நாம் உடலில் இருக்கு நச்சுகளை வெளியேற்ற பல பானங்களை நாம் குடிப்போம். குறிப்பாக ஆரோக்கியமாக வாழ நாம் அன்றாட வாழ்க்கை முறையை சீராக்க வேண்டும் இந்நிலையில் காலையில் வெறும் வயிற்றில் ஜீரக தண்ணீர், லெமன் தண்ணீர் ஆகியவை குடிப்போம். இதுபோலவே நாம் ஏலக்காய் தண்ணீரும் குடிக்கலாம். இது குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் எடை குறை உதவும்.
செய்முறை :
நீங்கள் இதை செய்வதற்கு முன் ஏலக்காயை நன்றாக நசுக்க வேண்டும். தற்போது அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி. இதை இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடுங்கள். நீங்கள் ஏலக்காய்யை பொடி செய்து சேர்த்துகொள்ளலாம்.
இந்த தண்ணீரை தினமும் குடித்தால் நமது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு சத்துக்களை கரைக்க உதவுகிறது. வயிற்றில் வளரும் தீமையான பேக்டீரியாவை கட்டுபடுத்தி, சீரணமாக உதவுகிறது. மேலும் நல்ல பேக்டீரியாவை உருவாக்குகிறது. இதனால் அஜீரணம், வயிறு உப்புதல் ஏற்படாது.
கொஞ்சம் அதிகமாக நாம் சாப்பிட்டுவிட்டால், அது நமக்கு அஜீரணம், மற்றும் ஜீரண மண்டலத்தில் சிக்கல் ஏற்படும். ஏலக்காய் தண்ணீர் இது நடைபெறாமல் தடுக்கும்.