வெரைட்டி உணவு வகைகளை செய்து சாப்பிட வேண்டும் என்றும் விரும்புவோம். ஆனால் நிறைய பொருட்கள் தேவைப்படும் என நினைத்து செய்ய மாட்டோம். ஆனால் சிம்பிளாக வீட்டில் செய்யக் கூடிய உணவு வகைகள் நிறைய உள்ளன, எப்போதும் மதிய உணவுக்கு ஒரே மாதிரி செய்து சாப்பிடுகிறீர்கள் சலிப்பாக இருக்கிறது என்றால் பேபி கார்ன் புலாவ் செய்து பாருங்கள். ரொம்ப சிம்பிள், வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
பேபி கார்ன் – 2 கப் (நீளமாக நறுக்கியது)
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
பால் – 1 கப்
தண்ணீர் – ½ கப்
செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சோம்பு, சீரகம், பட்டை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து அதில் நறுக்கிய மக்காசோளம் (பேபி கார்ன்) சேர்த்து வதக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின் அதில் பால், தண்ணீர் சேர்க்கவும். இப்போது கொதி வரும் போது பாஸ்மதி அரிசி சேர்த்து கலந்து, குக்கரை மூடி வைக்கவும். 2 விசில் விட்டு இறக்கவும். குக்கரை இறக்கி சிறிது நேரம் கழித்து கொத்த மல்லித்தழை, , சிறிது நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். அவ்வளவுதான் பேபி கார்ன் புலாவ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“