வழக்கமாக தயிர் சாதம் என்றாலே. அட விடுங்கடா என்ற மனநிலையில்தான் இருப்பார்கள் . ஆனால் இந்த வகையான தயிர் சாதத்தை நீங்கள் சமைத்து கொடுத்தால். அப்புறம் அவ்ளோதான். மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்பார்கள்.
தேவையான பொருட்கள்
மிஞ்சிய சாதம் -1.5 கப்
தயிர் – 2 கப்
பீட்ரூட் துருவியது – 1
பச்சை மிளகாய் நறுக்கியது – 3
கொத்தமல்லி – ½ கப்
மாதுளை – தேவைக்கேற்ப
உப்பு
நெய்- 2 ஸ்பூன்
கடுகு : 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி: துருவியது ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு, கடுகு
கருவேப்பில்லை
பெருங்காயம்
பால்- 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்துக்கொண்டு, அதில் தயிர், பால் , பீட்ரூட் துருவியது, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். ஒரு ஸ்பூனால் எல்லாவற்றையும் ஒருசேர கந்துவிடவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பில்லை, இஞ்சி, ஆகியவற்றை போட்டு தாளித்து கொட்ட வேண்டும். தொடர்ந்து மாதுளையை மேலே தூவ வேண்டும்.