நாம் இட்லி, தோசை என்று காலை உணவை செய்தால், கண்டிப்பாக சட்னி அரைக்காமல் இருக்க முடியாது. தேங்காய், தக்காளி சட்னியை மீண்டும் மீண்டும் அரைத்து போர் அடித்திருக்கும். அதனால் கருவேப்பில்லை சட்னி செய்துபாருங்கள். அதுவும் இப்படி செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கருவேப்பில்லை, எண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய், வர மிளகாய், உப்பு, புலி, தேங்காய் துண்டுகள், வேர்கடலை, உளுந்தப் பருப்பு, கடலை பெருப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், அதில் நிலக்கடலை, உளுந்தப் பருப்பு, கடலை பருப்பு, சேர்த்து நன்றாக வறுக்கவும். வர மிளகாய், பச்சை மிளகாய், சிறிய அளவு புலி ஆகியவற்றை வதக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காய் நறுக்கி சேர்க்கவும். தேங்காய் துண்டுகள், கருவேப்பில்லை சேர்க்கவும், கடைசியில் உப்பு சேர்த்து கிளரவும். தற்போது இந்த கலவையை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துகொள்ளவும். இதைத்தொடர்ந்து கடுகு, வர மிளகாய், பூண்டு சேர்ந்த்து தாளித்து கொட்டவும்.