Advertisment

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ்.. சிம்பிள் ரெசிபி இதோ!

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ்.. சிம்பிள் ரெசிபி இதோ!

சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சத்தான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள் உட்கொள்ள வேண்டும். சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் தேங்காய்ப்பால் புலாவ் செய்வது குறித்து பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

தினை அரிசி - 1 கப்

தேங்காய் - 1/2 மூடி (துருவி பால் எடுக்கவும்)

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

தண்ணீர் - 1 கப்

பச்சைப் பட்டாணி - 1/2 கப்

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பட்டை - 2

சோம்பு - 1/4 டீஸ்பூன்

பிரியாணி இலை - 1

ஏலக்காய் - 1

செய்முறை

முதலில் தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பட்டை, சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணியை சேர்த்து வதக்கி, 1 கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். கொதி வந்தபிறகு, குக்கரை மூடி 1 விசில்விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment