படுத்தவுடன் தூக்கம் வரலையா? இனி புலம்பாதீங்க; ரெகுலர் பாலுக்குப் பதில் இத குடிங்க: டாக்டர் சிவராமன் டிப்ஸ்!

படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார்.

படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
kasakasa

தூக்கமின்மை என்பது எல்லோருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. மன அழுத்தம், நோய் வாய் பாதிப்பு, கணினி, செல்போன்களின் திரையை நீண்ட நேரம் பார்த்தல் போன்ற பிரச்சனைகளால் தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால், நாம் பல மாத்திரைகள், மருந்துகளை உட்கொள்கிறோம். மருந்துகள் உட்கொள்வது ஒரு விதத்தில் பலனை அளித்தாலும் பெரும்பாலானோர் அந்த மருந்து பொருட்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

Advertisment

சிலருக்கு இரவு நேரங்களில் வேலை இருக்கும். அதனால் பகலில் அவர்கள் தூங்குவார்கள். இது நாளடைவில் உடலில் சில மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பகலில் தூங்குவது அவர்களுக்கு பழகிவிடும் நிலையில், இரவில் அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை. இவை முதலில் உடலில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாவிட்டாலும் நாளடைவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

பெரும்பாலான மக்கள் பார்ட்டி,நைட் ரை என இரவு முழுவதும் கண் முழுத்து சுற்றுகின்றனர். பகல் முழுவதும் தூங்குகின்றனர். சிலர் செல்போன்களை பார்த்துக் கொண்டு இரவு முழுவதும் கண் முழுத்து இருக்கின்றனர். அதன்பின்னர் தூக்கம் போதவில்லை என்று புலம்புகின்றனர். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேரம் தூக்கம் வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.

இந்த முறையான தூக்கம் இல்லாத போது மலசிக்கல் ஏற்படும். அதன்பின்னர் பார்வை குறைபாடு ஏற்படும். இப்படி நம் உடம்பில் படிப்படியாக வியாதிகள் தொற்றிக் கொள்ளும். இப்படி முறையற்ற தூக்கத்தை முறைப்படுத்த மருத்துவர் சிவராமன் டிப்ஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது கசகசாவை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நன்கு வடிக்கட்டி அதன் பாலை எடுக்க வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும். 

Advertisment
Advertisements

தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் இதை தினமும் குடித்துவந்தால் உங்களுக்கு முறையான தூக்கம் கிடைக்கும். கசகசாவில் உள்ள சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. இதனால் கசகசா பாலை பருகும் போது ஆழ்ந்த தூக்கம் வரும்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: