Advertisment

இத மட்டும் சேர்த்து பூரி செஞ்சு பாருங்க… ஒன்னு கூட மிஞ்சாது

இந்த ஒரு விஷயத்தை சேர்த்து நீங்க பூரி மாவு பிசைந்தால், ஒரு பூரி கூட மிஞ்சாது. அப்படி சாப்பிடு வாங்க உங்கள் வீடுல உள்ளவங்க. அப்படி ஒரு பூரி ரெசிபியை பத்தின தொகுப்புதான் இது.

author-image
WebDesk
New Update
இத மட்டும் சேர்த்து பூரி செஞ்சு பாருங்க… ஒன்னு கூட மிஞ்சாது

இந்த ஒரு விஷயத்தை சேர்த்து நீங்க பூரி மாவு பிசைந்தால், ஒரு பூரி கூட மிஞ்சாது. அப்படி சாப்பிடு வாங்க உங்கள் வீடுல உள்ளவங்க. அப்படி ஒரு பூரி ரெசிபியை பத்தின தொகுப்புதான்  இது.

Advertisment

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 ½  கப்

 வாழைப்பழம் – 2

சர்க்கரை – 2 ஸ்பூன்

 தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

 ஆப்ப சோடா – தேவையான அளவு

சீரகம் – ½  ஸ்பூன்.

செய்முறை

வாழைப்பழ பூரி செய்வதற்கு  முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வாழைப்பழத்தை  துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஏலக்காய் தூள், சர்க்கரை மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து  அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை கப் அளவிற்கு கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் ஆப்ப சோடா மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கைகளால் நன்கு கலந்து விட்ட பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள ஸ்மூத்தி வாழைப்பழ கலவையை அதனுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிசைய வேண்டும். கோதுமை மாவு கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்த பின்பு மூடி போட்டு அரைமணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு நன்கு ஊறிய மாவை ஒரு முறை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பூரிக்கு உருட்டுவது போல வட்டமாக பூரி கட்டையில் வைத்து திரட்டுங்கள். மாவு வட்டமாக உங்களால் திரட்ட முடியவில்லை என்றால், ஒரு முனை கூர்மையுள்ள டிபன் பாக்ஸ் மூடி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மாவில் மீது கவிழ்த்தி வைத்தால் ரவுண்ட் ஷேப் உங்களுக்கு கிடைக்கும். சுற்றியுள்ள மீதமுள்ள மாவை எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் இப்படி எல்லா மாவையும் நீங்கள் வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்த பிறகு மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒவ்வொரு பூரி மாவையும் போட்டு அரை நிமிடம் நன்கு வேக விடுங்கள். ஒருபுறம் வேகும் பொழுதே நீங்கள் சுற்றியுள்ள எண்ணெயை எடுத்து அதன் மீது கரண்டியால் தெளித்து விட்டால் பூரி உப்பலாக வரும். பிறகு அடுத்த அரை நிமிடம் திருப்பி போடுங்கள். இப்படி ஒரே நிமிடத்தில் சூப்பராக பூரி ரெண்டு புறமும் சிவக்க புசுபுசு என்று உப்பி வெந்து உங்களுக்கு கிடைக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment