கருவேப்பிலை துவயல் அரைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. இந்த ஈசியான ரெசிபியை தவறாமல் செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை
பூண்டு
பச்சை மிளகாய்
புளி
எண்ணெய்
கடுகு
உளுந்தம் பருப்பு
உப்பு
செய்முறை
கருவேப்பிலையின் இலைகளை நன்றாக கழுவி, ஈரத்தன்மை போகும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து அதை எண்ணெய்யில் வதக்க வேண்டும் . அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து சூடு ஆறியதும், அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தொடர்ந்து அதில் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து கொட்ட வேண்டும்.