இளநீர் குடித்த பிறகு சிலர் தான் வழுக்கையை சாப்பிடுவார்கள். அப்படி வழுக்கையை சாப்பிடவில்லை என்றால் அதை சேகரித்து வைத்து இந்த குழம்பு செய்து பாருங்க.
தேவைய பொருட்கள்
தக்களி – 2
நெய்
எண்ணெய்
பச்சை மிளகாய்- 2
வெங்காயம் – 1
பூண்டு
சாம்பார் பொடி
உப்பு
தேங்காய் தண்ணீர்
கொத்தமல்லி
பொதினா
செய்முறை : முதலில் தக்காளியை வேகவைக்க வேண்டும். தொடர்ந்து அதன் தோலை நீக்கி, சாறு போல் அரைத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய் சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதில் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் இடித்த பூண்டு சேகக்வும். இவை நன்றாக வதங்கியதும். அதில் தக்காளி அரைத்ததி சேர்க்க வேண்டும் தொடர்ந்து அதில சாம்பார் பொடி, உப்பு சேர்கக்வும். நன்றாக வதக்கியதும். அதில் இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் சேர்க்க வேண்டும். தொடர்ந்து அதில் இளநீர் வழுக்கையை சேர்க்க வேண்டும். 8 நிமிடங்கள் நன்றாக கொதித்த பிறகு அதில் கொத்தமல்லி, பொதினா நறுக்கி சேக்க வேண்டும்.