தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் கற்றாழையை தனியாக சாப்பிட முடியாது. இதில் கசப்புத்தன்மை இருக்கிறது. இதனால் தனியாக சாப்பிடாமல் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
கற்றாழை – 5 துண்டுகள்
இஞ்சி- பெரிய துண்டு
சீரகம்
பொதினா
கற்றாழையில் பசையாக இருக்கும் என்பதாலும், அது விஷத்தன்மை கொண்டது என்பதால் கற்றாழையை துண்டுகளாக நறுக்கி 2 மணி நேரம் வைத்துவிட வேண்டும். தற்போது அதை கழுவி தோல் நீக்கி இதில் இருக்கும் வெள்ளை சதையை எடுத்து வைத்துகொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் இதை சேர்த்து, அத்துடன் இஞ்சி, சீரகம், பொதினா ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இதில் தண்ணீருக்கு பதில் பாதி அளவில் மோரும் சேர்க்கலாம்.