காலையில் இந்த நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், உடலுக்கு மிகவும். நல்லது. மலச்சிக்கல், கிருமி தொற்று, அஜீரணம் ஆகியவை ஏற்படாது.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 5
இஞ்சி- சிறிய துண்டு
கருவேப்பிலை
உப்பு
எலுமிச்சை
சுடு தண்ணீர்
நாட்டு தேன்- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை: நெல்லிக்காய்யை கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தொடர்ந்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் கருவேப்பிலை, இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும் . தொடர்ந்து இந்த கலவையை சல்லடையில் வடிகட்ட வேண்டும். தொடர்ந்து இந்த சாறுடன் அரை கப் சுடு தண்ணீர் சேர்த்து, வேண்டும் என்றால் நாட்டு தேனை சேர்க்கலாம்.