சப்பாத்தி பெரும்பாலானோருக்கு பிடிக்கும். சப்பாத்திக்கு சிக்கன் கிரேவி, சன்னா, பன்னீர் பட்டர் மசாலா எனப் பல விதமாக செய்து சாப்பிடுவோம். எப்போதும் ஒரே கிரேவி செய்வது போல் இருப்பது என்று நினைத்தால் இந்த முட்டை
பட்டர் மசாலா செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
வேகவைத்த முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க தேவையானவை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக வைத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும். தக்காளி, உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கவும். இப்போது இந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மீண்டும் கடாய் வைத்து, அரைத்த கலவை சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர், முட்டையை இரண்டாக நறுக்கி கலவையுடன் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். இப்போது சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/