பருவ நிலை மாறும்போது, அதற்கேற்ப உணவு பழகத்திலும் மாற்றத்தை பின்பற்ற வேண்டும். மழை காலத்தில் மற்ற காலத்தை விட எளிதில் நோய் தொற்றிக்கொள்ளும். அந்த சமயத்தில் நாம் அதிகமாக ஆரோகியத்தை பேணி காப்பாற்ற வேண்டும். இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் கூடுதலாக கவனத்தை எடுத்துகொள்ள வேண்டும்.
இதனால் கிளைசிமிக் இண்டக்ஸ் குறைவாக இருக்கும் உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நாம் குறிப்பிட்ட சில உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
நாவல் பழம்
சில ஆய்வுகள் நாவல் பழத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறுகிறது. இயற்கையாகவே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சத்துக்கள் இதில் இருக்கிறது. மேலும் திடீரென்று ரத்த சர்க்கரை அதிகமாகாமல் இருப்பதற்கு இது உதவுகிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் உடலுக்கு நல்லது என்று ஆங்கில பொன்மொழி இருக்கிறது. இதுபோலவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல பலன் தரும் பழம்.
சாத்துக்குடி
இதில் இருக்கும் கிளைசிமிக் குறியீடு மிகவும் குறைவு. 40 முதல் 50தான் என்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். மேலும் இதில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. சாத்துகுடியை அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. ஜீஸ் தயாரித்து குடிக்க கூடாது.