Advertisment

பனங் கற்கண்டு, நெய்... பெண்களின் பீரியட்ஸ் அவஸ்தைக்கு இது அருமருந்து!

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்யப்படும் இம்மருந்தை குடித்தால் மாதவிடாய் வலி குறையும்.

author-image
WebDesk
New Update
பனங் கற்கண்டு, நெய்... பெண்களின் பீரியட்ஸ் அவஸ்தைக்கு இது அருமருந்து!

மாதவிடாய் காலங்களில் தீராத வயிற்று வலி ஏற்படுவது இயல்புதான். ஆனால் பலரால் இந்த வயிற்று வலியை தங்கிக்கொள்ள முடியாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்யப்படும் இம்மருந்தை குடித்தால் மாதவிடாய் வலி குறையும்.

Advertisment

தேவையான பொருட்கள் :

சோம்பு. - 3  டீஸ் பூன்

நெய் – 1/2 ஸ்பூன்

பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை

ஒரு இரும்பு கடாயில் சோம்பை போட்டு லேசாக வறுக்க வேண்டும். கொஞ்சம் வறுத்ததும் அதில்  3  கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். நீர் அதன் பாதி அளவுக்கு வந்தவுடன்  அதனை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சோம்புத்தண்ணீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கி கொள்ளவும்.  தொடர்ந்து  பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

நன்மைகள்

இந்த மருந்து மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தீராத வயிற்று வலியினால் அவதிப்படுபவர்கள் செய்து குடித்து வந்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை, மிளகு, உலர் திராட்சை இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதனாலும் வலி குறையும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment