சுகர் நோயாளிகளின் வரப்பிரசாதமாக இருக்கிறது பாதாம் பருப்பு. இதில் இருக்கும் நன்மைகள் ஏராளம். தினமும் பாதாம் பருப்பை சாப்பிடுவதால், ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மலச்சிக்கல், நுரையீரல் பாதிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால், உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையவும் வாய்ப்பிருக்கிறது.
இதனால் தினமும் 45 கிராம் வரை பாதாம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாதாம் கெட்ட கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கிறது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நீங்கள் நீண்ட நாட்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் பாதாம் சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இந்நிலையில் திருமணமான பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் தங்களது உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்த பாதாம் சாப்பிடுவது அவசியமாகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil