மலச் சிக்கல் என்பது நம்மில் பலரை பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் மலச் சிக்கல் ஏற்பட்டால், எப்போதுமே நமது மனநிலையை அது பாதிக்கும். மேலும் எந்த விஷயத்திலும் நாம்மால் கவனம் செலுத்த முடியாது. மேலும் எப்போதும் வாந்தி வருவதுபோலவும், நன்றாக பசி எடுக்கமாலும் இருக்கும். மேலும் நம்மாலும் உணவை நிம்மதியாக சாப்பிட முடியாது. அதிகமான உலர்ந்த உணவுகள், காரம், நார்சத்து குறைவாக இருக்கும் உணவுகள், சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தூக்கம் இன்மை இப்படி விஷயங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.
கருப்பு திராட்சை ஊரவைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும். ஊரவைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வெந்தயம்- இரவு முழுவதும் ஊரவைத்து, காலையில் அந்த நீரை குடிக்கலாம். இல்லையென்றால், வெந்தயத்தை பொடி செய்து, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய்
முடி உதிர்தல், நரை முடி, எடை குறைவு இப்படி பல பிரச்சனைகளுக்கு காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் நல்லது.
மாட்டுப்பால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் வரை அனைவருக்கும் நன்மை தரும் பால். மலச்சிக்கலுக்கு நல்லது.
நெய்
இதனால் உடலில் ஆரோக்கியமான கொழுப்பு பரவுகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, டி, இ, கே இருக்கிறது. எருமை நெய் என்பது, உடல் எடை கூடத்தான் பயன்படும்.
ஆனால் பசு நெய் என்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு கப் பாலுடன், நெய் கலந்து குடித்தால் மலச் சிக்கலுக்கு மிகவும் நல்லது.