தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது என்பது நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் நாம் தூங்கப்போகும் முன் தேங்காய் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
தேங்காய் சாப்பிடுவதால், மலச்சிக்கல் குறையும். அதிக நார்சத்து இதில் இருப்பதால், அவை மலச்சிக்கலை குணப்படுத்தும்.
இதில் இருக்கும் நல்ல கொழுப்பு சத்து இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வருவதை தடுக்கும்.
இதில் இருக்கும் வைட்டமின்ஸ், மினரல்ஸ் ஆகியவை உடல் எடையை குறைக்க உதவுகிறது. தூங்கபோகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேங்காய் சாப்பிட்டால், பொலிவான சருமம் கிடைக்கும். பருக்கள் ஏற்படாது. மேலும் நன்றாக தூக்கம் வரும். நன்றாக தூக்கம் வர, தூங்கபோகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தேங்காய் சாப்பிட வேண்டும்.