக்கு உதவி வழங்க உடனடியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் ஆலோசனை நடத்தப்படும் என்றும் அதிகாரங்கள் தெரிவித்தன. எனினும், இது ஒரு உத்தரவாதமே தவிர, பாதுகாப்பு உத்தரவாதம் அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் தனது மண்ணில் உள்ள அணு ஆயுதங்களின் உரிமையாளர் என்பதை மறைமுகமாக அங்கீகரிப்பதன் மூலம் அரசியல் வெற்றியைப் பெற்றது. 1996-ம் ஆண்டில், புடாபெஸ்ட் ஆவணத்தில் கையெழுத்திட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், உக்ரைன் தனது மண்ணில் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. உக்ரைனும் கடுமையாக பேரம் பேச முடிந்தது - ரஷ்யா அதன் அண்டை நாடுகளுக்கு 1 பில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கியது. மேலும், உக்ரைனின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குவதற்கு அமெரிக்கா பெரும் தொகையை செலுத்தியது.

புதிய சர்வதேச எல்லையுடன் ரஷ்யா முழுமையாக சமரசம் செய்யப்படவில்லை என்று உக்ரைன் தொடர்ந்து கவலை கொண்டிருந்தாலும், நேட்டோவின் விரிவாக்கம் குறித்து ரஷ்யா கவலை தெரிவித்தபோதும், இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒப்பந்தம் நடைபெற்றது. 1999-ம் ஆண்டின் இறுதியில் புதினுக்குப் பின் அதிபராகப் பதவியேற்ற விளாடிமிர் புதின் 2007-ம் ஆண்டு முனிச் பாதுகாப்பு மாநாட்டில் முதன்முதலில் இந்தக் கவலையை வெளிப்படுத்தினார். சோவியத் யூனியனின் முன்னாள் நாடுகள் மற்றும் அதன் செயற்கைக்கோள்களை இணைக்க நேட்டோ மறைமுகமாக உந்தித் தள்ளுவதாகவும், அதை அமெரிக்கா ஒளிரச் செய்தது என்றும் குற்றம் சாட்டினார். இது சர்வதேச சட்டத்திற்கு மேலானதாகக் கருதுவது மற்றும் அதன் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மூலம் ஒரு புதிய ஆயுதப் போட்டியைத் தூண்டுவதாக இருந்தது.

கிரிமியாவை இணைத்தது முதல் உக்ரைன் படையெடுப்பு வரை

2014-ல் கிரிமியாவை ரஷ்யா இணைத்தது புடாபெஸ்ட் ஒப்பந்தத்தின் தெளிவான மீறலாகும். மேலும், உக்ரைனுக்கு அதன் பாதுகாப்பு உத்தரவாதத்தின் முதல் பெரிய சோதனையாகும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், மாஸ்கோ இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. மேலும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இணைப்புக்கு எதிரான தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தது. ரஷ்யா மீது அமெரிக்கா சில தடைகளை விதித்தது. ஆனால், ஐரோப்பா அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தது.

அமெரிக்க காங்கிரஸில், 2016-ல் செனட் குழுவின் வெளியுறவுக் குழுவில் நடந்த விவாதம், அந்த நேரத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய பதில்களின் தீவிரத்தன்மையை பிரதிபலித்தது. ஐரோப்பா மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறையின் உதவிச் செயலர் விக்டோரியா நுலாண்ட், ரஷ்யாவிற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளை விரிவாக விவரித்தார்:

“உக்ரைன் தனது எல்லைகளை சிறப்பாகக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும், அதன் படைகளை மிகவும் பாதுகாப்பாகவும் திறம்படவும் நிலைநிறுத்தவும், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், அமெரிக்கா 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளைச் செய்துள்ளது. நாங்கள் 1,700 உக்ரைன் நாட்டுப் படைகள் மற்றும் தேசிய காவலர் பணியாளர்கள் மற்றும் 120 சிறப்பு அதிரடிப் படைகளுக்கு (SOF) பயிற்சி அளித்துள்ளோம். எதிர்த்து தாக்குதல் நடத்துவதற்கான் பீரங்கிகள், மோர்டார் ரேடார்கள், 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பான ரேடியோ ரேடார்கள், 130 ராணு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள், ஆயிரக் கணக்கான மருத்துவ கருவிகளை உக்ரைன் துருப்புகள் வெற்றிகரமாக எதிர்ப்பதற்கும் எதிர் பீரங்கி மற்றும் எதிர்-மோர்டார் ரேடார்கள், 3000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பான ரேடியோக்கள், 130 ஹம்வீக்கள், 100 க்கும் மேற்பட்ட கவச சிவிலியன் SUVகள் மற்றும் ஆயிரக்கணக்கான மருத்துவ கருவிகளை உக்ரேனிய துருப்புக்கள் வெற்றிகரமாக எதிர்ப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் உதவுகிறோம்.

“ரஷ்ய ஆக்கிரமிப்பினால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கும், நேட்டோ பகுதிக்கு எதிரான எந்தவொரு ராணுவ நடவடிக்கைகளையும் தடுப்பதற்கும், கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவும் நமது நேட்டோ நட்பு நாடுகளும் நேட்டோவின் கிழக்கு ஓரத்தில் நிலம், கடல் மற்றும் வான்வெளியில் தொடர்ந்து சுழற்சி முறையில் ராணுவ கண்காணிப்பை பராமரித்து வருகின்றன: பால்டிக் நாடுகள், போலந்து, ருமேனியா, பல்கேரியாவும் வரும் ஜூலையில் வார்சாவில் நடக்கும் நேட்டோ உச்சிமாநாட்டை நோக்கிப் பார்க்கும்போது, ​​எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலளிக்கும் நேரத்தைக் குறைக்க கிழக்கில் முன்னோக்கி தங்கள் இருப்பை அதிகரிப்பது உட்பட, தடுப்பதற்கான ஒரு நிலையான அணுகுமுறையை நட்பு நாடுகள் நிறுவனமயமாக்கும். இந்த உறுதிப்பாட்டை ஆதரிக்க, அதிபர் ஐரோப்பிய உறுதிமொழி முன்முயற்சிக்கு 3.4 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளார். உங்கள் ஆதரவுடன், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் சுழலும் கவசப் படையணி போர்க் குழுவை நிலைநிறுத்தவும், போர் உபகரணங்களை முன்கூட்டியே நிலைநிறுத்தவும், ஐரோப்பாவில் கூடுதல் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சிகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

அதிபர் புதினின் இந்த பதிலின் அனைத்து கூறுகளும் ரஷ்யாவை சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. மேலும், அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தன. அணு ஆயுதங்கள் மூலம் தனது நாட்டை ஆயுதம் தாக்கிய நாடாக்குவது குறித்த அதிபர் ஜெலென்ஸ்கியின் அறிக்கைகள் அபாயக் கோட்டைத் தாண்டிவிட்டன என்று ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் வெளியுறவுக் குழுவின் தலைவரான செனட்டர் ஆண்ட்ரி ஏ கிளிமோவ் கடந்த வாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

இப்போது புதின் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை சிறப்பு எச்சரிக்கையில் வைத்துள்ளார், மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பு அறிக்கைகளுக்கு இந்த நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது. செவ்வாய்கிழமை ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்றதால், புதின் எந்த அணு ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டார் என்று ரஷ்யாகூட நம்புகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia Nato
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment