Advertisment

இந்த இலையை அரைத்து பாலில் 15 நாள்... ஆண்மை பெருக மருத்துவர் பரிந்துரை

தொட்டடால் சுருங்கி தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த இலையை அரைத்து பாலில் 15 நாள்... ஆண்மை பெருக மருத்துவர் பரிந்துரை

தொட்டடால்  சுருங்கி தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.

Advertisment

உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப்புண் ஆறும் மூலம் நோய் நீங்கும். கல் அடைப்பு தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும்.

சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று வேலை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு தொட்டால் சுருங்கி இலைக்கு பத்து மடங்கு கொதிக்கின்ற தண்ணீர்விட்டு ஆறின பின் வடிகட்டி வேலைக்கு ஒரு அவன்ஸ் வீதம் தினம் இரண்டு மூன்று வேலை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்.ஆண்மை குறைபாடு ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் பதினைந்து கிராம் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

சிறுநீர் எரிச்சல்

சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பத்து கிராம் அளவு காலை தயிரில் சாப்பிட வேண்டும். இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

வயிற்றுக் கடுப்பு

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மூலம்

தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை நன்கு உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொள்ளவும் .அந்த சூரணத்துடன் பசும்பால் சேர்த்து கொடுப்பதன் மூலமாக மூல நோய் குணமடையும்.

தொட்டால் சுருங்கி இலைச் சாற்றை மூலம் உபாதைகளுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்

புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

மேல்குறிப்பிட்ட தகவலை சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் முத்துக்குமார் வழங்கியுள்ளார். வரை தொடர்கொள்ள 9344186480 எண்ணை பயன்படுத்தவும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment