வயது முதிரும் பெண்களே... உங்க எலும்பை வலுப்படுத்தும் பொடி; இட்லி, தோசை கூட தொட்டு சாப்பிட்டு பாருங்க!

பெண்களின் எலும்புகளை உறுதியாக்கும் ஒரு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த பொடி பெண்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பெண்களின் எலும்புகளை உறுதியாக்கும் ஒரு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த பொடி பெண்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
Pirandai Podi

பெண்களே, வயது முதிர்வடையும் போது, உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக, 30 வயதிற்கு மேல் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், எலும்பு தேய்மானம் மற்றும் அதன் பலவீனம் தான். இந்தச் சவாலை எதிர்கொள்ள, நம் பாரம்பரிய உணவுகளில் இருக்கும் ஒரு அற்புத மூலிகைத் தீர்வைப் பற்றிப் பார்ப்போம். பிரண்டை என்னும் மூலிகையைத்தான் சித்த மருத்துவத்தில் 'ராஜ மூலிகை' என்று போற்றுகின்றனர். காரணம், இதற்கு உடைந்த எலும்பைக் கூட ஒட்டவைக்கும் சக்தி உண்டு.

Advertisment

எலும்பு தொடர்பான பல பிரச்சனைகளுக்கும் இதுவே நிவாரணம் அளிக்கிறது. இந்த பிரண்டையை வைத்து சுவையான பிரண்டை பொடியை எளிமையாகத் தயாரித்து, உங்கள் எலும்புகளை வலுவாக்கலாம். இந்த அருமையான பொடி சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று சவுத் இந்தியன் ஏ.எஸ்.எம்.ஆர் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

பிரண்டை  
நல்லெண்ணெய்
கருப்பு உளுந்து
கடலைப் பருப்பு
காஞ்ச மிளகாய்
கருவேப்பிலை
வெள்ளை எள்
காஞ்ச பூண்டு
மிளகு
சீரகம்
உப்பு 
பெருங்காயத்தூள்
மாங்காய் தூள்

செய்முறை:

பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, அதில் உள்ள நார்களை முழுவதுமாக நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கிய பிரண்டையை நன்கு வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கருப்பு உளுந்தை சிவக்கும் வரை வறுக்கவும். பிறகு, கடலைப் பருப்பையும் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.

Advertisment
Advertisements

காஞ்ச மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். வெள்ளை எள்ளை நன்கு பொரியும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். காஞ்ச பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறிய பின், மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், மற்றும் புளிப்பிற்காக மாங்காய்த் தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். இந்த கலவையை சிறிது சிறிதாகப் போட்டு நன்கு அரைத்து, ஒரு சேரக் கலந்து வைத்தால், ஆரோக்கியம் நிறைந்த பிரண்டை பொடி தயார். இந்த பிரண்டை பொடியை தினமும் உங்கள் உணவில் சேர்த்து, உங்கள் எலும்புகளுக்கு வலிமை கொடுங்கள்.

bone health Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: