முருங்கக்காய் நமது வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. மேலும் இது இந்தியா முழுவதும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. வெறும் முருங்கக்காய் என்று நினைக்கும் நம்மில் பலருக்கு இதில் இருக்கும் நன்மை தெரியவில்லை.
இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இருமல், சளி வராமல் தடுக்கப்படும்.
எலும்பை வலுப்பெற செய்யும். இதனால் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது அவசியமாகிறது. இதில் பிகாம்பிளக்ஸ், ரிபோஃபிலாவின், இருப்பதால், ஜீரணத்திற்கு உதவுகிறது. தேல் மற்றும் பருக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கக்காய் நல்ல தீர்வாக இருக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறக்கும் முன்பும், பின்பும் இது பல்வேறு நன்மைகளை வழங்கிறது. மேலும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. முருங்கக்காய்யை உப்பு சேர்த்து அவித்து. பின்பு தண்ணீரை நீக்கிவிட்டு, நெய் சேர்த்து கருப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்கள் சாப்பிடலாம்.