கிராம்பு, இதை நாம் பிரியாணி போன்ற உணவி சேர்ப்போம். ஆனால் இதை தனியாக சாப்பிட்டால் அதிக நன்மைகள் இருக்கிறது.
கிராம்பில் பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே. வைட்டமின் சி இருக்கிறது. மேலும் இரும்பு சத்து, ஒமேகா- பேட்டி ஆசிட் இருக்கிறது. இது ஒரு கிருமிநாசினி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படும்.
கிராம்பிலிருந்து எடுக்கும் எண்ணெய் பல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
தினமும் இரவில் 2 கிராமை மென்று தின்றால் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். கணையத்தின் செயல்பாட்டை சீராக்கி, இன்சுலின் சுரப்பதற்கு துணையாக இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இது கல்லீரை நஞ்சை வெளியேற்ற உதவுகிறது. மேலும் கல்லீரலில் படியும் கொழுப்பை குறைத்து கல்லீரல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
செரிமாணத்தை சீராக்கி, வயிற்று போக்கு, வாந்தி, அஜீரணம் ஆகியவற்றை கட்டுபடுத்துகிறது. மலச்சிக்கலுக்கும் உதவியாக இருக்கிறது. இதுபோலவே உடல் எடை குறையும் இது அதிக உதவு செய்கிறது.
இந்நிலையில் கிராம்புக்கு அலர்ஜி இருப்பவர்களை இது சாப்பிடக்கூடாது. ரத்த போக்கு, ரத்தம் உறைதல், கல்லீரல் நோய் இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.